Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 6, 2011

ராமாயணம், மஹாபாரதம் - உண்மையா? - பகுதி 2


ஆழ்ந்த அமைதி கொண்ட அடந்த வனப்பகுதி அது. தூரத்தில் சில பறவைகளின் ஒலியும் அருகே சில வண்டுகளின் ரீங்காரம் தவிர வேறு எதுவமற்ற ஆழ் அமைதி கொண்ட வனம். ஆழ்ந்த மெளத்தில் ஆழ்ந்திருந்து மெளனத்தின் ரூபத்தை காணும் நோக்கத்தில் ரிஷிகள் நடந்து வந்து கொண்டிருந்தனர். தாங்கள் எதிர்பார்த்த இடம் கிடைத்த திருப்தியில் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்பொழுது....

வனத்தின் ஆழ்ந்த அமைதியை கலைத்தவண்ணம் எங்கிருந்தோ ஓர் அம்பு புறப்பட்டு வந்தது. அவர்களின் கால்களின் அருகில் குத்தி நின்றது. அம்பு வந்த திசையை பார்த்தனர். யாரும் இல்லை.

அமைதி...

மீண்டும் அடுத்த அடி எடுத்த வைக்க முற்பட்டனர். மீண்டும் ஓர் அம்பு அவர்களின் கால்களுக்கு பக்கம் வந்து நின்றது. ரிஷிகள் தங்களுக்குள் சலனமற்று அதே இடத்தில் நின்றனர். சில நொடிகளில் மரங்களின் கிளைகள் சலசலக்க வனத்தின் அமைதியை கலைக்கும் வண்ணம் பேரும் இரைச்சலுடன் ஒரு ஒருவம் இவர்கள் முன் குதித்து நின்றது.

உடல் முழுவதும் கரும்பச்சை வண்ணம் பூசப்பட்ட உருவம். இடையில் சிறிய தோலால் ஆன ஆடை. கற்களை கூர்மையாக்கிய கத்திகள் இரு கைகளில் தாங்கிய வண்ணம் ரிஷிகளின் கூட்டத்தை வழி மறித்தான்

அவன்.

கையில் உள்ள கல் கத்தியால் தன் செம்பட்டை முடியை கோதிய படி கறைபடிந்த பற்களை காட்டி சிரித்தான். ரிஷிகளிடம் எந்த சலனமும் இல்லை.

“ம்.......உங்களிடம் விலைமதிக்க முடியாத அனைத்தையும் எடுத்து என் முன் வைத்துவிட்டு ஓடிவிடுங்கள். இல்லை என்றால் ஒருவர் கூட உயிருடன் செல்ல முடியாது” என்றான் அவன்.

“எங்கள் உயிரை பற்றி கவலையில்லை. உனக்கு யாரை கொல்ல வேண்டுமோ சொல் அவர்கள் உன் முன் வருகிறோம். நீ எதிர்பார்க்கும் விலைமதிப்பு கொண்டவை எங்களிடம் இல்லை. ஆனால் எல்லோரிடத்திலும் இல்லாத விலைமதிப்பற்ற பொருள் எங்களிடம் உண்டு. அதை வேண்டுமானால் தருகிறோம்” என்றனர் ரிஷிகள்.

உயிருக்கு பயந்தவர்களை பார்த்த இவனுக்கு உயிரை தர முன்வருபவர்களை பார்த்ததும் சந்தேகம் எழுந்தது. இவர்களிடம் உயிர்பயத்தால் பொருள் வாங்க முடியாது என உணர்ந்து,“ஓ அப்படியானால் அந்த பொருளை உடனடியாக தாருங்கள்” என்றான் அவன்.

“அதற்கு முன் அப்பொருளை நீ சரியாக கையாள முடியுமா என நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி கையாள தெரிந்தால் தான் இப்பொருளை நீ பெற்றுக்கொள்ள முடியும். அதனால் நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சி செய்”

சில நிமிட மெளனத்திற்கு பிறகு மெல்ல தலைய
சைத்தான் அவன்.

“இந்த வனத்தை கடந்து செல்லும் மனிதர்களிடம் நீ கொள்ளையடிக்கிறாயே அதனால் கிடைக்கும் பொருட்களையும் உணவுகளையும் உன் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்கிறாய். உன் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் நீ கொடுக்கும் பொருட்களை பெற்றுக்கொள்கிறார்கள். இச்செயலால் உனக்கு ஏற்படும் தீவினைகளை உன் குடும்பத்தார் அது போலவே பகிர்ந்து கொள்வார்களா?” எனக் கேட்டனர் ரிஷிகள்.

“இதில் என்ன சந்தேகம். எனக்காகத் தானே அவர்கள் வாழ்கிறார்கள்” என்றான் இவன்.

“அதை நீயாக சொல்லாதே..! நாங்கள் கேட்ட கேள்வியை உன் குடும்பத்தாரிடம் கெட்டு பிறகு சொல். அதுவரை நாங்கள் இங்கேயே நிற்கிறோம். உன் அம்பு இருக்கும் இந்த இடத்தைவிட்டு விலக மாட்டோம்.” என்றார்கள் ரிஷிபுருஷர்கள்.

ரிஷிகளின் வார்த்தையில் உண்மை தெரியவே தன் இருக்கும் வனப்பகுதிக்கு விரைந்தான் அவன். தன் குடும்பத்தாரிடம் ஒவ்வொருவராக கேட்டான்.

“நான் அளிக்கும் உணவையும், பொருளையும் பகிர்ந்து கொள்ளும் நீங்கள். அதை சேகரிப்பதால் ஏற்படும் தீவினைகளையும் பகிர்ந்து கொள்வீர்களா?”

எல்லோரும் கூறிய ஒரே போல, “நீ உணவையும் பொருளையும் கொடுக்க வேண்டியது என்பது உன் கடமை. அதனால் ஏற்படும் வினைகளை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்றனர்.

அதுவரை தன் வாழ்க்கையில் கண்டிராத விரக்தியும் சூன்யத்தையும் உணர்ந்தான் அவன்.

நேராக வந்து ரிஷிகள் முன் தலை குனிந்து நின்றான். “ஐயா, நீங்கள் சொன்னது போல கேட்டேன். நான் நினைத்து போல இல்லை” என்றவனின் வார்த்தையில் மரியாதை மிகுந்தும் மிரட்டல் குறைந்தும் இருந்தது.

“இப்பொழுது தான் நாங்கள் எதிர்பார்த்த சூழலில் நீ இருக்கிறாய். வா எங்களிடம் இருக்கும் விலை மதிப்பற்ற ஒன்றை தருகிறோம்” என கூறினார்கள் ரிஷிகள்.

அவன் காதின் அருகே சென்று “மரா” என மூன்று முறை உச்சரித்து. “இவ்வாக்கியத்தை தொடர்ந்து உச்சரி. உனக்குள் இருக்கும் குழப்பத்திற்கு விடிவு கிடைக்கும். மேலும் அற்புதங்களை காண்பாய்” என்றனர்.

எந்த இடத்தில் தன் காதுகளில் மரா என சப்தம் கேட்டதோ அதே இடத்தில் அமர்ந்து கண்களை மூடி தொடர்ந்து உச்சரிக்க துவங்கினான்.

நேரம் நாளிலும், நாள் மாதத்திலும் புகுந்து வருடங்களாக கரைந்தன. அவனை சுற்றி கரையான் புற்று கட்டத்து வங்கி முற்றிலும் அவனை மறைத்தது.

ஒரு நாள் அவனுக்குள் ஞானச்சுடர் தோன்றியது. அச்சுடரின் ஒளியில் கண்டுணர்ந்ததை தன்னுள் சேமித்தான். புற்றிலிருந்து வெளிப்பட்டான்.

புற்றிலிருந்து வெளிவந்ததால் அவனை வால்மீகி என்றனர். புற்றுவழி வந்தவன் என அர்த்தம்.

கண்ணில் கண்டவர்களை கொள்ளை கொண்டவனை. புற்றின் உள்ளே ஒருவன் கொள்ளை கொண்டான். கள்வனாய் இருந்தவன் கடவுளை கண்டவன் என மாற்றமடைந்தான்.

மரா மரா என்ற நிலையில் ராம ராம என மாற்றம் அடைந்தான். ஆனால் இன்று நாம் ராம ராம என ராமனை மறக்க முயகிறோம்.

ராமாயணத்தை இயற்றியவர் என வடமொழியில் கூறப்படுபவர் வால்மீகி. தென்மொழியில் இராமாயணத்தை கம்பர் இயற்றினார்.

தவத்தாலும் ஞானத்தாலும் வந்தது பொய் கதையாக இருக்குமா?
அதனால் தான் சொல்லுகிறேன் இதிகாசங்கள் உண்மையே.

ஆனாலும் சில முரண்கள் அதில் இருக்கவே செய்கிறது.

அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(வினைத் தொடரும்)

11 கருத்துக்கள்:

துளசி கோபால் said...

தொடர்கின்றேன் ஸ்வாமிஜி.

Parameswaran said...

it is good

Parameswaran said...

it is good

guna said...

thankyou next part wait for you

ஸ்ரீனிவாச ஐயங்கார் said...
This comment has been removed by a blog administrator.
சிவமுருகன் said...

வணக்கம் சுவாமிஜி!

Umashankar (உமாசங்கர்) said...

:-)

KARIKALVALAVAN said...

வணக்கம் சுவாமிஜி
ராமாயணத்தையும் ராமரையும் உள்வாங்க ஆவலாய் காத்திருக்கிறோம்

கிரி said...

சுவாமி எழுத்து நடை நன்றாக உள்ளது. அடுத்த பகுதியை எதிர்பார்த்துள்ளேன்

D. Chandramouli said...

As someone said, if God does not exist, it would be better that we creat Him for our own good. Similarly, assuming for a moment that Ramayana and Mahabharata were not true stories, it shouldn't really matter. If the stories were only imaginary, so be it. It would still not dilute the importance of the MESSAGE and the LESSONS that are culled out of such classics.

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார் - உண்மை உண்மை - வால்மீகி கதை உண்மை - மரா மரா என்ற நிலையில் ராம ராம என மாற்றம் அடைந்தான். ஆனால் இன்று நாம் ராம ராம என ராமனை மறக்க முயகிறோம்.
இதுவும் உண்மை. தொடர்க = படிப்போம் - நல்வாழ்த்துகள் ஓம்கார் - நட்புடன் சீனா