Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 8, 2009

ஜோதிடம் விஞ்ஞானமா? மூடநம்பிக்கையா?

பல காலமாக இருக்கும் விவாதம் இது. ஒவ்வொரு காலத்திலும் ஜோதிடம் நிரூபித்தால் மட்டுமே மக்களால் நம்பிக்கை பெறும். அவ்வாறு நம்பிக்கை பெற்றாலும் அது விஞ்ஞானம் என்றோ மூடநம்பிக்கை என்றோ யாரும் முடிவுக்கு வருவதில்லை. ”ஜோதிஷம் ப்ரக்திக்‌ஷ நிரூபணம்” என்கிறார்கள் சான்றோர்கள்.


ஜோதிடத்தை மூடநம்பிக்கை ஆக்குவது எளிது. தங்களுக்கு ஏற்படும் ஆசையின் அடிப்படியில் அல்லது பிரச்சனையின் அடிப்படையில் ஜோதிடரை அனுகும் மக்கள் ஜோதிடத்தை மூடநம்பிக்கைக்கு எடுத்து செல்லும் முக்கிய காரணியாக இருக்கிறார்கள்.

திருமணம் தள்ளிப்போகிறது என ஜோதிடரிடத்தில் கேட்டவுடன், அவர் உண்மையான ஜோதிடராக இருந்து ஜாதகத்தை கணித்து இன்னும் இரண்டு வருடம் ஆகும் என்றால் இந்த பதிலை ஏற்றுக்கொள்ள எவ்வளவு பேர் தயாராக இருப்பார்கள்? அதே நேரத்தில் திருமணஞ்சேரிக்கு சென்று மாலை வாங்கி வந்தால் 90 நாளில் திருமணம் நடக்கும் என்றவுடன் தன்னுடைய சுய தேவைக்காக கண்களை மூடிகொண்டு செல்லுகிறார்கள்.

அதற்கு பிறகு கல்யாணம் நடக்காது போனால் ஜோதிடர்(ன்)(ம்) போலி சரியில்லை. தெரியாமல் தான் கேட்கிறேன்? திருமணஞ்சேரிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் திருமணம் நடக்க வேண்டும் என்பது சட்டமா? திருக்கடையூர் சென்றால் அனைவருக்கும் இறப்பு இல்லாத பெருவாழ்வு வருமா?

என்ன ஸ்வாமி நாத்திகம் பேசுகிறீர்கள் என கேட்ட தோன்றுகிறதா? ஏதோ ஒருவர் சொன்னார் என்பதற்காக இயந்திரமாக கோவிலில் நுழைந்து தனது சுயலாபத்திற்காக பூஜை செய்பவனுக்கு எந்த தெய்வம் வரம் கொடுக்கும்? திருமணஞ்சேரி செல்லுவதாக இருந்தால் சிவபெருமானாக செல்லுங்கள் மலைமகள் மனைவியாவாள், திருக்கடையூர் செல்லுவதாக இருந்தால் மார்க்கண்டேயனாக செல்லுங்கள். அதைவிடுத்து சுயநலத்தோடு சென்றால் அங்கே அருள் பாலிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

இவ்வாறு ஜோதிடத்தை மூட நம்பிக்கை ஆக்குபவர்களாவது சகித்துக்கொள்ளலாம். சனி பெயர்ச்சி அன்று இவர்கள் செய்யும் கோமாளித்தனங்களுக்கு எல்லை இல்லை. சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாறு கோவிலில் கூட்டம் பற்றி தனியே சொல்ல வேண்டியதில்லை. அரசன் முதல் ஆண்டி வரை அங்கே தெருவில் படுத்து காலையில் சனிப்பெயர்ச்சியை கொண்டாடுவார்கள்.

அங்கே இருக்கும் தீர்த்த குளத்தில் தங்களின் துணிமணியை கழற்றி எறிந்து சனியிடமிருந்து விடுதலை பெருவார்கள். சென்ற சனிப்பெயர்ச்சிக்கு மட்டும் தீர்த்த குளத்திலிருந்து 10 டன் துணிகளை மாநகராட்சி அகற்றி இருக்கிறது. எந்த ஆகமத்தில் கோவில் தீர்த்த குளத்தில் உடைகளை கழற்றி எறிய சொன்னது? பக்தர்களின் நலனுக்காக தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் “உண்டியல்” என பலகை வைக்கும் கோவில் நிர்வாகம் இதை தடுக்க ஏதாவது பல-கை வைத்தார்களா?

வீட்டில் ஏழரை சனி பிடித்தால் அதை திருநள்ளாற்றில் தொலைப்பான் ஏன்? வீட்டிலேயே தொலைக்க கூடாதா? தீர்த்தகுளத்தில் இருக்கும் ஈரத்துணிகள் மூலம் எப்படியெல்லாம் நோய்வரும் என்று யாராவது சிந்தித்தது உண்டா?

உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலில் நவக்கிரத சன்னிதியில் சனியின் விக்கிரகம் இருக்கிறதே அதில் சனியின் ஆற்றல் இல்லையா? அல்லது சனி அங்கே மட்டும் தான் இருக்கிறாரா?

உண்மைதான் சனி அங்கே தான் இருக்கிறார். ஈரதுணியும் பாக்டீரியாவும் சூழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு எங்கே இருக்க முடியும்?

நிதர்சனத்தில் மக்களுக்கு அங்கே சென்றால்தான் சனி பிடிக்கும்.


திருநள்ளாரு நள மகாராஜவுக்கு சனி விமோசனம் கிடைத்தது. நள மஹாராஜா சாதாரணமானவர் கிடையாது. MR.Perfect..! தான் செய்யும் எந்த செயலிலும் நேர்த்தியுடன் இருப்பார். அவரிடம் தவறு என்பதே கிடையாது. சனி நேர்த்தி இல்லாத, சத்தியமற்ற , தர்மம் தவறியவர்களை தான் பிடிப்பானாம். அப்படி இருக்க சனி அவரை பிடிக்க முயற்சி செய்தான். முடியவில்லை. காரணம் அவர் அவ்வளவு கச்சிதமானவர். நள பாகம் என கேட்டிருப்பீர்கள், சமையலில் கூட நளன் கச்சிதமாக சமைப்பான் என்பதை அதில் இருக்கும் அர்த்தம். ஒரு நாள் கால்களை கழுவும் பொழுது ஒரு இடத்தில் நீர் படாமல் கால்களை கழுவினான் நளன். இவ்வளவு நாள் மிஸ்டர்.கச்சிதமாக இருந்தவர் செய்த தவறை சாதகமாக்கி சனி அவரின் கால்களை பிடித்தான் என்றது தலவரலாறு.

இப்பொழுது நளனை ஒப்பிட்டு சொல்லுங்கள், ஈரத்துணியை கழற்றி வீசும் பக்தர்களை சனி பிடிப்பாரா மாட்டாரா? இதனால் தான் ஜோதிடத்தை மூட நம்பிக்கை என கூறுவது எளிது என்கிறேன்.

அப்படியானால் ஜோதிடம் விஞ்ஞானமா?

விஞ்ஞானம் என்பது மனித அறிவுக்கு எட்டிய ஒரு சித்தாந்தம். ஒருவர் கண்டறிந்ததை ஒரு குழு ஏற்றுக்கொண்டால் அவர் விஞ்ஞானி. அந்த குழுவினர்கள் விஞ்ஞானிகளின் சபை. மனித அறிவுக்கு ஏற்ப சான்றுகள் கொடுத்தால் போதுமானது.

150 வருடத்திற்கு முன் டார்வின் சொன்ன கருத்தை மதவாதிகள் எதிர்த்தார்கள். கடவுள் மனிதனை படைத்தார் என்ற மதவாதிகளுக்கு, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்க முடியவில்லை. பிறகு விஞ்ஞானிகளும் மக்களும் ஏற்றார்கள். இந்த நூற்றாண்டில் திரும்பவும் டார்வின் கொள்கை முரண்பாடானது என்கிறார்கள். குரங்கிலிருந்து பரிணாமம் ஆகி மனிதன் வந்தான், மனிதன் பரிணாமம் அடைந்து ஏன் வேறு ஒன்றாக மாறவில்லை என எதிர் விஞ்ஞானம் பேசி டார்வினை கேள்விக்குறியாக்கிவிட்டார்கள்.

விஞ்ஞானிகளின் கூத்தை நினைக்கும் பொழுது ஒரு வேடிக்கை ஞாபகம் வருகிறது..

அமெரிக்காவில் விஞ்ஞானிகளின் மாநாட்டுக்கு பல நாட்டு விஞ்ஞானிகள் வந்திருந்தார்கள். அதில் ஒரு அமெரிக்கர்,ரஷ்யர் மற்றும் இந்திய விஞ்ஞானி குறிப்பிடத்தக்கவர்கள்.

நாங்கள் தான் தொலைத்தொடர்பில் உலகின் முன்னோடிகள் என ஒவ்வொரு வரும் தர்க்கம் செய்தார்கள். இதை நிரூபிக்க சொன்னார்கள் பிறர். அமெரிகக் விஞ்ஞானி உடனே அங்கே இருந்த நிலத்தை தோண்டினார். பத்தடி ஆழத்தில் சில டெலிபோன் கம்பங்கள் இருந்தது. ரஷ்ய மற்றும் இந்திய விஞ்ஞானியிடம் கூறினார், ”ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும், ஐம்பது வருடத்திற்கு முன்னறே நாங்கள் டெலிபோன் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார்.

ரஷ்யர் இருவரையும் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றார், அவரும் நிலத்தை தோண்டினார். பதினைந்து அடி ஆழத்தில் சில தந்தி கம்பங்கள் கிடைத்தது. அமெரிக்கர் சொன்னது போலவே ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும் எழுபத்து ஐந்து வருடத்திற்கு முன்பே நாங்கள் தந்தி வழிசேவையை பயன்படுத்தி இருக்கிறோம் நாங்கள் தான் தொலைத்தொடர்பில் முன்னோடி என்றார்.

நம்ம ஆள் சும்மா இருப்பாரா? இருவரையும் இந்தியா அழைத்து வந்து நிலத்தை தோண்ட ஆரம்பித்தார். பத்து , இருபது என ஆழம் கூடியதே தவிர விஷயம் ஒன்றும் கிடைக்கவில்லை.

ரஷ்யரும், அமெரிக்கரும் என்னப்பா உன் முடிவு என கேட்க, இந்தியர் சொன்னார், ஒரு அடிக்கு ஐந்து வருடம்
என்றாலும் கூட நூறு வருஷத்திற்கு முன்னாடியே நாங்க வயர்லெஸ் டெக்னாலஜி யூஸ்பண்ணிருக்கோம்...! என்றார்.

விஞ்ஞானமும் அதன் நிரூபணமும் இப்படித்தான் இருக்கிறது.

உண்மையில் ஜோதிடம் விஞ்ஞானமா அல்லது மூட நம்பிக்கையா என்றால் இரண்டும் இல்லை என்றே சொல்லுவேன்.

உள் ஒளி உணர்ந்த இருவர்கள் தங்களுக்குள் முரண்படமாட்டார்கள். காரணம் அவர்கள் உணர்ந்த சத்தியம் ஒன்று. ஜோதிடத்தை மெய்ஞான நோக்கோடு கண்டால் அதில் இருக்கும் உண்மை புலப்படும்.

ஆதலால் சொல்லுகிறேன் ஜோதிடம் ஒரு மெய்ஞானம்.

டிஸ்கி : பரிசல் மற்றும் சஞ்சய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜோதிட உற்சவத்தில் எனது பேச்சின் உரை வடிவம் இது. எழுத தூண்டிய அவர்களுக்கு எனது நன்றிகள்.

56 கருத்துக்கள்:

எம்.எம்.அப்துல்லா said...

//உள் ஒளி உணர்ந்த இருவர்கள் தங்களுக்குள் முரண்படமாட்டார்கள். //

நான் உங்களோடு எப்ப முரண்படாம இருக்கப் போறேன்னு தெரியல :))

yrskbalu said...

jothidam will not give mukthi. it is the one of

mathamatical sastra. man can use this for his betterment to life. thats all . i can tell use as first aid box .

yrskbalu said...

dear omkarji,

1.how you maintain or living in sakshi bhavana in your daily life ? pl share with me.

2. who is your guru ? what is your guru prampara?

புருனோ Bruno said...

//உண்மைதான் சனி அங்கே தான் இருக்கிறார். ஈரதுணியும் பாக்டீரியாவும் சூழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு எங்கே இருக்க முடியும்?//

:) :)

வால்பையன் said...

கடவுள் எங்கும் நிறைந்தவன்னு சொல்றிங்க!

கோயில்ல இருக்குற பூசாரிங்க எல்லாம் சண்டைக்கு வரப்போறாங்க!

Mahesh said...

ஸ்வாமி... ஜோதிடம் விஞ்ஞானமா மெய்ஞானமா என்பது எனக்குப் புரிய இன்னும் சில காலமாகலாம் என்று நினைக்கிறேன்...

ஆனால் நீங்கள் சொல்லும் திருமணஞ்சேரி, திருக்கடையூர், திருநள்ளார் விஷயங்களுடன் எனக்கு 100% ஒப்புதல். 1994-ல் ஒரே ஒரு முறை திருநள்ளார் போய் வந்த பிறகு நான் The Hindu -வில் Letters to the editor-க்கு எழுதியதற்கு கிடைத்த பரிசு... போதும் போதும் என்று ஆகி விட்டது.

நம் ஆட்களுக்கு பகுத்தறிவு என்பதன் அர்த்தம் கூட தெரியவில்லை என்றே நினைக்கிறேன்.இங்கே நீங்கள் எழுதியுள்ளது "பகுத்து அறிந்து" எழுதப்பட்டது என்பது கூட புரியாது :(

Mahesh said...

ஸ்வாமி... உங்களின் முந்தைய பதிவில் ஒரு கேள்வி வைத்திருந்தேனே??

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அப்துல்லா அண்ணே,

////உள் ஒளி உணர்ந்த இருவர்கள் தங்களுக்குள் முரண்படமாட்டார்கள். //

நான் உங்களோடு எப்ப முரண்படாம இருக்கப் போறேன்னு தெரியல :))//

வீட்டுக்குள்ளே லைட்டை போடுங்க. அப்புறம் எல்லாம் தானே நடக்கும் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,

// jothidam will not give mukthi. it is the one of

mathamatical sastra. man can use this for his betterment to life. thats all . i can tell use as first aid box .
///


உங்களின் பின்னூட்டத்தில் ஒரு விஷயம் புரிகிறது. உங்களுக்கு முக்தி என்பதை பற்றியும், ஜோதிடம் என்பதை பற்றியும் ஆழமான தெளிவு இல்லை என்பதே.

ஜோதிடம் முக்தி சாதனம் இல்லை என்றால் அதை ஏன் வேதத்தின் அங்கமாக வைக்க வேண்டும்?

கோவில்கள் முக்தியின் கருவிகளாக நம்புகிறீர்களா? அப்படி எனில் நவக்கிரகங்களும், ராசி மண்டல அமைப்பும் கோவிலில் ஏன் இருக்கிறது?

பாஸ்கராச்சாரியாரின் உண்மையான வரலாறு தெரியுமா? முடிந்தால் தெரிந்து கொள்ளுங்கள்.

dear omkarji,

1.how you maintain or living in sakshi bhavana in your daily life ? pl share with me.

எங்கள் யோகபயிற்சியின் விளம்பரம் பார்த்து ஒரு வாலிபர் குறுஞ்செய்தி அனுப்பினார்..”Hi. how to meditate ?"

ஒரு குருவின் அரவணைப்பில் இருந்து பயில வேண்டியதை தற்காலத்தில் இருக்கும் அனைவரும் எளிமையாக கேட்டுவிடுகிறார்கள். உங்களுக்கான குருவிற்கு காத்திருங்கள் அவர் உங்களுக்கு கூறுவார்.


2. who is your guru ? what is your guru prampara?
//
என்னை பற்றி சொல்லவே எனக்கு அருகதை இல்லை. அப்படி இருக்க எனது குருவை பற்றி கூற முடியுமா?

என் குருவின் ரகசியத்தை அறிய கீழ்கண்ட சுட்டியில் இருக்கும் எனது கட்டுரையை படியுங்கள்.

http://vediceye.blogspot.com/2009/03/blog-post_17.html

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புரூனோ,

உங்களை சென்னையில் சந்தித்து மகிழ்ச்சி.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வால்பையன்,

உங்கள் வருகைக்கு நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

//வீட்டுக்குள்ளே லைட்டை போடுங்க. அப்புறம் எல்லாம் தானே நடக்கும் :)

//

நான் சுட்சை போட்டுவிட்டேன்.லைட்டுதான் இன்னும் எரிய மாட்டேங்குது. அது என்னைய லைட்டா எடுத்துக்குச்சோ என்னவோ??

:))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

திருநள்ளாறு சென்று வந்தபின் தான் அவ்வாறு எழுதினீர்களா? சனி விட்டபாடில்லை :)


முந்தய பதிவில் நீங்கள் கேட்ட கேள்விக்கான விடையை முன்பே பதிவாக போட்டிருக்கிறேன்.

http://vediceye.blogspot.com/2008/12/blog-post.html

எனது அகோரிப் பதிவுக்கு பிறகுதான் படிக்கிறீர்கள் என நினைக்கிறேன். நம்புங்கள் முதலில் சில கட்டுரைகளை நன்றாகவே எழுதி இருக்கிறேன் :)


உங்கள் வருகைக்கு நன்றி.

Mahesh said...

நன்றி ஸ்வாமி... படித்து விட்டேன்... இன்னும் பல கேள்விகள் கிளைத்துள்ளன.... பின்னொரு சமயம் கேட்கிறேன்... அதற்குள் நானே விடையைத் தேட முயற்சிக்கிறேன்...

தமிழ் அமுதன் said...

ஜோதிடம் விஞ்ஞானம் இல்லை என்று சொன்னால்?

ஒருவேளை அதுதான் மூட நம்பிக்கையோ ?

அப்பா டக்கர் அமீர்பர் said...

எல்லாம் சரி...சந்தீரேயனை கணித்திர்கள்..ok...இம்முறை யார் ஆட்சிக்கு வருவார்கள்....எவ்வளவு seat என்று சரியாக கணித்து சொல்லுங்கள்....சவால்.....சவால்...

NO said...

அன்பான சுவாமிஜி ஓம்கார் அவர்களே,

நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது, இருந்தலும் படித்து பார்த்தேன் நீங்கள் ஜோதிடம் பற்றி எழுதியதை!

That which are asserted without evidence, can be dismissed without evidence - Christopher Hitchens

சாட்சி என்ன இந்த ஜோதிடம் என்ற கண்கட்டி வித்தைக்கு என்றல் சுத்தமாக இல்லை. அதை பற்றி எதாவது நீங்கள் எழுதுவீர்கள் என்று பார்த்தால் நீங்களும் எதையோ வெட்டி முழக்கி எழுதி தள்ளிஇருகிறீர்கள்!

Darwinian evolution and natural selection பற்றி அரை குறையாக ஏதோ படித்து சரடு விட்டு இருகிறீர்கள். அது போதாது என்று எதோ இந்தியா ரஷ்ய விஞ்ஞானி கதை வேறு.

ஒரு நண்பன் என்னிடம் சொன்னான், லெமுரியா கண்டம் பற்றி நான் கொஞ்சம் கேள்வி பட்டேன் , இப்போது தெரிகிறதா நம் பெருமையை என்னவென்று என்று. அதற்கு நான் சொன்னேன், ஐயா plate tectonics அல்லது geology பற்றி உன்னக்கு தெரியுமா, அல்லது, atleast archeology பற்றி எதாவது உமக்கு புரியுமா என்று.
உடனே அவர், அட போங்க சார் கவிஞர் கண்ணதாசன் நெறைய இதை பற்றி எழுதிஇருக்கிறார் அதை விட என்ன வேண்டும்! அதற்கு நான் சொன்னேன், ஐயா கண்ணதாசன் கவிதைகளை மட்டுமே படியுங்கள் எனென்றால் மற்றவைபற்றி அதுவும் geography and science பற்றி சொல்ல அவருக்கு முழு தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று. உடனே மிக கோபம் கொண்டார் அவர், ஏதோ சொல்லி நகர்ந்தார்!

The point dear Swamiji is that, please stick only to your territory of religion. Do not ever venture into such pseudo scientific talks. You will be blackened beyond beleif!

ஜோதிடம் மற்றும் ஏனய கசடுகள் எப்படி பொய்யானவை என்று தெரிய வேண்டுமானால், படியுங்கள் ரிச்சர்ட் டாவ்கின்ஸ் எழுதிய unweaving the rainbow என்ற புத்தகத்தை அல்லது கேளுங்கள் James Randi இன் பேச்சுகளை!

If you do not know, James Randi is a great professional magicians and he is prepared to offer a million dollars to any one that demonstrates things like ESP, mind reading etc etc under controlled conditions. For your information all of them that attempted to win this bounty failed and stood exposed!

என்னும் நீங்கள் ஜோதிடத்தை நம்பி அது ஒரு கலை, எலை என்று ரீல் உடுவீர்கலேன்றால், அது மட்டுமிலாமல் evolution, Darwin என கொட்டுவீர்களானால் என்னைபோன்ற பலருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்!

Please stop this crap and first try to find out why your God devised such a complicated and misinterpretable system called astrolgy instead of loading everthing into a hard disk and giving it to people like you!

திட்டுவது போல் இருந்தால் மன்னிக்கவும். இம்முறை மட்டும்.
ஆனால் அடுத்த முறை இதேபோல் இராது. கடுமை கூடும்!

Again, please stick to your territory and do not talk about science!

நன்றி
NO

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.அப்பா டக்கர் அமீர்பர் ,

அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.NO,

முதலில் நாகரீகமாக பேசுவது எப்படி என ஏதாவது வெளிநாட்டு அறிஞரின் புத்தகம் வாங்கி படிக்கவும்.

அல்லது மறைமுகமாக பேசும் உங்கள் மேதாவித்தனத்தை நிறுத்தவும்.

உங்களுக்கான ஒரு முக்கிய குறிப்பு :

ஜோதிடம் பற்றி எழுதுகிறேன் தயவு செய்து வந்து படியுங்கள் என நான் யாரையும் அழைக்கவில்லை. இது என் கருத்துக்களை பதியும் இடம். நல்லவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. முகமுடி அணிந்த முட்டாள்களுக்கு அல்ல.

கல்வெட்டு said...

//குரங்கிலிருந்து பரிணாமம் ஆகி மனிதன் வந்தான், மனிதன் பரிணாமம் அடைந்து ஏன் வேறு ஒன்றாக மாறவில்லை என எதிர் விஞ்ஞானம் பேசி டார்வினை கேள்விக்குறியாக்கிவிட்டார்கள்.//

டார்வினை இன்றுவரை யாரும் கேள்விக்குறியாகவில்லை. நீங்கள் தெரிந்ததை மட்டும் (ஜோசிய வியசங்கள்) பேசுவது நல்லது. தயவு செய்து அறிவியல் பேச வேண்டாம்.

அறிவியல் என்பது, "இதுதான் இறுதி" என்று எதையும் அறுதியிட்டுச் சொல்லாமல் "இன்று- இது -இப்படி" என்ற அளவில் சில விளக்கங்களைக் கொடுக்கும். நாளையே அது மற்ற ஒரு விளக்கத்தால் வேறு பாதைக்குச் செல்லும். அறிவியல் ஒரு தொடர் பயணம்.

"இதுதான் இறுதி இறைவேதம்" அல்லது "எல்லாம் இப்படித்தான், இதைத்தாண்டி ஏதும் இல்லை" என்று எதையும் இறுதியாக வரையறை செய்யாமல், அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிவிட்டு நிற்கும்.

டார்வின் கொள்கைகளைத் தாண்டி புதிய அறிவியல் விளக்கங்கள் இதுவரை இல்லை. அப்படி ஒன்று வந்தால், புளூட்டோவை மறுவரையறை செய்ததுபோல டார்வின் கொள்கையை புறந்தள்ள அறிவியல் உலகம் தயங்காது.

இஸ்டம்போல் விளக்கங்கள் கொடுக்க அறிவியல் ஜோசியமோ மதமோ அல்ல சாமி.

*****

.....மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. இப்படியான கருதுகோல், பரிணாமத்தைப் பற்றிய தவறானபுரிதல்களில் முதன்மையானது....

குரங்கு மனிதன் கதையை எளிமையாகப் படிக்க பார்க்க கையேடு..

மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்
http://kaiyedu.blogspot.com/2008/11/blog-post_13.html

டார்வின்-200, பரிணாமக்கொள்கை-150
http://kaiyedu.blogspot.com/2009/01/200-150.html

moni a.k.a. jessica said...
This comment has been removed by the author.
தருமி said...

மனிதன் பரிணாமம் அடைந்து ஏன் வேறு ஒன்றாக மாறவில்லை என எதிர் விஞ்ஞானம் பேசி டார்வினை கேள்விக்குறியாக்கிவிட்டார்கள்.//

இல்லையே ...

கல்வெட்டு said...

ஓம்கார்,
நீங்கள் அறிவியல் பேச வேண்டாம் என்று சொல்வது நான் உங்கள் மீது திணிக்கும் வன்முறை அல்ல. தயவுசெய்து அப்படி எடுத்துக் கொள்ளவேண்டாம்.

நீஙகள் என்ன பேசவேண்டும் என்று நான் தீர்மானிக்க முயலவில்லை.

ஏற்கனவே பல ஜோசிய சாமிகள் இதையே பேசி (ஜோசியம் விஞ்ஞானமே ) அறிவியலை கேலி செய்வதால் சொல்ல நேர்ந்தது அவ்வளவே.

மேலும் பேசுவது உங்கள் விருப்பம்.

NO said...

அன்பான சுவாமிஜி,

நீங்கள் என்னை படியுங்கள் என்று சொல்லவில்லைதான். உண்மை. ஒப்புக்கொள்கிறேன். இது நீங்கள் மட்டும், மற்றும் உங்கள் கருத்துக்கு ஒத்த கருத்துடையவர் மட்டுமே வந்து போகம் இடந்தான், ஆமோதிக்கிறேன்.

ஆனாலும், நீங்கள் எழுதுவது ப்லோக் என்ற பலர் பார்க்கக்கூடிய இடம்.
நான் படிப்பேன், கருத்துகளும் கூறுவேன். வேண்டம் என்றால், போடாதீர்கள். முடிந்தால் என் access ஐ நிறுத்துங்கள். அதுவும் உங்கள் ஜனநாயக உரிமை.

அதை விட்டுவிட்டு, என்னை வசை பாடாதீர்கள்.

I know nothing of the science of astrology and I consider it to be a science, if it is a science, of doubtfull value, to be severely left alone by those who have any faith in providence - Mahatma Gandhi

மகாத்மா கண்டிப்பாக ஒரு வெளி நட்டு ஆள் இல்லை!

நானும் அநாகரீகமாக எதுவும் சொன்னதாக தெரியவில்லை!

I repeat what I wrote for somebody else - When Prophets are questioned, the first casualty is the question itself and next the one is the one that asks the questions!

நன்றி திரு சுவாமிஜி அவர்களே

அமர பாரதி said...

//இது என் கருத்துக்களை பதியும் இடம். நல்லவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. முகமுடி அணிந்த முட்டாள்களுக்கு அல்ல.// நல்ல கருத்து.

ஆஹா, ஒஹோ, என்னமா எழுதறீங்க. உங்களோட பார்வையில் நான் நல்லவன் மற்றும் அறிவாளி ஆகி விட்டேன் என்றே நினைக்கிறேன்.

அமர பாரதி said...

ஸ்வாமி,

தங்களுடைய "ஆயுர்வேதமும் - ஜோதிடமும்" பதிவில் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுருந்தேன். முடிந்தால் பதில் சொல்லவும்.

மும்மலம் என்பது "ஆணவம்", "கண்மம்", "மாயை" என்ற மூன்று வகையாக அழுக்குகளைக் குறிக்கிறது என்றே படித்திருக்கிறேன். நீங்கள் சிறு நீர், வியர்வை மற்றும் மலம் என்று குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் சொன்ன இந்த விளக்கத்துக்கு ஏதாவது ஆதாரம் கொடுக்க முடியுமா?

மும்மலம் என்பதை மூன்று மலம் (கழிவு) என்று பிரித்து விட்டீர்களா? நீங்கள் சரியான ஆதாரத்துடன் விளக்கமளிக்க வேண்டுகிறேன்.

நிகழ்காலத்தில்... said...

//விஞ்ஞானமும் அதன் நிரூபணமும் இப்படித்தான் இருக்கிறது.

உண்மையில் ஜோதிடம் விஞ்ஞானமா அல்லது மூட நம்பிக்கையா என்றால் இரண்டும் இல்லை என்றே சொல்லுவேன்.//

வேறு என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள்!!!

\\உள் ஒளி உணர்ந்த இருவர்கள் தங்களுக்குள் முரண்படமாட்டார்கள். காரணம் அவர்கள் உணர்ந்த சத்தியம் ஒன்று.\\

இது உண்மைதான்...

ரவி said...

முட்டாள்த்தனம்

Anonymous said...

@NO - A Lot of Scientists say no to God and in fact go at length to preach that there is no God. Swami Omkar has merely took the Science that he knows for illustrating Astrology and God. In fact, To me He sounds more like Supporting Science than Opposing it. Granted he may not be a PhD Scientist, do u think only those qualified scientists should speak science then? It is upto you to weigh the credibility of the author and just take it or leave it, there is no point in questioning the author's credibility, because he is as much worth as he is, that's it.

And if it is just science alone that you are interested in, I do not see a reason why you should hang around Spiritual blogs and wait for some juicy material so that you can step forward with an attack. ( I called it an attack since you used the word "Crap"). By the way, I am as much interested in science as I am in spirituality!

In my opinion there are 2 extreme people - 1. Scientists who not only just back up science but also attack Spirituality and Religion.
2. Theists - who fundamentally believe in their form of worshipping God.
I don't see the difference between the 2. They are both fundamentalists to their own ideas, if you know what I mean.
But there is a 3rd category of people - Spiritualist - Who like to know and understand about everything (which includes science) subjectively ( and not objectively). They are open minded and do not judge anything/anyone. Not everyone can be like that. I am not like that, I try to be. It is extremely difficult to be Neutral.
I am not trying to argue which one is better, I am merely saying that each one has his own preferences and it cannot be argued with. So, in fact there is no point to argue here.

When you get a chance, please do read my humble opinion on God - http://maduraiveeran.wordpress.com/2008/11/19/an-opinion-on-god/

Anonymous said...

சுவாமிஜி, ஒருவரின் குரு எப்போ எங்கே வருவார் என ஜோதிடம் மூலம் ஆராய முடியுமா? நீளமாக ஆங்கிலத்தில் எழுதியதற்கு மன்னிக்கவும். எனக்கு தோன்றியதை எழுதினேன்!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஓம்கார்,

டார்வின் கொள்கை பற்றி ஏதோ கூறிச் சென்று விட்டீர்கள். அதை உங்கள் பார்வையில் விரிவாக விளக்கும்படி தயவுசெய்யது கேட்டுக்கொள்கிறேன்.

மதுவதனன் மௌ.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு, கல்வெட்டு, திரு.தருமி,

சித்திரை திருவிழா வாழ்த்துக்கள்.

எந்த ஒரு விஞ்ஞான கொள்கையும் தர்க்கத்துக்கு உரியது. ஐஸ்டின் தனது கொள்கையை(BigBang- இன்ன பிற) நிரூபித்தாலும் அதில் மாற்றுக்கொள்கை கொண்ட கூட்டம் இருக்கவே செய்யும்.

இணையத்தில் டார்வினிசம் பற்றி படிப்பவரானால் அதன் எதிர் கொள்கையையும் தெரிந்தவராகவே இருந்தாகவேண்டும்.

மனிதன் குரங்கிலிருந்து (ஆப்ஸ்) வரவில்லை என்னும் சிந்தாந்தமும்,பரிணாம கொள்கையும் எனக்கு நன்று தெரியும். அறிவியல் ஆய்வுகளையும், தற்சமயம் நடக்கும் உலக ஆராய்ச்சிகளையும் கூர்ந்துகவனிப்பவன் நான்.

எனக்கு பிடித்த இணையம் ஒன்று TED.com

(இதில் இருக்கும் ஒவ்வொருவரும் விமர்சனத்திற்கும் பாராட்டுக்கும் அப்பாற்பட்டவர்கள்.)

பொதுமக்களுக்கான சபையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அளவில் மட்டுமே பேச முடியும். அவர்களிடம் சென்று E=mc2 என்றால் அனைவரும் எழுந்து ஓடுவார்கள்.

திருமூலர் சொன்ன திருமந்திர பாடல் ஒன்றை கூறவிரும்புகிறேன்.

விஞ்ஞானர் கேவலத் தார்அது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசஞ் சார்ந்துளேர்
எஞ்ஞானார் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே

-திருமந்திரம் பாடல் 494.

என் முப்பாட்டன் திருமூலன் சொன்னதை எனது குலசொத்தாக கருதுகிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அறிவே தெய்வம்,
உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதுரைவீரன்,

உணர்ச்சிவசப்படுவது எதற்கு? சிலர் இப்படித்தான். அவர்களை ஒதுக்கித்தள்ளுவதே சிறந்தது. அவர்களை போல் நீண்ட பின்னூட்டம் இட்டால் அவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இருக்காது.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதுவதனன்,

டார்வின் கொள்கையை விஞ்ஞானம் படித்தவர்கள் மட்டுமே ஆராயவேண்டுமாம். டார்வின் தனது வாழ்க்கையில் விஞ்ஞானியாக நடந்துகொண்டார என அவரின் சுயசரிதை படித்தால் தெரியும்.

இணையத்தில் டார்வினிசம் இருக்கிறது. படியுங்கள் நிறைய புரியும்.

Anonymous said...

வணக்கம்...

சமீபத்தில் உங்களின் பதிவுகளை பார்க்க நேர்ந்தது....

பங்கு வர்த்தகம் குறித்த உங்களின் ஒரு பதிவினைபார்க்க நேர்ந்தது.கடந்த மூன்று ஆண்டுகளாய் பங்குச்சந்தை குறித்து எனது பார்வைகளை தினசரி பதிவாய் எழுதி வருகிறேன்.http://panguvaniham.wordpress.com

ஆங்கில வலைபதிவுகளில் சோதிடம் மூலமாய் பங்குவர்த்தகம் குறித்து பல பதிவுகள் இருந்தாலும் தாய்த்தமிழில் நீங்கள்தான் முதல் பதிவராக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

இது குறித்து மேலும் விவரமாகவோ அல்லது தனியானதொரு பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

இது நம்ம ஆளு said...

நல்ல பதிவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

கையேடு said...

வணக்கம் திரு.ஓம்கார்,

//இணையத்தில் டார்வினிசம் பற்றி படிப்பவரானால் அதன் எதிர் கொள்கையையும் தெரிந்தவராகவே இருந்தாகவேண்டும்.//

டார்வினிசத்தின் எதிர்கொள்கை என்று எதைக் குறிப்பிடுகீறீர்கள். டார்வின் குறித்து இணையத்தில் வாசித்தாலும் எதிர்கொள்கை குறித்து அதிகம் வாசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. இதனை குறித்து விளக்க முடியுமா.

//எனக்கு பிடித்த இணையம் ஒன்று TED.com

(இதில் இருக்கும் ஒவ்வொருவரும் விமர்சனத்திற்கும் பாராட்டுக்கும் அப்பாற்பட்டவர்கள்.)//

இது ஏன் என்று விளங்கவில்லை? ஏன் அவர்களெல்லாம் விமர்சனத்திற்கும் பாராட்டுக்கும் அப்பாற்பட்டவர்கள்.

//பொதுமக்களுக்கான சபையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அளவில் மட்டுமே பேச முடியும். அவர்களிடம் சென்று E=mc2 என்றால் அனைவரும் எழுந்து ஓடுவார்கள்.//

பரிணாமம் குறித்து அறிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் டார்வினின் எதிர்கொள்கை குறித்து நீங்கள் விரிவாகவும் விஞ்ஞானப் பூர்வமாகவும் விளக்கலாம். என்னால் விளங்கிக்கொள்ள முடியாத புள்ளிகளை உங்களிடம் குறிப்பிடுகிறேன், அதற்கான உழைப்பையும் வழங்கத் தயாராயிருக்கிறேன்.

டார்வினிஸத்தின் எதிர் கொள்கை குறித்து விளக்குங்களேன்?

இதை விவாதமாகப் பார்க்காமல், பலருக்கும் பயனுள்ள ஒரு உரையாடலாக மட்டுமே கேட்கிறேன்.

நன்றி.

ஷண்முகப்ரியன் said...

எந்த வடிகட்டிகளும் இல்லாமல் எல்லோருடைய கருத்துக்களுக்கும் இடம் அளிக்கும் உங்கள் சுதந்திரமான அணுகுமுறைக்கு முதலில் எனது நன்றிகள் ஸ்வாமிஜி.முற்றிலும் முரண்பட்டவை என்று கருதப்பட்ட அறிவியல் கண்ணோட்டமும்,ஆன்மீகக் கண்ணோட்டமும் இணைந்து கொண்டிருக்கும் மனித சிந்தனைகளின் புதிய கால கட்டம் இது.
This is an age of unifying all of man's knowledge so far either in science or in spirituality to arrive at a complete understanding of whole cosmos as well as an individual human mind.
இந்தப் பேரண்டமும்,நான் என்று நினைக்கும் எனது தன்னுணர்வும் இணைகின்ற புள்ளியில் அறிவியல்,ஆன்மிகம்,ஜோதிடம்,மூட நம்பிக்கை,கடவுள்,கடவுளின்மை, என்று இரண்டு,இரண்டாகவே பிரித்துப் பார்க்கும் சிந்தனைக்கே வேலையில்லை.
”அத்வைதம்” என்று ஆதிசங்கரர் சொன்னதைத்தான் அவரது எதிர்த் திசையில் பயணமான காரல்மார்க்ஸ் “unity of opposites" என்று சொன்னார்.

கல்வெட்டு said...

ஓம்கார்,
டார்வின் கொள்கைகள் பரவலாக அறியப்பட்ட ஒன்று. அதற்கு எதிர் கொள்கை என்று நீங்கள் நம்பும் ஒன்றை பகிர்ந்து கொண்டால் நல்லது. கையேடு சொன்னதுபோல விவாதம்(Argument ) வேண்டாம். உரையாடலாக(Conversation) தொடங்கலாம்.

**

திரு என்று அழைக்கப்படுவது நெருடலாக உள்ளது. கல்வெட்டு என்றே அழைக்கலாம்.

அமர பாரதி said...

என் கேள்விக்கு பதில் சொல்லவில்லையே ஸ்வாமி?. பதில் சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் மும்மலம் என்று நீங்கள் சொன்ன மாறுபட்ட விளக்கத்துக்கு பதிலளிக்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. இதுவரை இருக்கும் ஒரு விளக்கத்துக்கு மாறுபட்ட விளக்கத்தை நீங்கள் சொன்னால் அதற்கு ஆதாரம் கேட்பது தவறில்லையே?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கையேடு, திரு இல்லாத கல்வெட்டு :) ,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. விரைவில் முயற்சி செய்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

உண்மை என்பது வட்டம் போல. யார் எங்கே ஆரம்பித்தாலும் கடைசியில் ஒரே புள்ளியில் தான் இணையவேண்டிவரும். ஆனால் வட்டத்தின்(உண்மையின்) பாதையில் பயணிக்க வேண்டும். இல்லையென்றால் வழிதவறிவிடும்.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அமரபாரதி,

மும்மலம் என்னும் வார்த்தை யாராவது காப்பிரைட் வாங்கியதா என எனக்கு தெரியவில்லை. மூன்று விதமான கழிவுகள் மும்மலம் என கூறலாம்.

சைவசிந்தாந்திகள் மும்மலம் மும்மலம் என கூறி அதிலேயே தங்கள் எண்ணத்தை வைத்திருப்பதால், மும்மலம் என்றாலே ஆணவம் கன்மம் மாயை என பொருள்படுகிறது உங்களுக்கு.

சிறுநீர்,வியர்வை, மலம் ஆகியவற்றை காட்டிலும் அந்த மும்மலம் கொடுமையானது.

டிவின்ஸ் என கூறினால் இரட்டை குழந்தையை தான் குறிக்கும் என்ற இந்திய மனோநிலையில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

டிவின்ஸ் என்றால் ஒன்று போல இருக்கும் இரட்டை தன்மை கொண்ட பொருள் என்றும் சொல்லலாம் அல்லவா? அது போலதான் மும்மலம்.

இந்த எளியவிஷயத்துற்கு விளக்கம் வேண்டாம் என நினைத்தேன். நீங்கள் பலமுறை கேட்டதால் நீண்ட விளக்கம் கொடுத்துவிட்டேன்.

Mahesh said...

//ஷண்முகப்ரியன் said...

”அத்வைதம்” என்று ஆதிசங்கரர் சொன்னதைத்தான் அவரது எதிர்த் திசையில் பயணமான காரல்மார்க்ஸ் “unity of opposites" என்று சொன்னார்.//

அப்படிப் பார்த்தால் ஜீவனும் பரமனும் opposites-ஆ? ... சும்மா ஜோக்குக்கு..... :)))))))

Mahesh said...

ஸ்வாமி... 5 நிமிஷத்துல 3 தடவை டெம்ப்ளேட் மாத்திட்டீங்களே !!!

ஷண்முகப்ரியன் said...

ஸ்வாமி ஓம்கார் said...
உண்மை என்பது வட்டம் போல. யார் எங்கே ஆரம்பித்தாலும் கடைசியில் ஒரே புள்ளியில் தான் இணையவேண்டிவரும். ஆனால் வட்டத்தின்(உண்மையின்) பாதையில் பயணிக்க வேண்டும். இல்லையென்றால் வழிதவறிவிடும்.

மிகச் சரியான வார்த்தை ஸ்வாமிஜி.
வட்டத்தைத் தவிர வேறு பாதையில்லை என்பதும் உண்மை.

அமர பாரதி said...

விளக்கத்துக்கு நன்றி ஸ்வாமி. நான் இந்திய மனோ நிலையில் இருக்கவே விரும்புகிறேன் (நான் வசிப்பது இந்தியாவில் அல்ல). சைவ சித்தாந்திகள் சொன்னதற்கே காப்பிரைட் கேட்கும் நீங்கள், நீங்கள் சொன்ன விளக்கத்தை நினைத்துப் பாருங்கள்.

மற்றபடி டிவின்ஸ் விளக்கம் எனக்கும் தெரியும்.

தமிழில் மும்மூர்த்திகள் என்றால் அது ஒன்றுதான். நான்முகன் என்றால் அது ஒருவனைத்தான் குறிக்கும். மும்மூர்த்திகள் என்றால் என் வீடு இருக்கும் தெருவில் இருக்கும் திரு மூர்த்தி, குரு மூர்த்தி மற்றும் சுந்தர மூர்த்தி என்று சொன்னால் அது சரியான விளக்கமாக இருக்காது. நான்முகன் என்றால் அது பட்டர் நானை சாப்பிடும் மனிதன் நான்முகன் என்று சொல்லுவதும் ஒரு விளக்கம் தான். தங்களிடம் வேறு வகையான விளக்கத்த்தை எதிர் பார்த்தேன். எப்படியிருந்தாலும் தங்கள் நேரத்துக்கு நன்றி.

yrskbalu said...

dear omkarji,

vedas are not giving mukthi. these are showing the path of liberation who wants to liberation from birth cycle or samsara.

jothidam is part of the sastra . if god permits i can discuss with you.

man need true guru ( brama ghani) to abide his own self.

pl dont try to judge the person with just 3 lines of blogs.

i want to know the sadana hurdles. i accept these things are ask in front of you. then only
you can know the depth of asking . if you dont want to reply - no problem.

for your kind information - god send me my guru
YOGI RAM SURAT KUMAR. and he guided to get knowledge in vedas also through chinmayamission

dont expect every blogger like parisal-who is writing , commenting useless.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,
வேத சாஸ்திரம் முக்தியை தராது எனும் அருள் மொழியை உங்களிடம் இருந்து கேட்டேன். நன்றி

யோகிராம் சூரத்குமாரை நீங்கள் குருவாக கொண்டீர்களானால் ராம நாமத்திற்கும் ராமனுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்திருக்கும்.

பரிசல்காரன் பற்றிய உங்கள் சிந்தனை உங்களை சிறந்த ஆன்மீகவாதி என்ற அடையாளத்தை காட்டுகிறது.

முக்தி சாதனங்களை தேடுங்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அமரபாரதி,

//தமிழில் மும்மூர்த்திகள் என்றால் அது ஒன்றுதான். நான்முகன் என்றால் அது ஒருவனைத்தான் குறிக்கும். மும்மூர்த்திகள் என்றால் என் வீடு இருக்கும் தெருவில் இருக்கும் திரு மூர்த்தி, குரு மூர்த்தி மற்றும் சுந்தர மூர்த்தி என்று சொன்னால் அது சரியான விளக்கமாக இருக்காது. நான்முகன் என்றால் அது பட்டர் நானை சாப்பிடும் மனிதன் நான்முகன் என்று சொல்லுவதும் ஒரு விளக்கம் தான். தங்களிடம் வேறு வகையான விளக்கத்த்தை எதிர் பார்த்தேன். எப்படியிருந்தாலும் தங்கள் நேரத்துக்கு நன்றி.//

மும்மலம் என்பது அஃரிணையை குறிப்பது. நான்முகம்,மும்மூர்த்தி என்பவை பெயர்சொல்.
தமிழை தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.

நான் கூறிய விளக்கம் உங்களுக்கு கோபத்தை வரவழைத்திருப்பதாக எண்ணுகிறேன். எனது நோக்கம் அதுவல்ல.

உங்கள் வருகைக்கு நன்றி

அமர பாரதி said...

//மும்மலம் என்பது அஃரிணையை குறிப்பது. நான்முகம்,மும்மூர்த்தி என்பவை பெயர்சொல்.
தமிழை தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.// ?????

நன்றி.

அமர பாரதி said...

//நான் கூறிய விளக்கம் உங்களுக்கு கோபத்தை வரவழைத்திருப்பதாக எண்ணுகிறேன். எனது நோக்கம் அதுவல்ல.// இல்லை ஸ்வாமி. எனக்கு நகைப்பத்தான் வரவழைத்தது.

Sanjai Gandhi said...

எங்கள் கோரிக்கையை ஏற்றதர்கு நன்றி ஸ்வாமி. அன்று இதை உங்கள் வாயால் கேட்கும் போது அற்புதமாக இருந்தது. அதுவும் சனி பகவான் கோயில் சமாச்சாரங்களை சொன்னது நச். வெகுவாக ரசித்தோம்..:))

Slakshmanan said...

Dear Swami,

Well said for all the debates and discrepancies swamy for Mr No,

நான் உங்கள் மற்றும் வாத்தியார் சுப்பையா அவர்களின் பாடத்தை பின் பற்றுகிறேன்.

பின்பற்றும் மற்ற நன்பர்களுக்கும் ஒன்று சொல்ல விருப்ப படுகிறேன்

MrNo:

Why your science doesn't teach you the basic sense of providing feed back to the lessons?. Since is always contradict and confusing one. if you talk about science is great how about engineering ? it is like a love it can make a person as mad and scientist as well , Swami quoted the scientist story is the example for conflicts between the scientist and their expertise

அது விஞ்ஞானம், இது மெய்ஞானம், புரிந்து கொள்ளாமல் இருப்பது உங்கள் அஞ்ஞானம்,
அஞ்ஞானிகளுக்கு எல்லாமே விஞ்ஞானமாகத்தான் தெரியும். மெய்ஞானத்துடன் பாருங்கள் சாமி உண்மை என்னவென்று புரியும், வலைத்தள்த்திற்க்கு தெளிவான மனதுடன் வாருங்கள்

கண்ணுக்கு தெரியும் பொருள்களுக்கு வித்தியாசமான் மற்றும் முரனபாடான கருததுகள் சொல்லும் அறிவியலாளர்களுக்கு , கண்ணுக்கு தெரியாத ஜோதிடம் மூட நம்பிக்கையாக்ததான் தோன்றும்.

you are looking for the evidence for astrology right ? in your science said there are 9 planets before science determine about 9 planets , mr baskara and aryapata told about the planets and prabancha and more about planets and its sub planets ,they have written so many books about astronomy.

before darwin's invention in the mahabharatha proven darwin's theory, that is which ever is powerful that one will win,(pandavaas won gauravaas)

lease stick to your science and do not talk and criticize about territory.

because of your idiotic science and its invention , the world is moving towards dead end.

Listen kaanadsan song(vantha naal mudhal) you will understand the philosophy about science

Mr Kalvettu,

in Future this might also happen meant Darwin may be commented , the historical evidence you can see in your science

இர.கருணாகரன் said...

அன்புள்ள ஸ்வாமிஜி அவர்களுக்கு,

மிகவும் காலதாமதமாக இந்த பகுதிக்கு வந்துள்ளேன்,

மிக அதிகமான தகவல்களும்,

உள்ளார்ந்த நிரூபணங்களையும் தந்து அடியேனை ஆட்கொண்டீர்கள் ,

அன்பும் நன்றியும் , தங்கள் சரணம்.