Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, November 10, 2008

வார்த்தையற்ற வெளி


யோகம்
-----------------


ஒன்றிணைந்து இருத்தல் என்பது
அனந்தமான நிகழ்வு.
இரு ஆன்மாக்கள் ஒன்றினையும் பொழுது
நட்சத்திரம் ஒன்று வானில் தோன்றுகிறது.


வானில் பார் எங்கும் நாம்
பல முறை சந்தித்த சுவடுகள்.
பகலில் தெரிவதில்லை நட்சத்திரம் -
என்றும் அவை வானில் இருக்கத்தான் செய்கிறது.


வெளியே ஒளி, உள்ளே இருள்.
இருள் விலகி- இருமை விலகாவிடில்
- பகலில் தெரிவதில்லை நட்சத்திரம்.

தெய்வீக சந்திப்புக்கள் ஒவ்வொரு
ஷணமும் நிகழ காத்திருக்கிறது.
முடிவற்ற ஆற்றல் உன் உள் உணர்ந்து
என்னில் இணைவாயாக.

வா....
இருமை விலகி நட்சத்திரமாவோம்.


5 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

படம் எடுத்த இடம் மருத மலையா ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி கண்ணன் அவர்களுக்கு,

இந்த காட்சி அமைந்த இடம் திருவண்ணாமலை. மலையின் மேல் இருக்கும் கந்தாஸ்ரமம்.

எனது பதிவில் எது சுவாரசியமாக இருக்கிறதோ அதைபற்றி ’மட்டும்’ கேள்வி கேட்டீர்கள் போல இருக்கிறதே? :)

உங்கள் வரவுக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

//எனது பதிவில் எது சுவாரசியமாக இருக்கிறதோ அதைபற்றி ’மட்டும்’ கேள்வி கேட்டீர்கள் போல இருக்கிறதே? :)//

தெரியாத விடைகளுக்கும் கேள்விகள் கேட்கப்படலாம் அல்லவா ?

ஸ்வாமி ஓம்கார் said...

இருக்கலாம் இருக்கலாம்.

krish said...

அருமையான கவிதை.