Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, January 11, 2010

காசி சுவாசி - பகுதி 6

'நீர் இன்றி அமையாது உலகு' என்பது முதுமொழி. சராசரி மனிதன் இதை மொழி பெயர்த்தால் தண்ணீர் இல்லாமல் உலகம் இயங்காது என கூறுவார்கள். இதே வாசகத்தை விழிப்புணர்வு கொண்டவர்கள் வேறு மாதிரி அனுகுவார்கள். இக்கருத்தை கடவுளை நோக்கி கூறுவதாக கொண்டால்? எவ்வளவு உண்ணதமான வாசகமாக மாறிவிடுகிறது பார்த்தீர்களா?

பஞ்சபூதத்தில் நீர் என்ற வஸ்துவுக்கு மட்டும் மிகவும் சூட்சுமமான தன்மை உண்டு. பஞ்சபூத தோற்றத்தில் முதலில் ஆகாயம், காற்று, நெருப்பு, மண் இவை தோன்றி முடிவாகவும் இறுதியாகவும் தோன்றியது நீர்.

நீர் என்ற தன்மையால் உலக உருவாக்கங்களும் உயிர்களும் நிகழ்ந்ததாக வேத சாஸ்திரம் கூறுகிறது. அதனாலேயே வருணன் வேதத்தின் உறுப்பாக வணங்கப்படுகிறான். கடைசியாக உருவான பூதம் என்பதாலும், நாம் உருவாக ஒத்துழைத்த முதல் பூதம் என்பதாலும் நீர் உயிர்த் தன்மையுடன் மிகவும் நெருங்கியது.

நீர் பற்றி மனிதன் அறிந்தது மிகவும் குறைவான அளவுதான். வேதகால வாழ்க்கையில் தாவரங்களில் உயிர் இருந்து நம்முடன் உறவாட தயாராக இருக்கிறது என்று கூறுகிறேன் அல்லவா? அதுபோல நீர் தன்னிடம் இருக்கும் இயற்கை சக்தியால் நாம் கூறுவதையெல்லாம் ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ற வினையை நிகழ்த்துகிறது.

தண்ணீரின் முன் மனிதன் கூறும் வாசகங்கள் தண்ணீரில் பதிவாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒரு குவளையில் நீர் எடுத்து உங்கள் முன் வைத்துக்கொண்டு அந்த நீரை வாழ்த்தினீர்கள் என்றால் அந்த நீர் மிகவும் மலர்ச்சி அடைகிறது. கோபமாக வசை வார்த்தைகளா திட்டினீர்கள் என்றால் அதனல் நீர் மாசுபடுகிறது....!

நீர் மூலக்கூறுகள் மனிதனின் செய்லகளை தன்னகத்தே பதிவாக ஏற்படுத்துகிறது. நீர் முன் நாம் சப்தமாக பேசவேண்டும் என்பது எல்லாம் இல்லை. மனதில் நினைத்தாலே அது நீரில் பதிவாகிவிடும்...!

சரி.. இனி நீங்கள் அர்ச்சனையை ஆரம்பிக்கலாம். எப்படி ஸ்வாமி இதை கூறுகிறீகள். இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா? உங்களுக்கு அறிவு இருக்கிறதா ?:) இதற்கு மேல் வாசகங்களை கூறும் முன் கீழ்கண்ட சுட்டியை பார்த்து விடுவது உத்தமம்.

படிகமாக்குதல் (crystal experiment) என்ற விஞ்ஞான வினை மூலம் நிரூபணம் செய்திருக்கிறார்கள். ஜப்பானை சார்ந்த மாசரு இமோட்டோ என்ற விஞ்ஞானி தண்ணீரில் எண்ண அலைகள், ஒலி அலைகள் பதிகிறது என கூறுகிறார். சுட்டி

உண்மையில் அவர் மாசறு இமோட்டோ என்று தானே கூப்பிட வேண்டும். :)!


அவர் செய்த விஞ்ஞான ஆய்வை எளிமையாக கூறுகிறேன். ஒரு நீரின் முன் சில ஓலிகளை எழுப்பி, அந்த நீரை உறைபனியாக மாற்றினால், அதன் மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட வடிவம் பெறுகிறது. இதே அந்த நீரின் முன் வேறு ஓலிகள் எழுப்பி, அதே போல உறை பனியாக்கினால் அவை அதே வடிவில் இருப்பதில்லை, மாறாக வேறு புதிய வடிவ மூலக்கூறாக காட்சி அளிக்கிறது.

நீர் இருக்கும் பாத்திரத்தை பார்த்து நட்புடன் பேசி அதை உறை படிகங்களாக்கி நுண்ணோக்கியில் பார்த்தால் அழகிய நகையை போன்ற நட்சத்திர வடிவம் பெறுகிறது. இதே அந்த நீரை பார்த்து மோசமாக வசைபாடினால் அதன் வடிவம் சிதைந்து காணப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானத்தையே மிகவும் வேறு திசைக்கு செலுத்தும் வல்லமை வாய்ந்தது. தண்ணீர் கூறும் செய்திகள் (Messages from Water) என்ற தனது புத்தகத்தில் இமோட்டோ பல ஆய்வுகளை செய்ததை பற்றி குறிப்பிடுகிறார். மேலும் நீரின் அருகில் இசை கேட்டால் நீர் மூலக்கூறுகள் மிக அழகாக இருக்கிறது என ஆய்வில் தெரியவருகிறது.
நம்புங்கள் இது கம்மல் அல்ல..!
இசை ஒலிக்க செய்து படிகம் ஆக்கிய நீரின் அமைப்பு


எதிர் மறை ஒலிகளை எழுப்பி உருவாக்கிய நீரின் படிகம்

இனி வரும் காலத்தில் தகவல்களை பதிவு செய்யும் ஊடகமாக நீர் இருக்கும் என தெரிகிறது. ஒரு லிட்டர் நீரில் எத்தனை ஜீபி தகவல் சேமிக்கலாம் என ஆய்வுகள் நடக்கிறது..! நீருக்கும் ஆற்றல் பதிவுகள் நடைபெறுவதையும் கூர்ந்து அவதானித்தால் நீங்களும் இந்த ஆய்வை செயல்படுத்தலாம்.

ஸ்வாமி மரம் சீடி படிக்கிது என்றார். இப்போ தண்ணீரில் தகவல் சேமிக்கலாம் என்கிறார் என நீங்கள் நினைக்கலாம் :) ஸ்வாமி விக்கிபிடியாவில் இருக்கும் விஷயத்தை வைச்சு கதைவிடறீங்களேனு கேட்கும் பொதுஜனங்களுக்கு...இதை நான் நேரடியாக ஆய்வு செய்துள்ளேன். அதன் விபரம் இனி வரும் பகுதிகளில் விவரிக்கிறேன்.

அதற்கு முன் நாம் இங்கே தெரிந்து கொள்ளவேண்டியது......நீர் என்பது மனதில் இருக்கும் எண்ண அலைகள் மற்றும் ஒலி அலைகளை சேமிக்கும் ஒரு ஊடகமாக இருக்கிறது. கங்கை என்ற நீரின் முன் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சில நேர்மறை எண்ணங்கள் மற்றும் ஒலியை எழுப்புகிறார்களே அவையெல்லாம் கங்கையில் பதியும் அல்லவா? அதனால் கங்கை நதியில் படிகம் எப்படி பட்ட வடிவத்தில் இருக்கும் என நினைத்து பாருங்கள். கங்கை நதியே மகிழ்ச்சியில் திளைக்கும்.

முனிவர் சாபம் கொடுக்கும் பொழுது கமண்டல நீரை எடுத்து தெளித்து சாபம் விடுவார் - புராண கதைகள் கொண்ட சினிமாவில் காட்டுவார்கள் நினைவிருக்கிறதா? கமண்டல நீர் இல்லாமல் சாபம் விட்டால் பலிக்காதா? நம் முன்னோர்கள் மாசறு இமோட்டோவை மிஞ்சுபவர்கள்.

நீரில் எண்ண அலைகள் பதியட்டும் ஆனால் அது எப்படி நம்முள் வினை செய்யும்? மனிதனின் வாழ்க்கையை நீரால் மாற்ற முடியுமா? நீரின் அதிசயங்களை மேலும் தெரிந்துகொள்ளுவோம். அதற்கு முன் ஒரு கோப்பை நீரில் தளர்வாக்கும் எண்ணங்களை பதிய செய்து... அந்த நீரைஅருந்தி உங்களை தளர்வாக்கிக் கொள்ளுங்கள்..!

[...சுவாசிப்பேன்]

27 கருத்துக்கள்:

அறிவில்லாதவன் said...

அசத்தல் சுவாமிஜி.

நான் தான் முதல் பின்னூட்டமா .. ஐஐ...

அறிவில்லாதவன் said...

'நீர்' சொல்வது உண்மை தானா ?

காற்று , ஆகாயம் , நெருப்பு , நிலம் இதற்கும் நம்மை உணரும் சக்தி இருக்கும் போல. அஷ்ட மா சக்திகள் கூட அறிவியல் தானோ ?

ஒண்ணுமே புரியல உலகத்தில ,
என்னோமோ நடக்குது
மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல உலகத்தில..

Paleo God said...

தவறாயிருப்பின் மன்னிக்க.. நீர் எல்லாவற்றையும் க்ரஹிக்கும் என்றால், குடிப்பதும், குளிப்பதும், பிற வற்றிற்கும் உபயோகப்படுத்திக்கொண்டு இருப்பது என்பது என்ன வகையில் பார்க்கப்படுகிறது? என்னதான் புண்ணிய நதி என்றாலும் கால் வைத்துத்தானே ஆகவேண்டும். தயவுசெய்து விளக்கவும். நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

மாசறு பொன்னே
வலம்புரி முத்தே
காசறு விதையே
கரும்பே!தேனே!

:)

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

நம்மைத் தளர்வாக்க - நீரைத் தளர்வாக்கி அருந்த வேண்டுமா - ம்ம்ம் - காலம் பிடிக்கும் புரிந்து கொள்ள

நல்வாழ்த்துகள் ஓம்கார்

Sitrodai said...

குரு வணக்கம்,

அடுத்த பகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

- சிற்றோடை

Siva Sottallu said...

அதிசயங்களை மேலும் தெரிந்துகொள்ள காத்திருக்கின்றேன் சுவாமி. பதிவிற்கு மிக்க நன்றி.

// பஞ்சபூத தோற்றத்தில் முதலில் ஆகாயம், காற்று, நெருப்பு, மண் இவை தோன்றி முடிவாகவும் இறுதியாகவும் தோன்றியது நீர். //

நிலம் தான் இறுதியாக தொற்றியது என்று ஒரு இடத்தில் படித்த ஞாபகம் சுவாமி.
மென்மையானது முதல் கடினமானது (Finest to the Gross) ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்று படித்தேன், நீங்கள் கூறியது முரன்படுகின்றதே சுவாமி.

கடற்கரையில் நின்று கொண்டு சூரிய உதயத்தை பார்க்கும் போது இந்த பஞ்சபூத தோற்றத்தை ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பதை என்னால் உணரமுடிகின்றது.

Sivakumar said...

தாங்கள் இப்பகுதியில் கூறியுள்ளதை நேரடியாகவே
கண்டுள்னேளன்.


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கங்கை புனிதமானது என்று நாம்
கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் செய்தி ஊடகங்களில்
கங்கை மாசடைந்துள்ளது என்று கூவிக் கொண்டே
இருக்கின்றன. இதை ராபர்ட் காந்தி காலத்திலேயே ஆரம்பித்து
விட்டார். அச் செய்தியை வெளிநாடுகளில் சுகமாக வாழ்ந்து
புண்ணியம் வேண்டி காசிக்கு வந்தவர்களும் கதை கட்டி
விட்டனர்.
இப்போதேல்லாம் ஓஸோனைஸ்டு மினரல் வாட்டர் தான்....
அதிலும் நம் எண்ணங்களை செலுத்த முடியுமா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வால் பையன்,

நீங்க ஒன்னுவிட்ட வால்பையன் என நினைக்கிறேன் :)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பாலா பட்டறை,

நீர் அனைத்துக்கும் பயன்படும் ஒரு விஷயம். எல்லாவற்றிற்கும் பயன்படுத்தலாம் தவறில்லை.

நீங்கள் தற்சமயம் மிதித்துக் கொண்டிருப்பது நம் தாய் நாட்டின் மண்ணைத்தானே? தாய் நாடு என் கால் படக்கூடாது என நினைத்தால் வேறு நாட்டிற்கா செல்லுகிறோம்?

அனைத்தும் பஞ்ச பூத வடிவங்களே..
பஞ்சபூதங்கள் தான் நாம், நம்மில் பஞ்சபூதமும் உண்டு என உணர்ந்தால் இந்த குழப்பம் வராது.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

//மாசறு பொன்னே
வலம்புரி முத்தே
காசறு விதையே
கரும்பே!தேனே!//

ரொம்பா கொஞ்சாதீங்க எனக்கு கூச்சமா இருக்கு... :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சீனா ஐயா,

திரு சிற்றோடை,

திரு சிவக்குமார்,

உங்கள் வருகைக்கு நன்றி.

திரு சிவா,

//
கடற்கரையில் நின்று கொண்டு சூரிய உதயத்தை பார்க்கும் போது இந்த பஞ்சபூத தோற்றத்தை ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பதை என்னால் உணரமுடிகின்றது.//

இதை கொஞ்சம் விளக்க முடியுமா?

Paleo God said...

நீர் அனைத்துக்கும் பயன்படும் ஒரு விஷயம். எல்லாவற்றிற்கும் பயன்படுத்தலாம் தவறில்லை.

மிக்க நன்றி.

நீங்கள் தற்சமயம் மிதித்துக் கொண்டிருப்பது நம் தாய் நாட்டின் மண்ணைத்தானே? தாய் நாடு என் கால் படக்கூடாது என நினைத்தால் வேறு நாட்டிற்கா செல்லுகிறோம்?

திருப்பதி, திருவண்ணாமலை போன்ற மலைகளில் கால் வைக்க மனமில்லாது தலையால் ஏறி சென்றவர்க்ளை பற்றி கேள்விபட்டதால் எழுந்த கேள்வி அது.

அனைத்தும் பஞ்ச பூத வடிவங்களே..
பஞ்சபூதங்கள் தான் நாம், நம்மில் பஞ்சபூதமும் உண்டு என உணர்ந்தால் இந்த குழப்பம் வராது.

மீண்டும் நன்றி.

yrskbalu said...

இதை நான் நேரடியாக ஆய்வு செய்துள்ளேன். அதன் விபரம் இனி வரும் பகுதிகளில் விவரிக்கிறேன்.

yes. otherwise your messeges will be

gone within some months.

Anonymous said...

சுவாமி, இந்த விஷயத்தை நான் "What the Bleep do we know" என்ற ஆங்கில டாகுமெண்டரி ஒன்றில் பார்த்தேன். மிகவும் அற்புதமான விஷயம் இது. இதை பற்றி மேலும் அறிய ஆவலுடன்உள்ளேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,
உங்கள் வருகைக்கு நன்றி.

திரு தினேஷ் பாபு,

//சுவாமி, இந்த விஷயத்தை நான் "What the Bleep do we know" என்ற ஆங்கில டாகுமெண்டரி ஒன்றில் பார்த்தேன். மிகவும் அற்புதமான விஷயம் இது.//

எனக்கு பிடித்த இரண்டு சினிமா என்ற பதிவில் இந்த திரைப்படத்தை முன்பு குறிப்பிட்டேன் ஞாபகம் இருக்கிறதா?

உங்களின் சுட்டிகாட்டலுக்கு நன்றி.

Mahesh said...

ஸ்னோஃப்ளேக்ஸ் எனப்படும் பனித்தூள்களின் வடிவமும் நீங்கள் படத்தில் காண்பித்துள்ளது போலவே இருக்கும். அப்படியானால் பனி விழும் பிரதேசங்களில் எல்லாம் பாஸிடிவ் திங்கிங் அதிகமாக இருக்கிறது என்று கொள்ளலாமா?

Siva Sottallu said...

//
கடற்கரையில் நின்று கொண்டு சூரிய உதயத்தை பார்க்கும் போது இந்த பஞ்சபூத தோற்றத்தை ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பதை என்னால் உணரமுடிகின்றது.//

இதை கொஞ்சம் விளக்க முடியுமா?//

நான் நிற்கும் நிலத்தை தொடும் நீரும், நீரின் மேல் உதிக்கும் சூரியனும் (நெருப்பு) , சூரியனுக்கும் ஆகாயத்திற்கும் இடையில் காற்று மண்டலத்தையும் நான் குறிப்பிட்டான் ஸ்வாமி. இதை தான் மென்மையானது முதல் கடினமானது (Finest to the Gross) என்ற ரீதியில் நான் உணந்ததாக கூறினேன்.

Siva Sottallu said...

ஸ்வாமி, நான் கூறிய விளக்கம் பின் வரிசையில் கூறியுள்ளேன்.

ரங்கன் said...

//ஸ்னோஃப்ளேக்ஸ் எனப்படும் பனித்தூள்களின் வடிவமும் நீங்கள் படத்தில் காண்பித்துள்ளது போலவே இருக்கும். அப்படியானால் பனி விழும் பிரதேசங்களில் எல்லாம் பாஸிடிவ் திங்கிங் அதிகமாக இருக்கிறது என்று கொள்ளலாமா?//

திரு மகேஷ் - ஜனத்தொகை குறைவாக இருப்பதினால் (நான் குறிப்பிடுவது துருவங்களின் அருகில் இருக்கும் நாடுகள்) பாசிடிவ் திங்கிங் அதிகமோ இல்லையோ நெகடிவ் திங்கிங் குறைவாக இருக்ககூடும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

//ஸ்னோஃப்ளேக்ஸ் எனப்படும் பனித்தூள்களின் வடிவமும் நீங்கள் படத்தில் காண்பித்துள்ளது போலவே இருக்கும். அப்படியானால் பனி விழும் பிரதேசங்களில் எல்லாம் பாஸிடிவ் திங்கிங் அதிகமாக இருக்கிறது என்று கொள்ளலாமா?//


பனி எங்கிருந்து விழுகிறது? ஸ்னோஃப்ளேக்ஸ் என்பது காற்று மண்டலத்திலிருந்து மழை போல மொழியக்கூடியது.

மழைநீர் எப்படி தூய்மையான நீர் என கூறுகிறோமோ ( வாகனம் நிறைந்த பகுதியில் அல்ல.!). அதுபோல இந்த பனிபடிமங்களும் தூய்மையானது. மேலும் வளிமண்டலத்தின் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இயற்கையாக நடக்கும் இந்த நிகழ்வைத்தான் இமோட்டோ செயற்கையாக உறைபனி படிமமாக்கி நிகழ்த்துக்கிறார்.

அனைத்தும் இயற்கையாக வானத்திலேயே இருக்கிறது :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//
நான் நிற்கும் நிலத்தை தொடும் நீரும், நீரின் மேல் உதிக்கும் சூரியனும் (நெருப்பு) , சூரியனுக்கும் ஆகாயத்திற்கும் இடையில் காற்று மண்டலத்தையும் நான் குறிப்பிட்டான் ஸ்வாமி. இதை தான் மென்மையானது முதல் கடினமானது (Finest to the Gross) என்ற ரீதியில் நான் உணந்ததாக கூறினேன்.//

இது ஏனோ என் அறிவு ஏற்க மறுக்கிறது.

ஆகாயத்தில் பூமி தோன்றிய பொழுது நெருப்பாக இருந்தது. பல ஆயிரம் வருடங்களில் குளிர்ந்து வளிமண்டலம் உருவாகியது. அதற்கு பிறகு நெருப்பு உறைபனியாகி நீர்மம் உருவானது...பிறகே மண்.

இன்னும் அண்டார்ட்டிக்கா பகுதிகள் எப்படி இருக்கிறது?

இது அறிவியலில் கூறும் வரிசை. இது ஓரளவு சரி என்பதே நான் பதிவில் கூறி இருக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

//திரு மகேஷ் - ஜனத்தொகை குறைவாக இருப்பதினால் (நான் குறிப்பிடுவது துருவங்களின் அருகில் இருக்கும் நாடுகள்) பாசிடிவ் திங்கிங் அதிகமோ இல்லையோ நெகடிவ் திங்கிங் குறைவாக இருக்ககூடும்.//

பரவயில்லையே...இந்த லிங்க்கும் நல்லா இருக்கே :)

Siva Sottallu said...

ஸ்வாமி, நான் விவாதத்திர்காகவோ அல்லது நான் சொல்வது சரி என்பதற்காகவோ இதை எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துகொள்கின்றேன்.

// ஆகாயத்தில் பூமி தோன்றிய பொழுது நெருப்பாக இருந்தது. பல ஆயிரம் வருடங்களில் குளிர்ந்து வளிமண்டலம் உருவாகியது. //

பூமி எப்படி குளிர்ந்து?

சில மாதங்களுக்கு முன்பு நான் "History Channel" இல் "How the earth was made" என்ற ஒரு நிகழ்ச்சி பார்க்கநேர்ந்தது. பூமி நெருப்பு கோளமாக இருந்தபோதும் இதில் நீரில் இருக்கும் மினரல்ஸ் வேறு வடிவில் இருந்ததாகும் மேலும் மினரல்கள் அடங்கிய வான்கர்க்கள் மழைபோல் விழுந்து அந்த கற்கள் நெருப்பில் உருகி அதிலிருந்து வாயுவாக கிளம்பி மழை நீராக பல மில்லியன் வருடங்கள் பொழிந்ததாகவும் பார்த்து தெரிந்துகொண்டேன் ஸ்வாமி.

மேலும் இந்த வலைதளத்தில் விவரமாகவும் கொடுத்துள்ளனர் ஸ்வாமி.

How long has there been water on Earth?
http://curious.astro.cornell.edu/question.php?number=619

sarul said...

மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிற்பதா ?
உயிரியலின் ஆரம்பப்பாடமே மாற்றப்படுகிறதா?
அறிவிலல் அடிப்படையில் எந்த text book வேண்டுமென்றாலும் படித்துப்பாருங்கள் ஸ்வாமி கூறுவது உண்மை.
ஆரம்பத்தில் வளிமண்டலத்தில் ஒட்சிசன் வாயுவே இருக்கவில்லை ,அது பின்னர் எப்படி உருவானது என்பதற்கு மிகத்தெளிவான விளக்கம் விஞ்ஞானத்தில் உள்ளது.அதன்பின் தான் நீர் எல்லாம் .முதல் உயிர் ஒட்சிசனைச் சுவாசிக்கவில்லை பின் எதைச்சுவாசித்தது என்பதை உங்களின் ஆய்விற்கே விட்டுவிடுகிறேன்(+2 படிக்கும் மாணவனைக் கேட்டுப்பாருங்கள்)

K DhanaseKar said...

நீர் வணக்கம்,

தங்களுடைய சில முந்தைய பதிவுகளில் ( வேதகால வாழ்க்கை பகுதி 5 & "இசையும் இறைவனும் - 2") என்னுடைய கேள்விகள் இன்னும் பதில் தெரியாமலேயே நிற்கின்றன. தினமும் அதை தேடித்தேடி அந்த குகிகீயே தேய்ந்து விடுமோ என தோன்றுகிறது.

மீண்டும் பதிலை எதிர்பார்கிறேன்.

Anonymous said...

சில உண்மைகளை சம்மந்தப்பட்டவர் கூறினால் உலகம் கேட்காது.அடுத்தவர் கூறும்போது அதை அப்பட்டமாக நம்பும்.அந்தவகையில் வைதீக,ஆலய வழிபாட்டில் கலசங்களில் நீர் ஊற்றி மந்திரம் ஜபிப்பதற்கான விளக்கத்தை அனைவரும் ஏற்க்கும் வகையில் கூறியிருப்பது பாராட்டுக்குறியது.நன்றி