Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, February 21, 2020

அர்க் என்னும் அமுதம் பகுதி 3


உலகின் முக்கியமான இரண்டு கலாச்சார மனிதர்களுக்கு உண்மை ஒன்று தெரிந்தது. அந்த உண்மை என்ன என்றால் பசுவிற்கு பிரபஞ்ச ஆற்றல் வெளிப்படுத்தும் சக்தி உண்டு என்பது தான். பொன் முட்டையிடும் வாத்தை தினமும் ஒரு பொன் முட்டை எதற்கு என அதை அறுத்த கதை போல பசுவின் ஆற்றலை தினமும் எப்படி கிரகிப்பது என தெரியாதவர்கள் அதை மாமிசமாக உட்கொள்ள துவங்கினார்கள். அறிவியல் அறிவு பெற்ற கலாச்சாரத்தினர் பசுவின் அருகே அமந்து மந்திர ஜபம் செய்தனர். ஆர்க் உருவாக்கி பருகினர். இதனால் பசு நீண்ட காலம் சக்தியை அவர்களுக்கு அளித்தது. மீண்டும் சொல்கிறேன் பசு இரண்டு கலாச்சாரம் கொண்டவர்களிடம் கிடைத்தது. ஆனால் அதன் மூலம் சக்தியை பெரும் தொழில்நுட்பம் ஒரு கலாச்சாரத்திற்கு மட்டுமே கிடைத்தது. 

பசுவின் சிறுநீர் கொண்டு கோ ஆர்க் தயாரிக்கப்படுகிறது. வெளிநாட்டில் ஒரு நாள் கோ அர்க் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். பசுவின் மாமிசத்தை உண்ணும் அந்த நாட்டினர் கோ அர்க் பற்றி கேட்டதும் ஏதோ கேட்க கூடாததை கேட்டது போல அதிர்ச்சியானார்கள். தினமும் மாட்டின் சிறுநீரகம் குடல் மற்றும் சதைகளை சமைத்து சாப்பிடும் நீங்கள் சிறுநீரை வெறுப்பது எதனால் என சிந்திக்கவேண்டும். 

காலை சூரிய உதயத்திற்கு முன் பசுக்களிடம் இருந்து சிறுநீர் சேகரிக்கப்பட்டு, சில மணி நேரத்திற்குள் அர்க் தயாரிக்கப்பட வேண்டும். டிஸ்டிலேஷன் என்ற முறையில் குளிர் நீர் மேலும் , நெருப்பு கீழேயும் இருக்கும் பாத்திரத்தில் பசுவின் சிறுநீர் வைக்கப்படுகிறது. நூறு டிகிரி கொதி நிலைக்கு வந்ததும் ஆவியாகி அந்த குளிர் நீரின் விளைவால் மீண்டும் குளிர்விக்கப்பட்டு நீராவியாக இருந்தது தூய்மையான கோ அர்க்காக வடியத்துவங்கும். தற்காலத்தில் டிஸ்டிலேஷன் என்ற முறை பெரும்பாலும் மது தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. 

வேதகாலத்தில் இம்முறைகள் மது தயாரிக்க பயன்படவில்லை. மாற்றாக ஒரு பொருளின் சத்துக்களை மட்டும் சேகரிக்க பயன்படுத்தினார்கள்.  மதுவால் தனிமனிதனுக்கு ஏற்படும் தீமைகள் நமக்கு தெரிந்த விஷயம் தான். கோ அர்க் போன்ற ப்ராண சக்தி மிக்க பொருட்கள் மனிதனை கீழ் நிலைக்கு தள்ளுவதில்லை. ஆன்மீக உயர் நிலைக்கு ஏற்றம் செய்கிறது.

இந்தியாவில் பல இடங்களில் கோ அர்க் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட / சுத்தமாக காய்ச்சிய பசுவின் சிறுநீர் கோ அர்க் என அழைக்கப்படுகிறது. நாதகேந்திரா என்ற வேதகால வாழ்வியலில் சூழலில் தயாரிக்கப்படும் கோ அர்க் மிகவும் உன்னதமானது.

நாதகேந்திராவில் உருவாக்கப்படும் முறையின் முக்கியத்துவங்களை கூறுகிறேன்.

  • டிஸ்டிலேஷன் என்ற வேதகால முறையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
  • இந்திய பசுக்களில் இருந்து சிறுநீர் சேகரிக்கப்படுகிறது
  • சுதந்திரமாக திரிந்து மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களிடம் அதிக சக்தி நிலை உண்டு என்பதால் கோ அர்க் இப்பசுகளின் மூலம் பெறப்படும் சிறுநீரில் தயாரிக்கிறோம்.
  • மேய்ச்சல் மூலம் புற்கள் மற்றும் தாவரங்கள் மட்டுமே உண்ணும் பசுக்கள் இதன் ஆதரமாக உள்ளது.
  • சூழ் கொண்ட பசுக்கள்(கருவுற்ற) மூலம் தயாரிக்கப்படும் கோ அர்க் மிகவும் சக்தி கொண்டதாக இருக்கும். நாதகேந்திராவில் பசுக்களின் சூழ் காலத்தை கருத்தில்  கொண்டு சிறுநீர் சேகரிக்கப்படுகிறது.
  • ப்ரபஞ்ச ஆற்றலில் தாக்கம் அதிகம் உள்ள நட்சத்திரங்கள், திதிகளில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
  • பல முக்கியத்துவம் கொண்டு உருவாக்கப்படுவதால் குறைந்த அளவே தயாரிக்க முடிகிறது.


பிற இடங்களில் கிடைக்கும் கோ அர்க் , நாதகேந்திராவில் உள்ள கோ அர்க் இரண்டையும் அருகில் வைத்து பார்த்தாலே வித்தியாசம் தெரியும். 


கோ அர்க் பயன்படுத்தும் முறை:

  • காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 15(ml) மில்லி லிட்டர்  கோ அர்க் அருந்த வேண்டும்.
  • நேரடியாக அருந்த முடியாதவர்கள் 30ml  நீருடன் கலந்து அருந்தலாம். 
  • பிறகு ஆன்மீக பயிற்சிகள் அல்லது உங்கள் தினப்படி வேலைகளை செய்யலாம்.
  • ஒரு வேளை உட்கொண்டால் போதுமானது. மிகவும் சோர்வாக இருப்பவர்கள் அல்லது உடல் தளர்ச்சியாக உணர்பவர்கள் இரண்டு வேளை உட்கொள்ளலாம். 


ஆன்மீக சாதன செய்பவர்கள் ஒரு முறை கோ அர்க் அருந்தி பயிற்சி செய்தால் ஏற்படும் சக்தி அதிர்வை நிச்சயம் உணர்வார்கள். 

நாதகேந்திராவில் கிடைக்கும் கோ அர்க் பெற இந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும். 9443538751

0 கருத்துக்கள்: