Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, January 11, 2011

சென்னை புத்தக கண்காட்சியில் ஸ்வாமி ஓம்கார்..!

சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு 12ஆம் தேதி புதன் கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி க்குள் வரலாம் என இருக்கிறேன். சென்னையை சேர்ந்த நண்பர்கள் சந்திக்க நினைத்தால் புத்தக கண்காட்சியில் சந்திக்கலாம்.

புத்தக கண்காட்சி பற்றி சுப்பாண்டியுடன் நடந்த பேட்டி..

எந்த ஸ்டாலில் இருப்பீர்கள்? ஸ்டால் எண் என்ன?

அங்கே போண்டா ஸ்டால் இருப்பதாக கேள்வி. அதில் அனேகமாக இருப்பேன்.
சொந்தமாக ஸ்டால் இல்லாதவருக்கு கேண்டீனே சொந்த ஸ்டால்

உங்கள் புத்தகம் இங்கே கிடைக்குமா?

புத்தக கண்காட்சி வெற்றிகரமாக நடக்கும்பொழுதே நீங்கள் ஒரு உண்மையை அறிய வேண்டும். என் ஒரு புத்தகமும் அங்கே கிடைக்காது..!

அப்படியானால் புத்தகத்தில் கையெழுத்து இட்டு தரமாட்டீர்களா?

தாராளமாக, நீங்கள் எந்த புத்தகம் வாங்கி வந்து என்னிடம் கொடுத்தாலும் கையெழுத்து போட்டு தருகிறேன். உங்களின் கோரிக்கையை என்றும் மறுக்கமாட்டேன்

மிக்க மகிழ்ச்சி. சிலர் புத்தக கண்காட்சியில் கையெழுத்து போட ஆயிரம் ரூபாய் பேனா வைத்திருக்கிறார்கள். நீங்களும் வைத்திருக்கிறீர்களா?

நான் பேனாவின் மதிப்பை விட என் கையெழுத்து மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும் என விரும்புபவன். அதனால் பேனா 2 ரூபாயாக இருந்தாலும் என் கையெழுத்து மதிப்பு மிக்கது.

டிஸ்கி : இந்த பேட்டியில் கேள்வி கேட்டவன் நான். பதில் சொன்னவர் சுப்பாண்டி என்பது தனியாக சொல்ல வேண்டியது இல்லை :))

3 கருத்துக்கள்:

Cable சங்கர் said...

சாமி.. நாளை சந்திச்சிருவோம்..

essusara said...

"essence" nandraga purigirathu swami

VIKNESHWARAN ADAKKALAM said...

வரும் போது ஒரு பாட்டில் ரெமி மார்ட்டின் கொண்டு வரவும்....