Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, October 24, 2012

பழைய பஞ்சாங்கம் 24-10-2012


பஞ்சாங்கம் ஏன் வரலை? 

பல மாதங்களாக பழைய பஞ்சாங்கம் என்ற தலைப்பில் நான் எழுதவே இல்லை. சிலர் தனி மின்னஞ்சல் அனுப்பி உங்களின் நேரத்தை இப்படி துணுக்கு எழுதி வீணாக்க வேண்டுமா? உங்கள் அறிவுக்கு (?!?!) பல விஷயங்களை எழுதுங்கள் என தூண்டினார்கள்.

வேறு சிலரோ பழைய பஞ்சாங்கம் எழுதுவதை ஏன் நிறுத்தினீர்கள் என கேட்கிறார்கள். நீங்கள் எழுதும் கட்டுரைகள் ஒன்றும் புரியவில்லை. படிப்பதற்கு எளிமையாகவும் நகைச்சுவையாகவும் (?) இருப்பது பழையபஞ்சாங்கம் தான் எழுதுங்கள் என மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்.

எழுத சொன்னதற்காகவோ அல்லது எழுததீர்கள் என சொன்னதற்காகவோ நான் நிறுத்தவில்லை. [சரக்கு இருந்தால் தானே எழுத முடியும் என்பது வேறு விஷயம்] பல முக்கிய தலைப்புகளை எழுதிக்கொண்டிருந்ததால் தற்காலிக விடுமுறை விட்டுவிட்டேன். 

எந்த தலைப்பில் எழுதினாலும் அது பல பகுதிகளாக திரவுபதிக்கு கிருஷ்ணன் அளித்த சேலையை போல நீண்டு விடுகிறது. மீண்டும் சுருக்கமாக எழுத காட்டில் சென்று தவம் இயற்றி வரம் வாங்கலாம் என நினைக்கிறேன். மீண்டும் எழுத துவங்கி விட்டேன் இதோ...!

--------------------------------------

புதிய பஞ்சாங்கம்

ஒவ்வொரு வருடமும் ப்ரணவ பீடம் சார்ப்பில் பஞ்சாங்கம் வெளியிடுகிறோம். இது 8ஆம் வருடம் பஞ்சாங்க வெளியீடு விஜய தசமி அன்று நடந்தது. இந்த பஞ்சாங்கம் ஜோதி
டர்கள் மட்டும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். ஜோதிடம் தெரியாதவர்கள் பார்த்தால் ஒன்றும் புரியாது.

சென்ற வாரம் 2013ஆம் ஆண்டு பஞ்சாங்கம் தயார் செய்து அதில் பிழை திருத்தம் இருக்கிறதா என பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஏதோ வேலையற்று பொழுது போக்க பேப்பர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை போல முகத்தை வைத்துக்கொண்டு என் அருகே உட்கார்ந்திருந்தான் சுப்பாண்டி.

“என்ன சுப்பாண்டி ஒரு மாதிரி இருக்க?” என கேட்டேன். 

“2012 உலக அழியும்னு சொன்னாங்க. நீங்க ஏன் சாமி வெட்டியா 2013க்கு பஞ்சாங்கம் போடறீங்க?” என்றான் சுப்பாண்டி.

பிழை திருத்த வேண்டிய இடம் பஞ்சாங்கம் அல்ல என்பது புரிந்தது.

---------------------------------

தீபாவளி திருநாள்

தீபாவளிக்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். புத்தாடை முதல் பட்டாசு வரை கொண்டாட்டம் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது. தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என பலருக்கு உண்மையான காரணம் தெரியாவிட்டாலும் கொண்டாடாமல் இருப்பதில்லை. தீபாவளி என பின்பற்றாதவர்களும் கூட விடுமுறை நாள் கொண்டாட்டம் என அறிவிக்கிறார்கள்.

தீபாவளியை பல வருடங்களாக நீங்கள் பல்வேறு நிலையில் கொண்டாடி இருப்பீர்கள். இந்த வருடம் வித்தியாசமாக கொண்டாட முயற்சி செய்யலாமா?

அதற்கு முன் ஒரு கதை..!

அசுரர்களுக்கு தங்களை இறைவன் வெறுப்பதாகவும், அசுரர்கள் என ஒதுக்குவதாகவும் மனக்குறை இருந்தது. அதனால் இறைவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அசுரர்களை வெறுப்பதில்லை, அவர்களே அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என அவர்களுக்கு புரியவைக்க ஒரு திருவிளையாடல் புரிந்தார்.

ஒரு அறையில் அமிர்தத்தை கலசங்களில் வைத்து அசுரர்களை சாப்பிட சொன்னார். ஆனால் அவர்களின் கை மூட்டு மடங்காமல் இருக்கும்படி செய்துவிட்டார். அதனால் அமிர்த கலசத்தை கையில் ஏந்தி குடிக்க முடியவில்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டையிட்டு அமிர்தத்தை கீழே கொட்டிவிட்டனர்.

அதே அறையில் அமிர்தத்தை வைத்துவிட்டு தேவர்களை அனுப்பினார். தேவர்கள் முதலில் கைகள் மடங்காமல் இருப்பதனால் சிரமப்பட்டனர். பிறகு உணர்ந்து கலசத்திலிருந்து அமிர்தத்தை கையில் எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டனர். நோக்கம் அமிர்தத்தை குடிப்பது தானே? சுயநலமற்ற நிலையில் அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்தனர் தேவர்கள்.

நீங்கள் இனிப்பு சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட முடியும்?
நீங்கள் உடை உடுத்தினால் ஒரு நேரத்தில் ஒர் உடை தானே அணிய முடியும்?

இதே போல பிறருக்கு இவற்றை அளித்தால் பலர் ஆனந்தம் அடைவார்கள். உங்களுக்கு மட்டும் என்றால் அந்த ஆனந்தத்தில் எல்லை உண்டு. பலருக்கு பகிர்ந்து அளித்தால் ஆனந்தம் எல்லை கடந்து பன்மடங்காகும்.

இப்பொழுது சொல்லுங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடலாம்? அசுரனாகவா? தேவனாகவா?

-------------------------------------------

ஜென்னிசம்

பரந்த அகண்ட 
பெருவிளியில்
அனைத்திலும் என் 
சுவாசமே நிரம்பி இருக்க
சுவாசிக்க மறந்து அதிலேயே
மூழ்கி இறக்கிறேன்

5 கருத்துக்கள்:

Sanjai said...

வழக்கம் போல் அருமை :)
//2012 Dec 21st :P //

//தீபாவளியை எப்படி கொண்டாடலாம்? //
இரண்டும் இல்லாத நிலையில் கொண்டாடலாமே ..

புதுகை.அப்துல்லா said...

// தீபாவளி என பின்பற்றாதவர்களும் கூட விடுமுறை நாள் கொண்டாட்டம் என அறிவிக்கிறார்கள்.

//

ஒரு திராவிடசாமி இப்படி பேசலாமா? :)))

Sivakumar said...

welcome back Swami... on பழைய பஞ்சாங்கம்

Unknown said...

//ஒரு திராவிடசாமி இப்படி பேசலாமா? :)))//

பேரு தான் திராவிட சாமி. உண்மையில ஆரிய சாமி

Pattarai Pandi said...

Kodupathil oru magilchi undu..
aagave.. swami kodukavum.. swami idam irunthu vaanguvathunaalum adiyenuku rettippu santhosham intha Deepavali'yil thaan..

Swami.. oru set thuni parcel please :)