Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, March 2, 2009

மந்திர சக்தி - பகுதி இரண்டு


சென்ற பகுதியின் தொடர்ச்சி...

ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார். தானே ஒரு மந்திரத்தை ஜெபம் செய்தால் அது சித்தி அளிக்குமா எனதெரியாமலேயே ஜெபம் செய்ய வேண்டிவரும். அது எப்படி மந்திரம் ஒரு மனிதனுக்கு பயன்படுவது மற்றொருவருக்கு பயன்படாமல் போகும். எல்லோருமே மனிதர்கள் தானே என உங்களுக்கு ஓர் சந்தேகம் வரலாம். .....

ஒரு அரசனுக்கு தனது மந்திரியின் மேல் ஒரு சந்தேகம். மந்திரியின் புத்தி சாதுர்யத்திற்கு அவர் செய்யும் மந்திர ஜெபமே காரணம் என எண்ணினார். தானும் மந்திர ஜெபம் செய்தால் மந்திரியைப் போல புத்தியை அடையலாம் என நினைத்தான். ஒரு நாள் மந்திரியிடம் தனது ஆவலை தெரிவிக்க, மந்திரியோ, அரசனான நீங்கள் சரியான அதிகாரி இல்லை. உங்களுக்கு மந்திர ஜெபம் சித்திக்காது என்றான்.

அரசன் தனது அஹங்காரத்தாலும், அதிகார மோக உச்சத்திற்கு சென்றான். உன்னால் அந்த மந்திரத்தை கூற முடியுமா, முடியாதா? என கோபமாக கேட்டான். உடனே மந்திரி அருகில் இருந்த காவலரைப் பார்த்து இவரை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என கட்டளையிட்டார். காவல் வீரர்கள் அரசனை குழப்பமாக பார்க்க அரசன்கோபத்தின் உச்சத்திற்கு சென்று "முட்டாளே ! முதலில் இந்த மதிகெட்ட மந்திரியை சிறையில் அடையுங்கள்" என்றார். உடனே காவலர்கள் மந்திரியை சிறை பிடித்தனர்.

புன்னகை பூத்தவாரே மந்திரி கூறினார். "அரசே நான் கூறிய அதே வார்த்தையைத் தான் நீங்களும் கூறினீர்கள். உங்கள் வார்த்தைக்கு கீழ்படிந்தவர்கள், என் வார்த்தைக்கு கீழ்படியவில்லை. அது போன்றதே மந்திர ஜெபம்; நான் கூறினால் சித்திக்கும் மந்திர ஜெபம் நீங்கள் கூறினால் சித்திக்காது. தவறை உணர்ந்த அரசன் தான் அதற்கு அதிகாரி அல்ல என்பதையும் அறிந்தான்.


இந்த கதை மூலம் நாம் உணர வேண்டிய விஷயம் நாம் எந்த மந்திரத்திற்கு அதிகாரியோ, அதை உணர்ந்து ஜெபிக்க வேண்டும். மேலும் அதை உணர்ந்த குருவிடம் தீட்சையாக பெறவேண்டும். மந்திர ஜெபம் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஜெபிக்கப்பட வேண்டும். உலக நன்மைக்காக, முக்தியை வேண்டி, உடல் குறைகளை போக்க, சித்திகளை பெற என நோக்கம் வேறுபட்டாலும் மந்திர ஜெபம் எனும் செயல் ஒன்று தான்.

மந்திர ஜெபம் செய்து நோக்கம் பூர்த்தி அடைவதை சித்தி அடைதல் என்பார்கள். மந்திர சித்தி அடைதல் இயல்பாக ஏற்படும் ஓர் விளைவு. முக்தியை வேண்டி மந்திர ஜெபம் செய்தால் நம்முடைய கூர்மையான எண்ணம், ஜெபிக்கும் முறை, நம்பிக்கையை பொறுத்து மந்திர சித்தி ஏற்படும்.



ஸ்வாமி சச்சிதானந்தா அவர்கள் மந்திர சாதனை பயிற்சியையும், மந்திர சித்தி அடைதலையும் எளிய உதாரணத்தில் விளக்குவார். குரு என்பவர் ஓர் பீஜ மந்திரத்தை கொடுப்பது என்பது பாலில் ஒருதுளி தயிரை சேர்ப்பது போன்றது. பால் போன்ற சிஷ்யனின் உள்நிலையில் ஓர் சிறிய மந்திரம் அவனை தயிராக மாற்றும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்தால், தயிரை மத்தால் கடைவதை போல கடைந்து கடைசியில் வெண்ணையாக அவனது மந்திர சித்தி கிடைக்கும். இதை பக்குவமாக ஆன்மீகம் எனும் தன்மையில் உருக்கினால் என்றும் அழியாத முக்தி எனும் நெய் கிடைக்கும். மந்திர யோகத்தை இதை விட எளிமையாக கூறமுடியாது என எண்ணுகிறேன்.


மந்திர ஜெபம் செய்யும் முறை மிகவும் முக்கியமானது.

1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.

2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் பலன் இல்லை.





3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும்.


4. க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.





5. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.


வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.


6. ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.


7. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.


8. தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.

9. எந்த ஒரு செயலும் அதற்குறிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். உதாரணமாக சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசௌகரியம் ஏற்படுவது இயல்பு. இது போல மந்திரஜெபம் செய்ய ஏற்ற இடம் என சில இடங்கள் உண்டு. இடத்திற்கு ஏற்றவாறு மந்திரத்தின் பலமும் , பலனும் வேறுபடும்.

வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்தால் 100 மடங்கு பலன்கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன். மலை மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.

10. சந்தியாகாலவேளை எனும் சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. இந்த காலகட்டத்தில் ஜெபம் செய்யாமல் மற்ற நேரங்களில் மந்திரம் அஜபமாக உருவாகும். கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஜெபத்தால் ஞாபக சக்தி, கூர்மையாக சிந்தித்தல், வேகமான செயல் போன்றவை ஏற்படும். நோய் உள்ளவர்களுக்கு அருகில் இருந்து ஜெபம் செய்தால் அவர்களுக்கு உடலில் முன்னேற்றம் ஏற்படுவதை காணலாம். மேலும் மந்திர ஜெபத்தை பிறர் நலனுக்கு பயன்படுத்தினால் மிக வேகமாக செயல்படும்.


மந்திர சாஸ்திரத்தை பற்றி விவரித்து சொன்னால் பல விஷயங்களை கூறலாம். மதங்கள் சடங்குகளை கடந்த மெய் ஞானத்தின் திறவுகோலான மந்திர யோகத்தை குருவின் மூலம் பெற்று உள் நிலையில் பூரணத்துவம் பெறுவோம்.

14 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

அடடே... அப்போ மந்திரம் குறித்து நான் சொல்வதும் சரி !
:)

வடுவூர் குமார் said...

அருமையான பல தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.இங்கு(துபாயில்) அரபிகள் கூட இந்த மாதிரி ஜபமாலையை கையில் வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டிருப்பார்கள்(வெளி இடங்களில் கூட).
நான் தியானம் கற்றுக்கொள்ளும் போது இம்மாதிரி விபரங்களை முதலில் சொல்லிய பிறகே ஆரம்பித்தார்கள்.சமீபத்தில் என் உறவினர் தன் குழந்தைகளுக்கு என்னை சொல்லிக்கொடுக்க முடியுமா என்ற கேட்ட போது தக்க குருவை தேடி கண்டுபிடிக்கவும் என்று சொல்லிவிட்டேன்.

ஷண்முகப்ரியன் said...

ஏற்கனவே மந்திர ஜெபம் செய்பவர்களுக்கு இந்தப் பதிவு பயன் தரும். என்னைப் போன்று,எந்த மந்திரமும் தெரியாதவர்களுக்கு..? யாராவது பலனடைந்தால் நன்றே.

Mahesh said...

அடேயப்பா... இவ்வளவு இருக்கா? சந்த்யாவந்தனத்தின்போது ப்ரம்ம முடிச்சுடன் காயத்ரி மந்த்ரம் ஜபிப்பது இதை விட வேறுபட்டதா?

Bhuvanesh said...

நல்ல தகவல்களுக்கு நன்றி சாமி!! அனால் இந்த மந்திரத்தை பலர் மற்றவர்களின் அழிவிற்கு தானே பயன்படுத்துகிறார்கள்?? அப்படி பயன்படுத்துவதால் அவர்களுக்கு வரும் தீங்கு என்ன?? அவர்கள் மந்திரத்தால் அவஸ்தை பட்டவர்களுக்கு மருந்து என்ன ?

குலவுசனப்பிரியன் said...

என்னது மாங்காய் பறிக்க என்ன மந்திரம் என்று கண்டுபிடித்துவிட்டார்களா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன், திரு வடுவூர் குமார்,

வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.ஷண்முகப்ரியன்,

எனது பதிவு அனைவருக்கும் பொதுவானது. உண்மையில் மந்திர ஜபம் செய்யாதவர்களுக்கே இது பொருந்தும்.

குருவை நினைத்து ப்ரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்கு மந்திர உபதேசம் கிடைக்கும்.

உங்களுக்காக ஒரு கதையின் இணைப்பை தருகிறேன். மந்திர உபதேசம்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ், திரு புவனேஷ், திரு குலவுசனபிரியன்


உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் கேள்விகளுக்கு தனி பதிவாகவே பதில் சொல்லுகிறேன்.

:)

அது ஒரு கனாக் காலம் said...

Namaskarams Guruji,

I just happened to read this blog ( couple of days before) , and then I ended up reading all the blogs, I am a fan of Sir Subbiah, Unmai Tamizan, Kabir thasan, at times read the DK type articles too.

Its been a pleasure, though I have read the blogs, I am sure I will be reading them again and again, ..

Sundar, Dubai , UAE

மஞ்சள் ஜட்டி said...

சுவாமி, முன்னர் வீட்டுக்கு வீடு போஸ்ட் கார்டு வரும்., ஆஞ்சநேயர் துணை, இந்த மாதிரி நீங்களும் 1000 கார்டு அடிச்சி, மத்தவுங்க வீட்டுக்கு அனுப்புங்க.. இல்லாட்டி கண்ணு நொல்லை ஆயிடும், காலு வெளங்காம போயிடும், கவுட்டி கிளிஞ்சிடும்னு ... இப்போ அதையே..SMS ல அனுப்புறாங்க...இதை நம்புறதா இல்ல உண்மையிலே இந்த மாதிரி விஷயங்களுக்கும், மந்திரங்களுக்கும் ஏதாவது chaos தியரி மாதிரி தொடர்பு இருக்கா??

Kavinaya said...

பயனுள்ள பதிவிற்கு நன்றி.

Sundaram.C said...

Swami thangal enakku oru mandiram ubadesam seiya mudiyumanal kadamai ullavanai irrupen. appadi seiyum sitham irundhal pin varum en email id annupavum.
mothersunder54@gmail.com

ivannam ethirparpathu thavaru irudalum erail arul iruppin adhu sitthikum enra nambikaiyil ketkiren

Unknown said...

வந்தே வேத சாகோபஜீவிதம்