Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, June 1, 2023

ஜோதிட பலன்

ஆறு வயதில் கற்றுக்கொள்ளத் தொடங்கிய ஜோதிட சாஸ்திரம் என்னுடன் வளர்ந்த சகோதரனைப் போன்றது. பன்னிரெண்டாம் வயது முதல் என் தந்தையுடன் இணைந்து பலன்களைச் சொல்லத் தொடங்கினேன். ஜாதகப்பலன் சொல்லுவது என்பது பல ஆண்டுகளாக என்னுடன் பயணித்துவரும் ஒரு திருப்பணி. பலன்கள் கேட்பவருக்குத் தன் வாழ்க்கையில் நடைபெறுவதை முன்பே அறிந்துகொள்வதால் ஏற்படும் மகிழ்ச்சி பெரிது. ஜோதிடருக்கு சரியான முறையில் வழிகாட்டுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி பலமடங்கு பெரிது. பலர் தலைமுறைகளாக என்னிடம் ஜோதிட வழிகாட்டுதல் கேட்டுப் பயன்பெறுகிறார்கள்.

ஜோதிட பலன் சொல்லுவதைத் தவிர ஆயிரக்கணக்கான ஜோதிட மாணவர்களை உருவாக்கி இருக்கிறேன். ஜோதிடத்தைக் கற்றுக்கொடுப்பதை மட்டும் 22 ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் தொழில் முறை ஜோதிடம் பார்ப்பவர்கள். அந்த மாணவர்aகள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் ஜோதிடத்தை நான் தொழில் முறையில் பார்ப்பது இல்லை.

மாதத்திற்கு இரண்டு ஜாதகங்களைப் பார்ப்பது என்பதே முடியாது எனத் தவிர்த்துவிடுவேன். என்னிடம் ஆலோசனை பெறப் பல மாதங்களாகக் காத்திருப்பவர்கள் உண்டு. அவர்களைக் காக்க வைப்பது வேதனையைக் கொடுத்தாலும் ஆன்மீகப்பணிகளுக்கு இடையே அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது என்பது பெரும் சவாலான விஷயம்.

 எதற்காக இத்தனை பெரிய கதைகளைச் சொல்லுகிறேன் தெரியுமா?

தற்சமயம் ஓம்கார ஆலயப்பணிகள் நடைபெற்றுவருகிறது. ஆலயத்திற்கு நன்கொடை பெறும் நோக்கில் அனைவருக்கும் ஜோதிட ஆலோசனைகள் அளிக்க இருக்கிறேன். ஜோதிட ஆலோசனை ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் நடைபெறும்.

 முன்பதிவு செய்து எனது ஆலோசனையைப் பெற்று அதன் மூலம் ஆலயத்திருப்பணிக்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.

இந்தியா மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஆலோசனை பெறத் தனித்தனி நேரம் அமைக்கப்பட்டுள்ளது. வசிக்கும் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப நேரத்தைத் தேர்வு செய்யலாம்.

ஜோதிட ஆலோசனையைப்பற்றி முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. ஆலயத்திருப்பணி செய்யும் நோக்கத்தில் மட்டுமே ஜோதிட ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது.  ஆலயப்பணிகளின் அடுத்த நகர்வு காலத்திற்குப் பிறகு ஜோதிட ஆலோசனைகள் அளிப்பது நிறுத்தப்படும். இந்தக் குறுகியகாலத்தில் சாஸ்திர ரீதியாக ஜோதிடப் பலன்களை அறிந்துகொண்டு ஆலயப்பணிக்கு உங்களது நன்கொடைகளை அளியுங்கள்.  

 

முன்பதிவுக்குத் தொடர்பு கொள்ளவும்

தொலைபேசி : 9944233355 (WhatsApp முன்பதிவு மட்டும்)

மின்னஞ்சல் : swamiomkar@gmail.com

0 கருத்துக்கள்: