Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, December 10, 2015

ரங்கராஜ் பாண்டேயின் கேள்விக்கு எங்கள் பதில்..!


கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் சென்னை பேரிடரை ஜோதிட ரீதியாக அலசும் வகையில் சென்ற வாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் திரு.ரங்கராஜ் பாண்டே சில கேள்விகளை முன் வைக்க பிரபல ஜோதிடர் ஷெல்வி பதில் அளித்தார்.  இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் அடிப்படையானது மேலும் தர்க்க ரீதியாக பொதுமக்கள் கேட்க விரும்பிய கேள்விதான். நெறியாளர் பாண்டேயின் கேள்விகள் மிகவும் ஆய்வு செய்து கேட்கப்பட்டதல்ல. ஆனால் யதார்த்த ஜோதிடர் ஷெல்வியின் பல பதில்கள் தெளிவாக இல்லாமலும் மேலும் ஜோதிடத்திற்கு முரணாகவும் இருந்தது.

கேள்விக்கான பதில்கள் பலருக்கு சாஸ்திர உண்மையை சொல்லும் என்பதாலும் தெளிவு கிடைக்கும் என்பதாலும்  அக்கேள்விகளை எனது ஜோதிட மாணவர்களிடம் கொடுத்து பதில் அளிக்க சொன்னேன். அவர்களின் பெரும்பாலனவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்கள். அவர்கள் அளித்த பதில் இங்கே தொகுத்துள்ளேன்.


கேள்வி பதில்


1. இயற்கை பேரழிவுகளை தலைவிதியா? நிர்வாகத்தின் அலட்சியமா?

இது தலைவிதியோ அலட்சியமோ இல்லை. இது வானிலையின் இயற்கை செயல்.சூரியனை நீள்வட்டப்பாதையில் பூமி சுற்றி வருவது நமக்கு தெரியும். நீள் வட்டப்பாதையில்ஒரு பக்கம் சூரியனிலிருந்து தள்ளியும் ஒரு பகுதி அருகிலும் இருக்கும். அருகில் இருக்கும் சூழலில்கோடை காலமும், சூரியனின் வெப்பமும் அதிகமாக இருக்கும், தள்ளி இருக்கும் சூழலில் குளிர்காலமும் சூரியனின் தாக்கம் குறைந்தும் இருக்கும். இதை நாம் எப்படி வானிலை நிகழ்வு என சொல்லுகிறோமேஅது போல பூமிக்கும் சனிக்கு இடையே இருக்கும் இடைவெளியை பொருத்தும் பூமியில் வானிலை மாற்றம் நிகழும். பூமி சூரியனை சுற்றி வர நமக்கு ஒருவருடம் ஆகிறது அதனால் குளிர் மற்றும் கோடை காலம் நமக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வரும். ஆனால் சனி பூமி ஆகியவற்றின் சுழற்சி 30 வருடம் எடுத்துக் கொள்ளுகிறது.
 
இதனால் சுமார் 15 வருடம் ஒரு முறை அதிக மழையும் , வறட்சியும் ஏற்படும். இடைக்கடார் சித்தரின் பாடல்கள் பரவலாக ஜோதிடத்தில் பயன்படுத்துவதில்லை, மன்மத வருஷம் மாரி உண்டு என அவர் சொல்லுவது பஞ்சாங்கத்தின் முன்னால் ஒரு பொது பலனாக இருக்குமே தவிர அவை கண்டிப்பாக நடக்க வேண்டும் என்பதில்லை. இந்த பொதுப்பலனும் சனியின் தன்மையும் இணையும்காலத்தில் அவை மிகச்சரியாக நடக்கும்.

முண்டேன் ஜோதிடம் என்ற பிரிவு ஜோதிட சாஸ்திரத்தில் உண்டு. அவை சமூகம் மற்றும் மக்கள் சார்ந்த பலன் சொல்லும் பகுதியாகும். அவ்வாறு முண்டேன் ஜோதிடம் கற்றவர்களால் இயற்கை பேரிடர், நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என அனைத்தும் கூற முடியும்.

2. 60 வருடத்திற்கு ஒரு முறை இதே பிரச்சனை வருமா?

அவை பொதுப்பலன் சனி நீர் ராசி சம்பந்தப்பட்டு, குரு+சூரியன் ஆகியவை இணைந்தால் தான் இவை நடக்கும்.  

60 வருடத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் கட்டாயம் 10 வருடத்திற்கு ஒரு முறை சனி நீர் ராசி சம்பந்தப்படும் எனவே அது மன்மத வருடமாக இல்லை என்றாலும் நடக்கும். 2004 டிசம்பர் சுனாமி, 2015 இப்பொழுது அடுத்தது 2026 செப்டம்பர் என  நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம்.

இதுக்கு எதுக்கு கூகுள்..!


3.மழை வருடா வருடம் வருதே, இதற்கு எதற்கு ஜோதிடம்?

மழை வருடா வருடம் வரும் என சொன்னாலும் இனி வரும் காலத்தில் 2017 முதல் 2020 வரை சனி நெருப்பு ராசியான தனுசில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் 2014 முதல் 2017 வரை இருந்த மழையின் அளவை விட மிகவும் குறைவாக இருக்கும். 2018 ஆண்டு மழை இல்லாமல் பொய்க்கும். முன்பு சொன்னது போல பூமிக்கும் சனிக்கு இடைவெளி பெருகுவதால் இவை நடைபெறுகிறது.

4. மன்மத வருடத்தில் இயற்கை பேரழிவு நடக்கும்னு நம்பரீங்க?

எந்த வருடமும் அழிவு பேரழிவு என சொல்லிவிட முடியாது. கிரகங்களின் சுழற்சியே அதை முடிவு செய்கிறது. 2017 வரை சனி விருச்சிக ராசியில் இருக்கும்

அப்படி இருக்க அது வரை சில பேரழிவு விஷயங்கள் நடைபெறும். ஜனவரி முதல் வாரம் ராகு/கேது பெயர்ச்சி உண்டு. அது மட்டுமே வைத்து சொல்லிவிட முடியாது. ராகு சனி உடன் சம்பந்தப்படும் பொழுது 2016 ஆம் ஆண்டு மார்ச், மே மாதங்கள் மனித செயலால் குழு மரணங்கள் நிகழும்.

5. கார்த்திகை பிறகு மழை இல்லை, கர்ணனை மீறிய கொடை இல்லை.  அப்பொழுது எப்படி?


கார்த்திகைக்கு பிறகு தான் மழை இல்லை. அதாவது மார்கழி மாதம். நாம் பேசும் இக்காலத்தில் கார்த்திகை முடியவில்லை. மேலும் இத்தகைய பழ மொழிகள் ஜோதிடம் இல்லை. அதனால் ஜோதிட சார்ந்த கேள்விகளை கேளுங்கள்.

6. இந்த கார்த்திகைனு சொல்றீங்களே... நம் நாட்டுக்கா? தமிழ் நாட்டுக்கா?

சனியும் சூரியனும் விருச்சிக ராசியில் 13 ஆம் டிகிரியில் சென்றார்கள். சூரியன் சனியின் டிகிரியை நெருங்க நெருங்க நவம்பர் 20ஆம் தேதியிலிருந்து சென்னை பாதிக்கப்பட்டது. காரணம் சென்னையின் ரேகாம்சம் 13 டிகிரி. சனி விருச்சிக ராசியில் பயணம் செய்ய செய்ய பல டிகிரியில் மாற்றம் அடையும் அது குறிக்கும் ரேகாம்ச இடங்கள் எல்லாம் பாதிக்கப்படும்.

7. 2016 தை வரை, ஜனவரி 29  வரை கவனம் தேவை. தமிழன், தமிழக முதலமைச்சர், தமிழகம் எல்லாம் கவனமாக இருக்க வேண்டுமா? இனியும் பேரிடர் நடக்கலாமா?

இனி பேரிடர் தமிழகம் சார்ந்து இல்லை. ஆனால் இந்தியாவில் உண்டு. தமிழகத்தில் குழு மரணம், போராட்டத்தை ஒடுக்கும் பொழுது மரணம் ஆகியவை நடைபெறும்.

8. ஒரு ஐம்பது வருஷமா நீர் நிலை, கடவுள் வணங்காம இருந்திருப்பமா? அப்போ பேரழிவு இப்பதான்னே நடக்குதா? அதுக்கு முன்னாடி நடந்ததே இல்லையா?

முன்பே சொன்னது போல வானிலை மாற்றங்கள் கிரக சுழற்சிக்க ஏற்ப நிகழும். நீங்கள் வணங்கினாலும் வணங்காவிட்டாலும் இயற்கை அதன் வேலையை செய்யும்.
 
சூரியனை நீங்கள் வணங்கினாலும் வணங்காவிட்டாலும் எப்படி ஒளி கொடுக்குமோ அது போலவே இது. ஜோதிட சாஸ்திரம் எதையும் வணங்க சொல்லுவதில்லை. மதங்கள் தான் இறைவனை வணங்கு இல்லை உனக்கு தீயவை நடக்கும் என பயத்தினால் பக்தியையும் மதத்தையும் வளர்க்கிறது. ஜோதிடத்தை மதம் போன்று மலிவாக மாற்றம் செய்ய வேண்டாம் என வேண்டுகிறேன்.

9. உங்கள் கருத்துப்படி பேரழிவு நடந்தே தீரும் இது விதி இல்லையா?
முன்பே சொன்னது போல இது விதி அல்ல, இயற்கை சுழற்சி. குளிர்காலம் வரும் என தெரிந்து கம்பளி உடை வாங்குவது போல, நிகழ்வுகளை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படலாம். அதை புரிந்து கொண்டு செயலாற்றவே ஜோதிடம் சாஸ்திரம் நமக்கு உதவுகிறது. எதையும் மாற்றவோ, இது தான் விதி என உங்களை தாழ்தவோ ஜோதிடம் செயல்படுவதில்லை. அது ஒரு முன்கூர் (ஃபோர்காஸ்டிங் டூல்) கருவி.

10. இதுக்கு பரிகாரம் இருக்கா?

இது ஒரு கருவி இதனால் அளவிட மட்டுமே முடியும். ஆன்மீகம் , இறையா ப்ரார்த்தனைகள் மாற்றம் செய்யலாம். ஆனால் கிரகத்தை வணங்குவதாலோ அல்லது கிரகம் சார்ந்த தேவதைகளை ப்ரார்த்தனை செய்வதோ ஜோதிட சிந்தாந்தத்தில் இல்லை.

[சனி சார்ந்த பரிகாரம். சனி - சூரியன் சம்மந்தப்பட்டா ஆஞ்சனேயரை வணங்க வேண்டும் - என திரு,ஷெல்வி - கூறுகிறார்]
சக்கரை வியாதி இருக்கும் ஒருவருக்கு சக்கரை சாப்பிடுங்கள் என சொல்லுவதை போன்று ஒரு தவறான வழிகாட்டுதல் இது.  சனி மற்றும் சூரியன் என்ற இரு

கிரகத்தால் தான் இத்தகைய பிரச்சனை நடைபெறுகிறது. அப்படி இருக்க அவர்களை வணங்குவது சரியாக வருமா என சிந்திக்க வேண்டும். கோடை காலத்தில் வெப்பம் அதிகமாகும் என நான் சொன்னால் நீங்கள் இளநீர் அருந்துதல் , உடலை குளிர்விக்க முயலவேண்டுமே தவிர கோடையில் வெப்பத்தை கொடுப்பது சூரியன் தான் என கூறி வெளியில் சென்று சூரியனை வணங்கினால் வெப்பம் குறையுமா?

11. இதை செய்தால் ஆஞ்சனேய ப்ரீதி நீங்கள் சொல்வதை போல செய்தால்  ஜனவரி 29 வரை நடக்கும் பேரழிவு தடுக்கலாமா?

ஜோதிடமும், ப்ரார்த்தனையும் வேறு வேறு.

வானிலை அறிக்கை போல சூழலை சொல்லுவது மட்டுமே ஜோதிடத்தின் வேலை. அதன் ப்ரீதி, பரிகாரம் ஆகியவை தர்ம சாஸ்திரம் மற்றும் ஆன்மீக அடிப்படையில் சொல்லப்படுகிறது.

12. பரிகாரம் செய்வதன் மூலம் மிகப்பெரிய தாக்கம் தவிர்க்க முடியும் என்றால் ஜோதிட பலன் தவறாகிவிடும். ஜாதகம் உண்மையாக இருந்தால் பரிகாரம் பொய்யாகிவிடும். பரிகாரம் உண்மையாக இருந்தால் ஜோதிட பலன் பொய்யாகிவிடும். இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

அதனால் தான் இவை இரண்டும் வேறு வேறு என்கிறேன். ஆனால் இவை இணையும் ஒரு புள்ளி ஒன்று உண்டு. ஜோதிடம் என்பது பரிசோதனை நிலையம் போன்று உங்கள் ஜாதகம் ஆராய்ந்து இது இப்படி இருக்கிறது என சொல்ல மட்டுமே முடியும். மாற்றம் செய்ய மருத்துவர் போன்று ஆன்மீகவாதிகள் தேவை. அவர்கள் மாற்றம் செய்தபின் தேடினால் ஜாதக பலனும் மாறுபடும். இதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் ஜோதிடத்தின் எல்லையை புரிந்து கொள்ளுங்கள்.

[ திருஞான சம்பந்தரே கோளரு பதிகம் கொடுத்திருக்கார் அதை படித்தால் கிரக கோளாரு நீங்கும் - என திரு,ஷெல்வி கூறுகிறார்.]
ஆம் உணமைதான்... ஆனால் நமக்கு பார்வதி தேவி 3 வயதில் ஞானப்பால் கொடுத்திருந்தால், நாமும் பக்தியில் திருஞானசம்பந்தரை போல இருந்தால் கோளாரு பதிகம் வேலை செய்யும். நீங்கள் அப்படியா என முடிவு செய்து கொள்ளுங்கள்.

13. பரிகாரம் செய்தால் விபத்தே நடக்க கூடாது. பரிகாரம் செய்தால் விபத்து காலில் மட்டும் அடுபட்டு செரியாகும் என்பது உணமையா?
ஜோதிடத்தில் பரிகாரம் இல்லை. அது அளவீட்டு கருவிதான். ஒருவருக்கு விபத்து நடக்கும் என கிரகம் சொல்லுகிறது என்றால் அவர் ஆன்மீக வழியில் ஈடுபட்டால் முற்றிலும் தவிர்க்க முடியும்.  நாகாஸ்திரம் ஏவப்பட்ட நிலையில் அர்ஜுனன் தப்பித்தார் அல்லவா அது போல. பகவான் கிருஷ்ணன்  நாகாஸ்திரத்தை நிறுத்தவில்லை அவர் தேரையே தாழ்த்தினார். பகவானாக இருந்தாலும் உங்களை காப்பாற்றுவார், ஆனால் இயற்கையை தடுக்க மாட்டார்.

14. 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 200க்கு மேல் இறந்திருக்கார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரே ராசியா? ஒரு கிரக அமைப்பா? ஒரே ஜாதகமா?

ஆம் இதில் சந்தேகம் என்ன. ஒரே ராசியாக, ஒரே ஜாதகம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இறப்பை கொடுக்கும் கிரக அமைவுகள் [ மாரக பாதக ஸ்தான இணைவுகள்] ஒன்று போல இருக்கும்.

இறப்பு என்பது நமக்கு ஒரு வித மன ரீதியாக நெகிழ்ச்சி கொடுக்கும் செயலாக இருப்பதால் இப்படி கேள்வி வருகிறது. சென்னையில் ஒரே நாளில் 200 குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இருக்கும் பொழுது , இறப்பும் சாத்தியமே. 

ஜோதிடத்தை பொருத்தவரை இறப்பு / பிறப்பு / கல்வி/ திருமணம் / குழந்தை பேறு என அனைத்தும் நிகழ்வு தான் இதில் செண்டிமெண்டுடன் பார்த்தால் இறப்பு ஒருவித மன அழுத்தத்தை தருகிறது. ஒரு முகூர்த்த நாளில் சென்னையில் மட்டும் 300க்கும் அதிகமான திருமணம் நடக்கும். அதெப்படி ஒரே நாளில் 300 திருமணம்? அனைவருக்கும் ஒரே ராசியா என கேள்வி நமக்கு ஏன் எழவில்லை என சிந்திப்பது நல்லது.


15. சனியால கூட்டு மரணம் ஏற்படும் இந்த ராசியில் சஞ்சரிக்கு பொழுது ஏற்படும்னு சொல்றீங்க.. இது இங்கே தமிழகத்தில்..சென்னையில் நடக்கும் என குறிப்பிட்டு சொல்ல முடியுமா? இது எப்படி எந்த ஊரில் விஜயவாடாவா? டெல்லியா எப்படி தெரிந்து கொள்வது?

சனியின் டிகிரி , சூரியனின் டிகிரி அவற்றை முடிவு செய்யும் என சொன்னேன். ஊரின் ரேகாம்சம் அதனுன் இணைந்து செயல்படும். அதைவைத்தே முண்டேன் ஜோதிடத்தில் சொல்லுவார்கள். இதை தவிர பல நுட்பமான விதிகளும் உண்டு. நம்மை விட வெளி நாட்டினர் முண்டேன் ஜோதிடத்திலும், லோக்கேஷனல் அஸ்ராலஜி என்ற இடம்சார் ஜோதிடத்தில் மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.

16. டெல்லி குஜராத்தில் குழு மரணம் நடக்கும் என்பதை எப்படி சொல்லுகிறீர்கள்?

என் சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி நடக்க வாய்ப்பு இல்லை. காரணம் கிரகங்களின் ரேகாம்சம் குஜராத், டெல்லியை சுட்டிக்காட்டுவதில்லை.

[தலைவர்கள் / பிரதமர் ஜாதகத்தை வைத்து முடிவு செய்ததாக திரு.ஷெல்வி கூறுகிறார். மேலும் தலைவர் ஜாதகம் உண்மை இல்லை என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.

ஒரு ஜோதிடர் தன் கையில் இருக்கும் ஜாதகம் சரியா என பார்க்க தெரிந்திருக்க வேண்டும். ஜாதக தகவல் சரி இல்லை என்றால் தகவலை ஜோதிட ரீதியாக கண்டரிந்து சரி செய்யதெரியவேண்டும். அதை விடுத்து கொடுக்கபட்ட ஜாதகம் தவறாக இருந்தால்  நான் என்ன செய்வது என கேட்பது ஜோதிடம் முழுமையாக கற்ற அறிவை குறிக்காது ]

17. இந்தியாவுக்கு ஜாதகம் போடுவீர்களா? நரேந்திர மோடி ஜாதகம் வைத்து இந்தியாவுக்கு சொல்லுவீர்களா?
18. மாநிலத்திற்கும் ஜாதகம் உண்டா?
19. அந்திர மாநில முதலைமைச்சர் ஜாதகம் சிறப்பா இருக்கு, ஆனா அங்க 100 பேருக்கு ஜாதகம் சரியில்லை என்றால் என்ன  நடக்கும்?
20. சந்திரபாபு நாயுடு ஜாதகம் நாட்டுக்கே பேசுமா?
21. இந்தியாவை ஆள்வது நரேந்திர மோடி என சொல்லி அவர் ஜாதகத்தை பார்ப்பீர்களா? அல்லது ஜனாதிபதியின் ஜாதகம் பேசுமா?
24. ஆள்பவர் ஜாதகமா? இந்தியாவின் பெயர் ராசியா? சுகந்திரம் அடைந்த தேதியா எதைவைத்து சொல்வீர்கள்?

22. முருகேசன் ஜாதகத்தில் தொழில் சரி ஸ்தானம் இல்லை. மனைவி கையெழுத்தில் தொழில் நடக்கும் என்றால் தொழில் கையெழுத்து போடுவது ஜாதகம் மூலமே நடக்கும் அல்லவா?


மேற்கண்ட அனைத்தும் ஜோதிடத்திற்கு முரணான செயல்.
 
விம்சோத்தரி தசா என்பது 120 வருடம் கொண்ட காலக்கணக்கு. இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை கொண்டு ஜாதகம் ஆராய்வதாக கொண்டால், 120 வருடத்திற்கு மேல் இந்தியா இருக்காதா என கேள்வி வரும். அமெரிக்க நாடு தோன்றி 200 வருடங்கள் ஆகிவிட்டது. அமெரிக்கா உருவான தினத்தை கொண்டு ஜாதகம் கணித்திருந்தால் பலன் 120 வருட தசா தீர்ந்த நிலையில் இப்பொழுது வருமா என சிந்திக்க வேண்டும். அப்படியானால் பிரிட்டீஷ் அரசுக்கு எப்படி ஜாதகம் போடுவது? அவர்கள் யாரிடம் இருந்தும் சுகந்திரம் பெறவில்லை. தோற்ற நாள் கிடையாது. அப்படியானால் பிரிட்டனுக்கு ஜாதகமே கிடையாதா?

ப்ரசன்ன ஜோதிடம் என்ற முறையிலேயே இதை பார்க்க வேண்டும். ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம் அந்த நாடு, மாநிலம் மற்றும் குழுவுக்கு செயல்படாது.
இதை புரிந்துகொள்ள சரியான முறையில் முண்டேன் ஜோதிடம் கற்று கொள்ள வேண்டும்.

சந்திரபாபு நாயுடுவின் ஜாதகம் ஆந்திர மக்களுக்கு செயல்படும் எனபது ஜோதிடத்திற்கு முரணான தகவல்.
 
ஒரு பஸ் ட்ரைவர் இருக்கிறார். அவருக்கு இன்று மாரக தசா நடக்கிறது மரணிக்க போகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் பஸ் ஓட்டிக் கொண்டிருக்கிறார். 53 பயணிகள் பஸ்ஸில் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் இறப்பு இல்லை என ஜாதகம் சொல்லுகிறது என வைத்துக்கொள்வோம். பஸ் ட்ரைவர் ஜாதகம் தான் பேசும். அவர் போனால் அனைவரும் இறந்துவிடுவார்கள் என்பதை போன்ற முட்டாள் தனமான ஆய்வு இது.

பிரதமர்கள், முதலமைச்சர்கள் ஜாதகம் மக்களுக்கு நடக்கும் என்றால் சில பிரதமர்கள் கொல்லப்படும் பொழுது நாட்டு மக்களும் அவர்களுடன் சேர்ந்து இறந்திருக்க வேண்டும் அல்லவா?

தலைவர்கள் ஜாதகம் அவர்களின் தனிப்பட்ட பதவி, நிர்வாகம் கட்சி சார்ந்த செயல்பாடு இவைகளையே காட்டும். மக்களின் ஜாதகம் தான் அவர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது. மக்களின் வாழ்வும் அதன் தரமும் உயரும் என இருந்தால் அதன் தாக்கம் தலைவர்களின் செயலில் அது வெளிப்படும். இதற்கு தலைவர்களின் ஜாதகம் ஒத்துழைக்கும்.

என் ஜாதகத்தில் (பத்தாமிடம்) தொழில் ஸ்தானம் சரியில்லை என்றால் என் மனைவி ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் சரியாக இருக்கிறது என ஜோதிடம் சொன்னால் என் மனைவி பெயரில் தொழில் செய்வது என்பது தற்கால நடைமுறையில் இருக்கிறது. ஆனால் உணமையில் இது ஒரு மனரீதியான தீர்வு தானே தவிர உணமையான தீர்வு அல்ல.

என் தொழில் நன்றாக இல்லை தொழில் நன்றாக இருக்கும் ஒருவரின் பெயர் தொழிலை நடத்தும் என்றால் நான் முக்கேஷ் அம்பாணி பெயரில் தொழில் செய்துவிட்டு போகலாமே..!

என் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் சரி இல்லை , என் மனைவுக்கு தான் சரியாக இருக்கும் என்றால் நான் தொழிலை மனைவியிடம் நடத்த சொல்லிவிட்டு வீட்டில் சும்மா இருப்பது நல்லது. அதைவிட்டுவிட்டு பெயரை மட்டும் மாற்றி கையெழுத்து போடும் அதிகாரம் கொடுத்துவிட்டால் தொழில் மாறாது. காரணம் தொழில் முடிவு எடுப்பது நீங்கள் தான். கிரகங்கள் உங்களின் மனதில் இயங்கி முடிவை எடுக்க செய்யும். யார் கையெழுத்திட்டால் என்ன, தவறான முடிவு எடுத்தால் தொழில் என்ன ஆகும் என சிந்தியுங்கள்.

23. ஜோதிடம் ஒரு கணிதம் என்றால் ஏன் ஜோதிடருக்கு ஜோதிடர் ஏன் மாறுகிறது? 2 ம் 2ம் 4 என்றால் எல்லாரும் ஒன்று தானே சொல்ல வேண்டும்?

ஆம் ஒன்று தான் சொல்ல வேண்டும். சரியாக படித்த ஜோதிடர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள். எங்கள் ஜோதிட பயிற்சியில் படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்றாகவே பலன் இருக்கும் முரண்படாது.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நடக்கும் எங்கள் அறக்கட்டளையின் ஜோதிட ஆய்வு வகுப்புக்கு வாருங்கள் அனைவரும் ஒரே பதிலை அளிப்பதை காணலாம்.

[ திரு.ஷெல்வி சொல்லுகிறார் -ஒரே காலேஜில் படித்த மருத்துவரே வேறு வேறு மாத்திரை கொடுப்பாங்க.. ]

ஜோதிடர் மருத்துவர் போன்றவர் அல்ல. அவர்கள் இரத்த பரிசோதகர்களை போன்ற ப்யோடெக்னாலஜிஸ்ட்கள். ஒவ்வொரு ரத்த பரிசோதனையும் வெவ்வேறு தகவல் தந்தால் ஒத்துக்கொள்வீர்களா? ஒன்றாக படிக்கவில்லை என்றாலும் ரத்த பரிசோதகர்களின் முடிவுகள் முரண்படாது.  மருத்துவர்க்கு தேவையான ஆய்வு தகவல் கொடுப்பது தான் இவர்கள் வேலை மருத்துவம் பார்ப்பது அல்ல..!

நாம் யார் என்ன செய்கிறோம் என்ற அடிப்படை விஷயத்திலேயே குழப்பம் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.


25. நீங்கள் ஒரிஜினல் மத்தவங்கள் எல்லாம் போலியா?

சரியான சாஸ்திர அறிவு கொண்டவர்கள் ஒரிஜினல் சுயநலத்திற்காக, பணத்திற்காக மற்றும் பிரபலத்திற்காக ஜோதிடம் பயன்படுத்தினால் போலி என கூறலாம்.

26. அடுத்த முதல்வர் யார் என பொட்டுல் அடிச்ச மாதிரி சொல்லனும்? ஒவ்வொருவர் ஒன்னு சொன்னா சரியா வருமா?

சரியாக ஜோதிட அறிவும் கல்வியும் இருந்தால் பொட்டில் மட்டுமல்ல பூவில், கம்மலில், ஜடையில் என அனைத்திலும் அடித்து சொல்லலாம். :)

27. அரைகுறை ஜோதிடர் நாட்டுக்கு கேடு அல்லவா?
அரைகுறை அறிவு ஜோதிடத்தில் மட்டுமல்ல அனைத்திலும் பிரச்சனையே.

28. ஆள் ஆளுக்கு ஒரு பதில் சொன்னா யாரை நம்புவது?
உங்களுக்கு எந்த பலன் சரியாக இருக்கிறதோ / வாழ்க்கையில் நடக்கிறதோ அதை நம்புவது நல்லது.

29. இதுக்கு சக்சஸ் ரேட் இருக்கா?

ஒவ்வொரு ஜோதிடருக்கும் இருக்கிறது. அவர்களில் ஜோதிட அறிவை பொருத்து மாறும். அனுபவத்தை பொறுத்து மாறாது. சிலர் சொல்லுவார்கள் நாம் 30 வருடமாக ஜோதிடம் பார்க்கிறேன். நான் 40 வருடமாக பார்க்கிறேன். அதனால் சக்சஸ் ரேட் அதிகம் என சொல்லுவது சரி அல்ல.

ஐந்து வருடத்தில் ஒரு பசுமாடு பால் கொடுக்க துவங்கிவிடும். 15 வருடம் ஆனாலும் காளை பால் தராது. 15 வருடம் புல் தின்ற அனுபவம் உண்டு என பால் கறக்க முயற்சி செய்ய கூடாது..! பால் தேடி செல்வது பசுவா காளையா என்பதில் முதலில் உங்களுக்கு தெளிவு வேண்டும்.

30. திருக்கணிதம், வாக்கியம் இதில் எது சரி?
வாக்கியம் என்பதும் திருக்கணிதம் என்பதும் வட மொழி பெயர்களே. வாக்கியம் என்பது பொதுவான கணக்கு. திருக்(Drig) - என்பது திசையை குறிப்பிடுவது. திசை சார்ந்து கணிப்பது திருக்கணிதம்.

வான மண்டலத்தில் உள்ள கிரகத்தின்  நிலையை ஒவ்வொரு நாளுக்கும் முன்கூட்டியே கணித்து வைப்பது தான் பஞ்சாங்கம். பூமியின் நிலையில் இருந்து

சந்திரன் எங்கே இருக்கிறது என கணிப்பதாக வைத்துக் கொள்வோம். பூமியின் விட்டத்திற்கும் சந்திரனின் விட்டத்தை கணக்கிட்டால் நீங்கள் வாக்கிய

பஞ்சாங்கம் செய்கிறீகள் என  அர்த்தம். பூமியில் சென்னையை / டெல்லியை மையமாக கொண்டு சந்திரன் எங்கே இருக்கிறது என கணித்தால் அது

திருக்கணிதம். ரேகாம்சம் / அட்சாம்சம் என்பவை திசை சார்ந்தது.

வாக்கியம் பொதுவாக கணிக்கப்பட்டதால் வாக்கிய கிரக மாற்றம் திருக்கணித கிரக மாற்றத்திற்கு சில நாள் வித்தியாசம் வரும். ஆனால் முற்றிலும் முரண்படாது. உதாரணமாக சனி வாக்கிய பஞ்சாங்கம் பிரகாரம் மேஷத்தில் இருக்கிறது என்றால், திருக்கணிதம் தனுசில் இருக்கிறது என சொல்ல மாட்டார்கள். இன்னும் துல்லியமாக மேஷத்தில் எங்கே இருக்கிறது உங்கள் ஊரின் அடிப்படையில் சொல்லுவார்கள்.

பொது நிகழ்வுகளுக்கு வாக்கிய பஞ்சாங்கம் பார்க்க வேண்டும். உதாரணமாக கோவில் திருவிழா, ஊரில் பொதுவாக கட்டிடம் கட்ட ஆகியவைகள் வாக்கிய பஞ்சாங்கத்தில் முடிவு செய்ய வேண்டும். தனிமனித நிகழ்வுகளுக்கு திருக்கணிதம் படி முடிவு செய்ய வேண்டும். நாம் எந்த ஊரில் வசிக்கிறோமே அதை பொருத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி விழாக்கள் கோவிலில் நடைபெறுவதால் வாக்கிய பஞ்சாங்கத்தில் முடிவு செய்வார்கள். ஏன் என்றால் இது அனைவருக்கும் பொழுதுவான நிகழ்வு.

[ திரு.ஷெல்வி சொல்லுகிறார் - திருத்தி அமைக்கபட்ட வாக்கியம் பஞ்சாங்கம் திருக்கணிதம். வாக்கிய பஞ்சாங்கம் என்றும் திருத்தி அமைக்கப்பட்டது இல்லை. ரிஷிகள் காலத்தில் இருந்தே அப்படி தான் இருக்கிறது. இது ஒன்றே போதும் இவரின் ஜோதிட தெளிவை அறிய.]

31. திருத்தப்பட்டது தானே செல்லும்? ஏன் வாக்கியம் இன்னும் நிலுவயில் இருக்கிறது?
திரு. பாண்டேயின் இந்த கேள்வி மிகச்சரியானது. மேலே நான் சொன்ன விளக்கம் பெற்றால், திரு.பாண்டே இந்த கேள்வி கேட்கமாட்டார். என்ன செய்ய, ஜோதிடத்தின் அடிப்படையான பஞ்சாங்கத்திலேயே குழப்பம் என்றால் திரு.பாண்டே என்ன செய்வார்?

31. ஜனவரி 8 முதல் தேர்தல் சூடு பிடிக்கும்? சரியா?

திரு.ஷெல்வி அவர்கள் -ராகு கேது பெயர்ச்சி அதனால் சூடு பிடிக்கும் என்கிறார். ராகு-கேது பெயர்ச்சி புத்தக விற்பனை வேண்டுமானால் சூடுபிடிக்கும்.

மார்ச் முதல் வாரம் சூடு பிடிக்கும் ஜனவரியில் ஒன்றும் பிடிக்காது. ராகு சிம்ம ராசியில் பிரவேசித்தவிடன் சூரியனின் நட்சத்திரத்தை கடக்கும் வரை தேர்தல் விஷயங்கள் நடைபெறாது. சுக்கிரன் நட்சத்திரத்திற்கு சென்றதும் நடைபெறும்.


32. அடுத்த முதல்வர் யார்? அதிமுக, திமுகா, மக்கள் நல கூட்டணி எது வெற்றி பேரும்?

என் குருஜி ஸ்வாமி ஓம்கார் 2015 அர்ஜண்டினா அதிபர் தேர்தல் பற்றி எழுதி இருந்தார். ஜோதிடத்தில் சொல்வது எளிது.வேறு ஊராக இருந்தால் ஜோதிடத்தில் தெரிந்து கொள்ள தலையை உடைத்துக்கொள்ளலாம். கடந்த 20 வருடங்கள் யார் ஆட்சி செய்கிறார்கள் என பாருங்கள். அடுத்த முதல்வர் யார் என கணித்து தெரிய வேண்டியது இல்லை.

33. எனது கேள்வி தனி நபர் பற்றி இல்லை. கட்சி யார் என கேட்கிறேன்.

கூட்டணியுடன் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். அதாவது தி.மு.க. என்கிற கட்சி. முதல்வர் யார் என நீங்கள் கேட்காததால் கேள்வியை சாய்ஸில் விடுகிறேன்.

35. பேரிடர் தவிர்க்கனும்னா ப்ரார்த்தனை செய்யனும் சரியா?

ப்ரார்த்தனை எப்பொழுதும் செய்ய வேண்டும். பேரிடர் வந்தாலும் சரி பேரானந்தம் வந்தாலும் இறைவனை வணங்க வேண்டும். அதைத்தான் நம் சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

-----------------------------------------------------------

இச்சமயத்தில் திரு. ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் ஜோதிடத்தை ஒரு பொருட்டாக எடுத்து அதை தொலைகாட்சி விவாதமாக்குவதை வரவேற்கிறேன். அதே சமயம் திரு.யதார்த்த ஜோதிடர் போன்ற ஜோதிடர்கள் பிரபலமடைவதற்கு மட்டும் இல்லாமல் பிறருக்கு சரியாக வழிகாட்டவும் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்.  

12 கருத்துக்கள்:

Unknown said...

Right time right answers swami.

geethasmbsvm6 said...

மிக அருமையான தெளிவான விளக்கங்களுக்கு நன்றி! முண்டேன் ஜோதிடம் என்பதைக் குறித்து இன்று தான் கேள்விப் படுகிறேன்.

நிகழ்காலத்தில்... said...

இரண்டு மூனு தடவை படித்துப்பார்க்கனும்.. ஒன்று மட்டும் புரிந்தது.. நீங்கள் ஏன் ஜோதிட வழிகாட்டியாகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் இருக்கீங்க அப்படீங்கற விசயம் தெளிவாகப் புரிந்தது

Amuthan Sekar said...

Why swamiji so much angry with shelvi. I saw that interview on TV. It seemed that Mr. Pandey tried to degrade the Astrology/Astrologers but Shelvi tried to protect and explain the fact. But your view is different...and explanation of answer is excellent.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஸ்ரீராம் ஆதித்யா, கீதா சாம்பசிவம் அம்மா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

ஸ்வாமி ஓம்கார் said...

அமுதன் சேகர், எனக்கு தனிப்பட்ட ரீதியாக எந்த கோவமும் இல்லை. திரு.பாண்டே தாழ்துவதாக கேள்வி இல்லை. திருஷெல்வி ஜோதிடத்திற்கு சரியான பதில் அளிக்காமல் தாழ்த்தினார். முன்னறிவிப்பு இன்றி திடீரென கேள்விகள் கேட்கப்பட்டதால் கூட இருக்கலாம். ஜோதிடத்திற்கு தாழ்ச்சி வருகிறது என்பதாலேயே இந்த கட்டுரை. தனி நபர் சார்ந்து அல்ல.!

Unknown said...

!

sarul said...

Swamiji, thank you for the excellent post.
I have some questions.can you please shine some light on this matter.
when western astrologers are talking about mundane astrology ,they are always consider
neptune and pluto , is this right approach? if so why vedic astrology never talk about neptune and pluto.

Thank you Swamiji.

Amuthan Sekar said...

Dear Swamiji,

Thank you very much for your reply.

Just I expressed my views. Yes Swamiji, you are right. The interview was live programme...so the answers may not be accurate. Your answers are excellent.

நன்றி சுவாமிஜி,
அமுதன் சேகர்

vv9994013539@gmail.com said...

அன்புள்ள ஸ்வாமிக்கு,

தங்கள் மாணவர்களின் பதிலுடன் ஒப்பிட்டு விரிவாக ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையை தெளிவாக ஒப்பிட்மைக்கு வாழ்த்துகள். குறிப்பாக திருகணிதம், வாக்கிய பஞ்சாங்கம், முண்டேன் ஜோதிடம் விளக்கம் அற்புதம்.

திருவண்ணாமலை பயணம் யோகியின் வரலாற்றில் ஆரம்பித்து, காசி பயணங்கள் மற்றும் அகோரிகள் வாழ்க்கை, இதிகாசங்களின் சாங்கிய தத்துவம், சபரிமலையின் உண்மைகள், வேதகால வாழ்க்கை, தாய்மரம், மனித உடல் 5 பற்றியும், ருத்ராட்சம், ஜபமாலை பயன்படுத்தும் முறை அற்புதம்.

ஜோதிட பாடத்தில் ராகு, கேது பற்றிய விளக்கம் அருமை.

வேதகால் வாழ்க்கை, அக்னி ஹோத்ரம் பயன்கள். குருகீதை யில் சொல்லப்பட்ட உபதேசம் கும்பமேள பற்றிய செய்திகள் ஒரு திரைக்கதை வடிவத்தில் கொண்டு சென்றது அற்புதம். அர்ஜண்டினா பயணதில் தங்களுக்கென கட்டப்பட்ட விருந்தினர் இல்லம் பிரமிப்பு கைதிகளுடன் உரையாடல் கண் பார்வை அற்ற மொழிபெயர்ப்பாளரின் திறமை அதனுடன் உங்கள் எழுத்தின் மகிமைக்கு வாழ்த்துகள்.

இதனுடன் தங்கள் எழுத்தில் சுப்பாண்டி கதாபாத்திரம் சேர்த்து படிக்க கலைப்பு இல்லாமல் கொண்டு செல்வது அருமை.

இந்தியகலாச்சாரம் திரைபடங்களில் தவறான பிம்பத்தால் ஏற்படும் பாதிப்பு சாஸ்திரத்தை கேலிக்கையாக காட்டுவதும் வருத்தமே.

வேந்தர் தொலைகாட்சியில் தங்களின் பங்களிப்பு அற்புதம்.

தங்களின் திறமைக்கு நீங்களே இந்திய சாஸ்திரங்களை பற்றி ஒரு திரைக்கதை எழுதி திரைப்படமாக வெளியிட்டால் அனைவரும் பயன் அடைவார்கள்.

தங்களின் எழுத்து பணி தொடருட்டும் வாழ்த்துகள்.

Hariharan Parasuraman said...

Enna swamy prediction thappayiduchi, govt formation..

Unknown said...

Respected swamiji,

From your precise question and answers. Elections results got changed.
Can you we know why ADMK got a good victory over DMK?

Thanks
harikrishnan J