Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, September 27, 2010

தக்‌ஷிண மேரு - 1000

தென் திசையில் இருக்கும் பெரும் மலை என்ற பொருளில் தக்‌ஷிண மேரு என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆயிரம் வயது....!


பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் பலவும் கடந்த வாரகாலத்தில் பல்வேறு செய்திகளை அளித்தார்கள். பெரிய கோவிலின் சிறப்புகள் மற்றும் சரித்தரத்தை சுவைபட எழுதினார்கள். பிரகதீஸ்வரர் கோவில் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

தஞ்சை பெரிய கோவில் தென்னிந்திய கட்டட கலைகளிலிலும், ஆகம விதியின் அடிப்படையிலும் தனித்துவமாக இருக்கிறது. கருவறைக்கு மேல் விமான அமைப்புக்கு பதிலாக, கருவறைக்கு மேல் பெரிய கோபுரம் கொண்ட கோவிலாக திகழ்கிறது.


கோபுரத்தில் இருக்கும் சிலைகளை பெரிதாக காண படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.

கருவறைக்கு மேல் இருக்கும் கோபுரம் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது. தற்காலத்தில் மட்டுமல்ல இது எக்காலத்திலும் சாத்தியமா என வியக்க வைக்கிறது. திருச்சிக்கு அருகே 60 கிமீ தொலைவில் இருந்து கொண்டு வந்ததை சாதனையாக கூறுகிறார்கள். உண்மையில் கல்லை கொண்டு வருவது சாதனை அல்ல, அந்த கல்லை கொண்டு கோபுரத்தில் சிலைகள், சின்ன சின்ன சிற்பங்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகியவை செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கனக்கான டன் எடை உள்ள கல்லின் எதோ ஒரு முனையில் தவறு செய்தாலும் மொத்த கோபுரமும் வீண் என்பதை நினைவு கொள்ளுங்கள்...!

கோபுரம், கோவில் கருவறை, கருவறைக்குள் இருக்கும் சிவலிங்கம் என அனைத்தும் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது . ஒரே கல்லில் செய்ய வேண்டும் என ஏன் தோன்ற வேண்டும் என்றால் இது ‘ஏகம்’ என்ற ஒருமை தன்மை வாய்ந்த அத்வைத்த கோவில் ஆகும். சிவனை தவிர வேறு எதுவும் வழிபடாத ஒருமை தன்மை வாய்ந்ததாக இருந்து, பின்பு பிற்காலத்தில் மாற்றம் அடைந்தது.
சிவனை மட்டும் முழு முதற்கடவுளாக கொண்டு லிங்கத்தை மட்டுமே மனதில் வைத்து கட்டப்பட்டது. இங்கே சக்திக்கும், நந்திக்கும் முக்கியத்துவம் முன்பு அளிக்கப்படவில்லை. ராஜராஜனுக்கு பிறகு வந்த பல்லவ அரசர்களே தற்சமயம் இருக்கும் நந்தியை ஸ்தாபித்தார்கள். பிற்கால சைவ சிந்தாந்த ஆகம சாஸ்திரங்கள் லிங்கத்தின் அளவுக்கு நந்தி இருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு இவ்வாறு உருவாக்கப்பட்டது.

பெரியகோவிலின் தல விருட்சம் மற்றும் அதன் அடியில் வீற்றிருக்கும் காளியின் அம்சம் கொண்ட ப்ரதியங்கரா தேவி சக்தியாக இக்கோவிலில் விளங்குகிறது.

பூமியில் நிழல் விழுகாத கோபுர கலசம்

கோபுரத்தின் நிழல் கீழே விழுகாது என சிலர் கூறுவார்கள். உண்மையில் கோபுர நிழல் கீழே விழும். ஆனால் கோபுரத்தின் மேல் இருக்கும் கலசம் நிழலில் எப்பொழுதும் தெரியாது. கோபுர கலசம் நிழல் விழுகாது என்ற விளக்கம் நாளடைவில் கோபுர நிழல் விழுகாது என மருவியது.


நவக்கிரங்களின் அமைப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் தனித்தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களும் லிங்க ரூபமாகவே இருக்கிறது. அனைத்து இறை சக்தியையும் லிங்கமாகவே கொண்டு முன்பு கட்டபட்டு பின்பு வந்த அரசர்களால் அது விக்ரஹங்களால மாற்றபட்டது. எனினும் நவகிரஹங்கள் இன்றும் லிங்க ரூபமாகவே இருப்பது தனிச்சிறப்பு.


கோவிலின் பக்கவாட்டு சுவர் பகுதியில் இருக்கும் விஷ்ணு துர்க்கை மிகவும் அழகுவாய்ந்த சொரூபம். என் நினைவுக்கு எட்டியவரை இவ்வளவு அழகுடன் துர்க்கை ரூபத்தை நான் கண்டது இல்லை.

கோவிலின் உள் பிரகாரத்தில் இருக்கும் கற்சங்கிலி மற்றும் கல் ஓடு வேலைகள் சிற்பக்கலையின் உச்சபட்ச சாதனைகள்

முன்பு ஒரு சமயம் நான் சென்ற பொழுது ஒரு அவலத்தை கண்டேன். கல்வெட்டு உள்ள பகுதியில் பொங்கல் பிரசாதம் சாப்பிட்டு விட்டு கைகள் துடைத்து விட்டு சென்று இருந்தார்கள். கல்வெட்டின் எழுத்து இருக்கும் குழிகளில் உணவு துகள்கள் நிரம்பி இருந்தது. வேதனை அடைந்து, என் கைகளில் இருந்த துணியால் அந்த கழிவுகளை துடைக்கும் பொழுது ஒரு கோவில் அதிகாரி நான் கல்வெட்டை சேதப்படுத்துவதாக கடிந்து கொண்டார். ஆயிரம் ஆண்டு விழாவிற்கு கோவில் பொலிவுடன் இருப்பது பெரிய காரியம் அல்ல. உண்மையில் பின்வரும் காலத்தில் அவை காக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் ஆயிரம் வருடத்தை கடந்த பல கோவில்கள் இருக்கிறது. காஞ்சி கைலாச நாதர் ஆலயத்தை பார்த்து தான் ராஜராஜ சோழனுக்கு பெரிய கற்கோவில் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்ததாம். ஆனால் அத்தகைய கோவிலுக்கு எல்லாம் விழா கொண்டாட வில்லை என்பது இத்தருணத்தில் நினைவு கொள்வோம்.

ராஜராஜ சோழன் ஒரு பேரரசனாக, சக்ரவர்த்தியாக, ஜனநாயகத்தை முதலில் அமைத்த மன்னனாக கூறுகிறார்கள். உண்மையில் ராஜராஜ சோழன் ஒரு ஆன்மீக உயர்நிலையில் இருந்தவன். அந்தணர்களிடம் இருந்து சைவ நூல்களை மீட்டு எடுத்தது அவற்றை காக்க முற்பட்டது, பல்வேறு சமயத்திற்கு சம நீதி கொடுத்தது, பிரம்மாண்டமான கோவிலை கட்டி முடித்து பிறகு முடி துறந்து தனிமையில் வாழ்ந்தது என அவரின் ஆன்மீக சுவடுகள் ஏராளம். இன்று அத்தகைய மாமனிதனின் சமாதி கேட்பாரற்று கிடக்கிறது. அந்த சமாதி கோவிலை நிர்வகிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

சதய நட்சத்திரம் கும்பராசியில் பிறந்தவர்கள் நானும் ராஜராஜனும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என கூறிக்கொள்ளலாம்.

பிற்கால சந்ததியினருக்கான தஞ்சாவூர் கல்வெட்டுடன் ஸ்வாமி ஓம்கார் :)

டிஸ்கி : இது எல்லாம் இப்ப எதுக்கு சொல்றேனு நீங்க நினைக்கலாம். தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்டி வச்சா.. நமக்கு பின்னாடி வரும் சந்ததியினர் படிச்சு புரிஞ்சுக்குவாங்கல்லனு...நினைத்தேன். அங்கே இருக்கும் கல்வெட்டுக்கள் இப்பொழுது சேதமடுத்தியும்,இடமாற்றப்படுவதாலும் இங்கே பதிவாக எழுதிவிட்டேன்... அது உங்க மனசுல கல்வெட்டா இருகட்டுமே!

பெரிய கோவில் படங்கள் உதவி : ஸ்வாமி ஓம்கார் :)

23 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//கருவறைக்கு மேல் இருக்கும் கோபுரம் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது. தற்காலத்தில் மட்டுமல்ல இது எக்காலத்திலும் சாத்தியமா என வியக்க வைக்கிறது.// இது நம்பப்படும் பொய், இதைப் பலர் மறுத்து எழுதி இருக்கிறார்கள்.

வாசிக்கவும்
http://pavithra.blogdrive.com/archive/cm-05_cy-2004_m-05_d-02_y-2004_o-0.html

மதி said...

>>>மாமனிதனின் சமாதி கேட்பாரற்று கிடக்கிறது<<<

எங்கு?

>>>பெரிய கோவில் படங்கள் உதவி : ஸ்வாமி ஓம்கார்<<<

இது என்ன விளம்பாரமா :) :)

பொன் மாலை பொழுது said...

// ஆயிரம் ஆண்டு விழாவிற்கு கோவில் பொலிவுடன் இருப்பது பெரிய காரியம் அல்ல. உண்மையில் பின்வரும் காலத்தில் அவை காக்கப்பட வேண்டும். //

இதுதான் விஷயமே! "இதை செய்யவேண்டும் " என்று யாரும் கேட்க வில்லை, போராடவில்ல. ஆனால் தமிழக அரசு இதனை செய்துள்ளது. மனம் திறந்து ஒருவரி பாராட்டி சொல்ல உங்களை போன்ற ஆன்மீக வாதிகளுக்கு கூட வாயடைத்து போனது.
இதுவே ஜெயலலிதா அம்மையார் முதல்வராக இருந்து இந்த விழா நடந்திருந்தால் நீங்கள் எல்லாம் எப்படி அவரை துதித்து கொண்டாடுவீர்கள் என்று நிறைய பார்த்துவிட்டோம்.

எந்த "உயர்நிலைக்கு " போனாலும், போனதாக நினத்துக்கொண்டு, மற்றவரை அப்படி நினைக்க வைத்து நீங்கள் வாழ்ந்தாலும் உங்களை போன்ற வர்களிடம் இருக்கும் இந்த கீழ்மைகுணம்தான் "கருணாநிதி எதிர்ப்பாக " மாறியுள்ளது. பிடிகாதவர்தான் என்றாலும் அவர் செய்யும் நல்ல காரியங்களை பாராட்டுவதே உங்களை போன்ற சான்றோர் கடமை. அதை விட்டு, உங்களிடம் இருக்கும் காழ்ப்பு , கசப்பு உணர்வுகளை கொட்டாதீர்கள்.இந்த குணம் இன்னமும் இருப்பதால் தான் இங்கே ஆரிய, பிராமணீய எதிர்ப்புகளும் இன்றும் தொடர்கின்றன.

உங்களைபோன்றோருக்கு இதே மன நிலை இருக்கும் வரை உங்களுக்கு உள்ள இந்த எதிர்ப்பும் மாறாமலேயே இருக்கும்.

நான் தி.மு.க. காரணம் அல்ல, தி.க. காரனும் அல்ல.

மற்றபடி மிக அழகான படங்கள், பகிர்வுக்கு நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

// திருச்சிக்கு அருகே 60 கிமீ தொலைவில் இருந்து

//

எல்லாரும் இப்படியே சொல்லி எங்க ஊருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பெருமையை குறைக்கின்றனர் :(

அந்தக் கல் எடுத்து வரப்பட்டது புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகருக்கு வெகு அருகில் உள்ள நார்த்தாமலை என்ற இடத்தில் இருந்து. அங்கிருந்து ராஜகுளத்தூர்,குன்னண்டார்கோவில் வழியாக செங்கிபட்டியை அடைந்து பின்னர் செங்கிபட்டியில் இருந்து சாரம் அமைத்து அந்த கல்லை கோபுரத்தின் மேல் ஏற்றியதாக வரலாறு.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. கல்வெட்டுகளில் பிரசாதம் சாப்பிட்ட கையைத் துடைக்கும் நிலை பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் நடக்கிறது. தானாக அவர்கள் திருந்தினால்தான் உண்டு.

வெங்கட்.

Anonymous said...

தென் திசையில் இருக்கும் பெரும் மலை என்ற பொருளில் தக்‌ஷிண மேரு //
நான் தெரிந்து கொண்ட புதிய தகவல் நன்றி

Anonymous said...

காஞ்சி கைலாச நாதர் ஆலயத்தை பார்த்து தான் ராஜராஜ சோழனுக்கு பெரிய கற்கோவில் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்ததாம். ஆனால் அத்தகைய கோவிலுக்கு எல்லாம் விழா கொண்டாட வில்லை என்பது இத்தருணத்தில் நினைவு கொள்வோம்.//
செம பஞ்ச் ..ஆமா ஏன்..?அண்ணா பிறந்த ஊரும் ஆயிற்றே ஏன்..அங்கு பிராமணாள் அதிகமோ ;-))

Anonymous said...

என் கைகளில் இருந்த துணியால் அந்த கழிவுகளை துடைக்கும் பொழுது ஒரு கோவில் அதிகாரி நான் கல்வெட்டை சேதப்படுத்துவதாக கடிந்து கொண்டார்.//
இதுதான் நம்ம ஊர் அதிகாரிகளின் புத்திசாலித்தனம்

கோவி.கண்ணன் said...

எங்கூரு பேச்சு வழக்கில் 'எதைக் கேட்டாலும் பெரிய கோயிலு நந்தி மாதிரி அசையாம நிக்கிறானேம்பாங்க'

Anonymous said...

இப்பதிவில் நான் தெரிந்துகொன்ட தகவல்,கோபுர நிழல் விழும்.ஆனால் கோபுர கலச நிழல் தான் விழாது என்பதை.வரவேற்கிறேன் உங்கள் எழுத்துக்களை.

நிகழ்காலத்தில்... said...

//சதய நட்சத்திரம் கும்பராசியில் பிறந்தவர்கள் நானும் ராஜராஜனும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என கூறிக்கொள்ளலாம்.//

ரொம்பக்கூச்சமா இருக்கு..ஹிஹிஹி

பேப்பரில் படிக்கும்போது சதயநாள் என்று குறிப்பிட்டு இருந்தது. சதயநட்சத்திரம் வரும் நாள்தான் சதயநாளா?

snkm said...

நன்றி! கோபுரத்தில் இருப்பது ஒரே கல் அல்ல! ராஜராஜ சோழரின் சமாதி எங்கு உள்ளது ! அதைத் தெரிவித்தால் முடிந்தவர்கள் செல்வார்களே! நன்றி!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

ஒரே கல் இல்லை என பலர் கூற கேட்டேன். என்னிடம் ஒரே கல் என்பதற்கோ அல்லது இல்லை என்பதற்கோ ஆதாரம் இல்லை.

மேலும் தமிழ் நாட்டின் தொல்லியல் துறை பற்றி எனக்கு நன்றாக தெரியும் :)

நீங்கள் கொடுத்த சுட்டியில் கூட பாருங்கள்.. அந்த அதிகாரி கொத்தனர் சொன்னதாக கூறுகிறார். நாளை வேறு ஒரு கொத்தனர் ஒரே கல் என்றால் அதையும் சரி என்பார்.

பல்வேறு கோணத்தில் புகைப்படம் எடுத்து பார்த்ததில் எனக்கு பல கற்களால் ஆனது என கூற முடியவில்லை.

நீங்களே கூட கீழ்கண்ட இணைப்பில் நேரடியாக கண்டறிய முயற்சி செய்யலாம்.

http://www.view360.in/virtualtour/thanjavur/

Siva Sottallu said...

ஸ்வாமி, உங்களின் தயவால் தஞ்சை கோவிலை சுற்றி வந்தேன்.

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதி திரு snkm,

கும்பகோணம் தாலுக்கா உடையாளூர் என்ற ஊரில் உள்ளது.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

வரலாறு அறிஞ்சர்கள் சொன்னதை தானே நாங்க சொல்றோம் :)

உங்க கன்ஸ்டிடியூஷனை விட்டு கொடுக்க மாட்டீங்களே...சரி சரி நடத்துங்க.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வெங்கட் நாகராஜ்,
திரு சதீஷ் குமார்,
திரு ஆகமகடல்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கக்கு மாணிக்கம்,

எனக்கு அரசியல் தெரியாது. மேலும் பிடிக்காது.

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு விளங்காது.

நீங்கள் எப்படி அரசியல் கட்சி சாராதவரோ அதுபோலவே நான்.

நான் குறிப்பிட்டது அதிகாரிகளை. முக்கியமாக அறநிலைய துறை அதிகாரிகளின் மெத்தன போக்கால் பல கோவில்களின் நிலை வெளியோ சொல்ல முடியாது.

நீங்கள் குறிப்பிட்ட நபர்கள் 5 வருடம் தான் ஆட்சி செய்கிறார்கள். ஆனால் இந்த அதிகாரிகள் 30 வருடம் ஆட்சி செய்கிறார்கள்.

கருத்தை முழுமையாக புரிந்துகொள்வீர்கள் என எண்ணுகிறேன்.

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம் சிவா,
///
ரொம்பக்கூச்சமா இருக்கு..ஹிஹிஹி

பேப்பரில் படிக்கும்போது சதயநாள் என்று குறிப்பிட்டு இருந்தது. சதயநட்சத்திரம் வரும் நாள்தான் சதயநாளா? //

நாம கூச்சபடலாமா? ராஜராஜ சோழன் அல்லவா கூச்சப்படனும் :))

நாள் என்பது தமிழில் நட்சத்திரம் என்பதை குறிக்கும்.

நாள் என்செய்யும் வினைதான் என் செய்யும்...என பாடல் கேட்டதில்லையா? நட்சத்ரா என்ற வடமொழி சொல்லுக்கு தமிழில் நாள் என்று பெயர்.

Sanjai said...

"நமக்கு பின்னாடி வரும் சந்ததியினர் படிச்சு புரிஞ்சுக்குவாங்கல்லனு...நினைத்தேன்"
நல்லது ஸ்வாமி, அப்படியே ஆகட்டும் :)

குசும்பன் said...

//என் கைகளில் இருந்த துணியால் அந்த கழிவுகளை துடைக்கும் பொழுது ஒரு கோவில் அதிகாரி நான் கல்வெட்டை சேதப்படுத்துவதாக கடிந்து கொண்டார்.//

பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு சொன்னதும் சுவருக்கு வலிக்காமல் பிரஷ் செய்யும் சூர்யா மாதிரி நீங்க பக்குவமாக செஞ்சிருக்கனும்:)))

ஸ்வாமி ஓம்கார் said...

//சூர்யா மாதிரி //

நான் அவ்ளோ அலகாவா இருக்கேன் ;)

கோவி.கண்ணன் said...

//
http://www.view360.in/virtualtour/thanjavur///

:)

கிட்ட போய் பார்த்தவங்க சொல்லாததை இந்த 3டி படங்கள் சொல்லிடுமா ?

அவ்வ்வ்வ்