Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, March 14, 2013

கும்பமேளா அனுபவங்கள்


மஹாஉன்னதமான தருணங்களை இறையருள் என்றும் அளிக்கிறது. அதில் மிகவும் சில தருணங்களை இறையருள் மிக நெருக்கமாக உணரும்படி அமைக்கிறது. அத்தகைய தருணங்கள் பாறையில் செதுக்கிய சிற்பங்களை போல நம்மில் ஆழ்ந்து பதியும். சென்ற வருடம் ஒரு நன்னாளில் கும்பமேளா சென்றுவிட மனம் ஏங்கியது. 

 நீல அம்பு குறி இருக்கும் இடத்தில் எங்கள் குடில் இருந்தது.



எதற்காகவும் ஆசைப்படாமல் இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து செல்லும் பணியாளாக இருந்த எனக்கு இவ்வாறு ஆசை உருவானது தவறுதான். பணியாளனின் வேலையை பாராட்டி கொடுக்குக்கப்படும் ஊதியத்துடன் கொடுக்கும் விடுப்பை போல இறையாற்றல் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது.

55 நாட்கள் நடைபெறும் மஹாகும்பமேளாவில் ஒரு மாதம் தங்கும் திட்டத்துடன் பயணமானேன்.கிருஷ்ண ஏகாதசி, மெளனி அமாவாசை, வஸந்தபஞ்சமி, ரத சப்தமி, பெளர்ணமி என முக்கியமான நீராடவேண்டிய நாட்களை மனதில் வைத்து கும்பமேளா சென்றோம்.

எங்களுக்கு அமைந்த குடிலும் அதன் சூழலும் உனதமாக இருந்தது. ஏகாந்த சூழலில் இடையறாது பஜனை கோஷங்கள் நிறைந்த பக்திமிகு சூழல் அமைந்தது. மெளனி அமாவாசை (தை அமாவாசை) தினத்தில் புனித நீராட பல மாணவர்கள் தமிழகத்திலிருந்தும் பிற ஊர்களிலிருந்தும் வந்திருந்தனர். 


மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. 6 கோடிக்கு மேல் அன்று மட்டும் நீராடி சென்றார்கள் என அரசு கணக்கீடு சொல்லுகிறது. கலாச்சாரம் துவங்கி எப்படி வாழ்க்கையை பக்தி மயமாக செலுத்துவது வரை பல விஷயங்களை இப்பயணம் எனக்கும் மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்தது.

என்னுடன் அதிக நாட்கள் தங்கி இருக்க விருப்பம் கொண்டு பலர் வந்திருந்தனர். அதிக எதிர்பார்ப்புடன் என்னுடன் இருக்க வந்திருந்தாலும், அவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி அடைந்ததா என தெரியவில்லை. முக்கியமாக எனது வெளிநாட்டு மாணவர் வருவதற்கு முன்பே, “ சுவாமி உங்களுடன் இருபது நாள் தங்கி இருக்க வருகிறேன். இந்த நாட்களில் என்ன பாடங்கள் கற்றுத்தருவீர்கள்? தினமும் எத்தனை மணிக்கு பாடம் நடக்கும்?” என கேட்டார். நான் சிரித்துக்கொண்டே வாருங்கள் பின்பு திட்டமிடலாம் என சொன்னேன்.

அவர் வந்ததிலிருந்து பயிற்சி எப்பொழுது ஆரம்பிக்கும் என்பதில் மிகவும் நோக்கமாக இருந்தார். நானோ காலை எழுந்து கங்கையில் குளித்து ப்ரார்த்தனை செய்துவிட்டு, அனைவருக்கும் சமைக்க துவங்கிவிடுவேன். உணவு சாப்பிட்டவுடன் உரையாடலும், ஓய்வுமாக இருக்கும். பிறகு மதியம் மீண்டும் குளியல், ப்ரார்த்தனை சமையல் பிறகு தூக்கம்.இப்படியாக நாட்கள் சென்றுகொண்டிருக்க அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இதை இவர்கள் ஏன் கும்பமேளாவில் வந்து செய்ய வேண்டும், இவர்கள் ஊரிலேயே செய்யலாமே என கேள்வி எழ ஆரம்பித்தது.அவரின் குழப்பமான முகத்தை நான் புன்னகையுடன் கடந்தேன்.

கும்பமேளாவில் இருந்து கிளம்பும் நாளில் அவர் பின்வருமாறு கூறினார், “ஸ்வாமி நான் பயிற்சிகளில் கற்பதை விட நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எந்த சூழலிலும்,எந்த காலநிலையிலும் எப்படி உள்நிலை சலனம் இல்லாமல் இருப்பது என்பதையும், உள்நிலைஆனந்தம் கெடாமல் அந்த ஆனந்தத்தை எப்படி அனைவருக்கும் அளிப்பது என்பதை கற்றேன்.” என கூறி சென்றார்.

அதற்காகத்தானே கும்பமேளா வந்தோம்?

(அனுபவம் தொடரும்) 

8 கருத்துக்கள்:

திவாண்ணா said...

ஆஹா!

அகநாழிகை said...

அருமை. காத்திருக்கிறோம். உங்கள் கையால் சமைத்து பரிமாறியதை உண்கிற வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி.

Paleo God said...

அடுத்த மகா கும்ப மேளாவிலாவது உங்களுடன் 30 நாள் தங்க ஆசை. :)

Unknown said...

awmiji as you told before you leave for kumbamela that i will get all experionces even icould not come,now i started receiving them.

Unknown said...

swamiji as you said that i will get all experiences even i could not come for kumbamela now i started receiving them.

nirmal said...

காத்திருக்கிறோம்

geethasmbsvm6 said...

அருமையான பகிர்வு. கும்பமேளா அனுபவத் தொடருக்குக் காத்திருக்கிறேன்.

topv said...

அடுத்த மகா கும்ப மேளாவிலாவது உங்களுடன் 30 நாள் தங்க ஆசை. :)
m.murugan-9543744474