Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, May 19, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ]

பங்கு சந்தை பற்றிய மினி தொடர் ஒன்று எழுதலாம் என்ற எண்ணம் இருந்தது. எனது பணிச்சூழல் கருதி தற்சமயம் எழுத இயலவில்லை. ஆனால் பங்கு சந்தையும் ஜோதிடமும் எப்படி இணையும் என பலருக்கு பல்வேறு கேள்விகள் இருப்பதால் அவற்றை விளக்கும் பொருட்டே இந்த பதிவு. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் [அ.கே.கே- Frequently asked questions] அதற்கான விளக்கமும் இதில் இடம் பெறும்.

1.கேள்வி : பங்கு சந்தை என்பது சூதாட்டம் அல்லவா? அதை ஆன்மீக வழியில் இருக்கும் நீங்கள் தொடர்பு கொள்ளலாமா?

சூதாட்டம் என்றால் என்ன? உங்கள் மனம் யாரோ சொன்ன ஒரு விஷயத்தை கொண்டு கட்டமைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் குறிப்பிடும் சூதாட்டத்தை ஒரு நாள் அனைவரும் புறக்கணித்தால் இந்திய நாடு என்ன ஆகும் தெரியுமா? வெளிப்படையான கணக்குகளுடன் தேர்ந்த பொருளாதார நிபுணர்கள் குழுவுடன் செயல்படும் பங்குசந்தை எப்படி சூதாட்டம் என கூறமுடியும்?

உற்பத்தி விலையை மறைத்து வியாபாரி மற்றொரு விலையில் பொருட்களை விற்கிறார். அவரிடம் உற்பத்தி விலையை கேட்டால் கூறமாட்டார். அவரை நாம் சூது கொண்டவர் என கூறி வியாபாரமே சூதாட்டம் தான் என கூற முடியுமா?

அரசால் அங்கீகாரம் செய்யபட்ட வெளிப்படையாக லாப நஷ்டங்கள் தெரியக்கூடிய விஷயங்கள் எதுவும் சூதாட்டம் ஆகாது. அதிர்ஷ்டம் என்ற தன்மையில் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விதியில் அடிப்படையில் இயங்கி வருமானம் பெருக்கும் விஷயங்கள் சூதாட்டம் ஆகாது.


முன் காலத்தில் உணவு என்பது மிகவும் அத்தியாவசிய விஷயமாக இருந்தது. உணவு கிடைக்காத மனிதனின் ஆன்மீக வளர்ச்சி தடை ஏற்பட்டது. அதனால் ஞானிகளும் ஆன்மீகவாதிகளும் தங்களின் சேவை மூலம் அனைவருக்கும் உணவு வழங்கப்பட வேண்டும் என அன்னதானம் செய்தனர்.

வள்ளலார் இதில் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.

ஆனால் தற்சமயம் இருக்கும் சமூக சூழல் உணவை தாண்டிய நுகர்பொருள் கலாச்சாரத்தில் இருக்கிறது. உணவுடன் மனிதன் திருப்தி அடைவதில்லை. அதனால் தான் தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு அரிசி அளித்தாலும் தொலைக்காட்சி பெட்டியையும் இலவசமாக அளிக்கிறது. அரிசி, தொலைக்காட்சியுடன் தேவை நின்றுவிடுவதில்லையே..!

உங்கள் உணவு, பொருளாதார தேவையை நீங்கள் முழுமையாக பூர்த்தி செய்துகொண்டால் ஆன்மீக வாழ்க்கையில் செல்லும் மனோநிலை ஏற்படும். உங்களுக்கு உணவையும் பொருளையும் கொடுத்து சோம்பேறிகளாக்காமல் உங்களுக்கு அறிவை போதித்து அதன் மூலம் வாழ்க்கை வளத்தை பெருக்குவதே எனது நோக்கம்.

உங்களின் வாழ்க்கைக்கான பொருளாதாரத்தை தேடும் வழி உங்களுக்கு தெரிந்திருந்தால் என் உதவி உங்களுக்கு தேவை இல்லை.

மாறாக பொருளாதார தன்னிறைவு பெறாதவர்களாக இருந்தால் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


2.கேள்வி : பங்கு சந்தையை ஜோதிடம் மூலம் எப்படி கணிக்க இயலும்?

ஜோதிடம் என்பது அடுத்த வினாடி என்ன நிகழும் என கணிக்கும் கருவி. ஜோதிடம் எதிர்காலத்தை கணிக்கும் விஷயம் என்பதால் அடுத்த வினாடியும் எதிர்காலம் தானே? பல்வேறு ஜோதிட முறைகள்

இருந்தாலும் நாங்கள் பயன்படுத்தும் ஜோதிட முறை மிகவும் நுட்பமானது. நட்சத்திர ஜோதிடம் என அதற்கு பெயர்.

நாங்கள் பயன்படுத்தும் ஜோதிடத்தில் -
கிரிகெட்டில் எந்த அணி வெற்றி பெறும்,
எவ்வளவு ரன் எடுப்பார்கள்,
முதலில் எந்த அணி பேட் செய்வார்கள்,
தடைபட்ட மின்சாரம் எப்பொழுது மீண்டும் வரும்,
எம் எதிரில் இருக்கும் மனிதர் மனதில் இருக்கும் விஷயங்கள் என்ன,
கைத் தொலைபேசியில்

அடுத்த அழைப்பு எப்பொழுது வரும் போன்றவற்றை விஷயங்களை கணிக்க முடியும். அவ்வாறு இருக்கும் பொழுது மிக நுட்பமான பங்குசந்தையையும், அதைவிட மிகவும் சிக்கலான எந்த விஷயத்தையும் ஜோதிடத்தில் கையாளலாம்.

கிரகங்களும் நட்சத்திரங்களும் ஒருவித தாக்கத்தை மனித மனதில் ஏற்படுத்துகிறது. அதை பொருத்தே மனிதனின் முதலீடு செய்யும் அமைப்பு இருக்கிறது. முதலீடுகள் எப்படி அமையப்போகிறது என தெரிந்துகொண்டால் அதன் படி நாமும் முதலீடு செய்து லாபம் அடையலாம்.

3. தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் பலர் பங்கு சந்தை நிலவரம் கூறுகிறார்களே அதற்கும் ஜோதிட ரீதியாக சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம் ?

பொருளாதார நிபுணர்கள் தொழில்நுட்ப ரீதியாக செய்திகள் (Technical analysis) கூறும் ஆய்வுகள் மற்றும் முந்தைய பங்குசந்தை வரலாறு அடிப்படையாக கொண்டது. மேலும் இத்தகைய செய்திகள் 30% அளவே வெற்றி வாய்ப்பு கொண்டது என தொழில் நுட்ப நிபுணர்களே கூறுகிறார்கள்.

ஆனால் ஜோதிடத்தில் பங்கு சந்தையை கணிப்பது எளிது. படித்த சில நாட்களிலேயே உங்களால் 80% கணிக்க முடியும். உங்கள் மதி நுட்பத்தால் 80 சகவிகிதம் என்பதை மேலும் அதிகரிக்க முடியும். 80% சதவிகிதம் என்பது பல்வேறு தொழில்நுட்பவாதிகள், பங்கு வர்த்தகர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் முன் நிரூபணம் செய்யப்பட்ட விஷயம்.

4.பங்கு சந்தையில் ஜோதிடத்தைக் கொண்டு எவற்றை எல்லாம் கணிக்கலாம்?

நிஃப்டி என்ற தேசிய பங்கு சந்தையின் போக்கை ஜோதிடம் மூலம் கணிக்கலாம். ஒரு நாளில் சந்தையின் நிலை துவங்கி ஒரு வருடத்திற்கு எவ்வாறு இருக்கும் என கணிக்க முடியும். ஈக்குவிடி மற்றும் டெரிவேட்டிவ் என்ற இரு பகுதியிலும் ஜோதிடத்தில் கணிக்க முடியும்.

கமாடிட்டி மற்றும் கரன்ஸி டிரேடிங் ஆகியவையும் கணிக்கலாம். ஆனால் இவை இரண்டும் முழுமையான சட்ட தெளிவுக்கு வரவில்லை என்பதால் நாங்கள் பயன்படுத்துவதில்லை.

5.ஜோதிடம் மூலம் கணிக்கும் பொழுது என் ஜாதகம் வேண்டுமா?

ஆம். உங்கள் ஜாதகம் இருந்தால் கூடுதல் செளவுகரியம் உண்டு. கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாங்கள் பயன்படுத்தும் ஸ்ரீதிருஷ்டி என்ற பங்கு சந்தை ஜோதிட கோட்பாட்டில் மூன்று நிலைகள் உண்டு.

ஜோதிடம் மூலம் சந்தையை கணித்தல்.
ஜோதிடம் மூலம் தனிமனிதனின் எவ்வளவு லாபம் அடைவார் என நிர்ணயம் செய்யலாம்.
ஜோதிடம் மூலம் ஒருவர் எந்த பங்கு வங்கினால் லாபம் அடையலாம் என கூறமுடியும்.

இதனால் பெரிய லாபங்கள் ஈட்டவில்லை என்றாலும் ஏற்படும் நஷ்டத்தை முற்றிலும் தவிர்க்கலாம். உங்களுக்கு பிறப்பு ஜாதகம் இல்லை என்றாலும் ஆருட ஜாதகம் கணித்து அதே அளவுக்கு பயன்பெற முடியும்.

6.யார் எல்லாம் பங்கு சந்தை ஜோதிடம் பயிற்சி எடுக்கலாம்?

அடிப்படை பங்குசந்தை தெரிந்தவர்கள், இல்லத்தரசிகள், முழு நேரம் பங்கு வர்த்தகத்தை தொழிலாக கொண்டவர்கள். பங்கு வர்த்தகம் செய்ய விரும்புபவர்கள் இதில் பயிற்சி செய்யலாம்.

ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை. பயிற்சியில் பங்கு சந்தைக்கு தேவையான அளவு ஜோதிட விதிகளை கற்றுக்கொடுக்கிறோம். அதனால் ஜோதிடம் கற்றவர்கள், கல்லாதவர்கள் பேதம் இல்லை.

7. ஜோதிடம் மூலம் பங்கு சந்தையை நிர்ணயித்தால் அனைவரும் லாபம் அடைந்துவிடுவார்களே?
உங்களிடம் பயின்றவர்கள் எல்லாம் அதிக லாபம் ஈட்டுகிறார்களா?

ஜோதிடத்தை பங்கு சந்தையில் பயன்படுத்தலாம் என பலருக்கு தெரியாது. 15 கோடிக்கும் மேல் இருக்கும் பங்கு வர்த்தகர்களில் ஆயிரம் பேர் ஜோதிடத்தை பயன்படுத்துகிறார்கள் என்றாலே அது அதிக எண்ணிக்கை.

நாங்கள் கற்றுத்தருவது அதிக லாபம் அடைய அல்ல. தெளிவாக லாபங்கள் அடையவும், நஷ்டத்தை தவிர்க்கவும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஸ்ரீதிருஷ்டி என்ற எங்கள் ஜோதிட முறையில் சரியாக கையாண்டால் முதலீட்டை 10 முதல் 15 சதவீதம் ஒரு மாதத்தில் உயர்த்தலாம். ஆனால் அதிக ஆசையுடன் 50 முதல் 70 சதம் உயர்த்த எண்ணினால் வீழ்ச்சியே மிஞ்சும்.

நிதானமாக முதலீடு செய்து நிரந்தரமாக வருமானம் பார்க்க ஸ்ரீதிருஷ்டி முறை பயன்படும். பணம் இரட்டிப்பு ஆக்கும் முறை அல்ல இது.

என் மாணவர்களில் பலர் நிதானமாக வருமானம் சேர்க்கிறார்கள். நானும் அதன் அடிப்படையிலேயே இயங்குகிறேன்.

[தொடரும்]
----------------------------------------------------
இது போன்று கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்திலோ மின்னஞ்சலிலோ கேளுங்கள் அடுத்த பகுதியில் வெளிவரும்.

வரும் வெள்ளிக்கிழமை அடுத்த வாரம் சந்தை எப்படி இருக்கும் என்ற எனது கணிப்பு வெளிவரும்.

18 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

இப்ப‌வே டிமேட் க‌ண‌க்கு துவ‌ங்குகிறேன்.
ச‌ரியான‌ வ‌ழியில் தானே போகிறேன்?

நகைச்சுவை said...

உங்களுக்கு எதற்கு தேவை இல்லாத வேலை

தனி காட்டு ராஜா said...

//உங்கள் உணவு, பொருளாதார தேவையை நீங்கள் முழுமையாக பூர்த்தி செய்துகொண்டால் ஆன்மீக வாழ்க்கையில் செல்லும் மனோநிலை ஏற்படும்.//

சரியாக சொன்னிர்கள் ......

1.)தாங்கள் பங்கு சந்தை sensex 21000 புள்ளிகள் இருந்த போது,அது இறங்கி 8000 புள்ளிகள் வரும் என்பதை கணித்து இருந்தீர்களா ??


2.)அடுத்த 6 மாதத்தில் sensex எத்தனை புள்ளிகளை தொட வாய்ப்பு உள்ளது ? 21000 புள்ளிகள் டிசம்பர் 2010 இல் சாத்தியமா ??




//தடைபட்ட மின்சாரம் எப்பொழுது மீண்டும் வரும்
கைத் தொலைபேசியில்
அடுத்த அழைப்பு எப்பொழுது வரும் //

எங்களை வச்சு காமெடி கீமடி பண்ணலையே ??

essusara said...

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு பங்கு வணிகம் லாபம் தருமா என்பதை எப்படி அறிவது ?

ஸ்ரீ திருஷ்டி என்பது மென்பொருள் வசதி உள்ள கணிதமா?

மதி said...

சுவாரசியமா இருக்கு.....

>>எங்களை வச்சு காமெடி
கீமடி பண்ணலையே??<<

:)

Ganesan said...

சந்தை குறியீட்டு எண் வரும் ஜூனில் என்னவாக இருக்கும்?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார்,

உங்கள் கருத்து சரியே.

நான் கணித்து கூறுவதை வைத்து நீங்கள் முதலீடு செய்யலாம் என்று பலர் எண்ணுகிறார்கள்.

பங்கு சந்தை ஜோதிடம் என்பதை பயின்று நாமே கணித்து முதலீடு செய்வது என்பதாகும்.

அறிவு கொடுப்பது உடன் என் பணி நிறைவு பெறும். முதலீடும் கணிப்பும் உங்களுடையது.

நான் மீன் பிடித்து கொடுப்பதில்லை..
மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கிறோம்.

Mahesh said...

எனக்கு ரொம்ப ரொம்ப சந்தேகங்கள் இருக்கு..... ஒத்துக்க முடியல.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நகைச்சுவை,
திரு தனிக்காட்டு ராஜா,
திரு மதி,

இத்தனை நாள் ஜோதிடம் என்றால் காது குத்துக்கும் கல்யாணத்திற்கும் பார்க்கும் ஒரு விஷயமாக மட்டுமே உங்கள் மூளை நினைத்துக்கொண்டிருக்கிறது.

அது உங்கள் தவறல்ல ஜோதிடம் என பலர் பயன்படுத்துவது ஜோதிடம் அல்ல.
ஜோதிடத்தை பற்றிய தெளிவான விழிப்புணர்வு பெற்றால் உங்களின் இருள் நீங்கும்.

அதுவரை உங்களை வைத்து தனியாக காமடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. :)

ஸ்வாமி ஓம்கார் said...

பிற கேள்விகள் அடுத்த பதிவில் பதில் அளிக்கப்படும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

//எனக்கு ரொம்ப ரொம்ப சந்தேகங்கள் இருக்கு..... ஒத்துக்க முடியல//


இதே போல முன்பு ஒரு முறை கூறி இருந்தீர்கள்.

உங்கள் கேள்விகளை விளக்கமாக இங்கோ அல்லது மின்னஞ்சலிலோ கேட்டால் என் சிற்றறிவால் தெளிவாக்க முயல்கிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

இப்பொழுது கேள்விகள் இருப்பினும் கேட்கும் எண்ணம் இல்லை - பொறுத்திருந்து பார்ப்போம் - மற்ற தொடர்களையும் படித்து விட்டுப் பிறகு புரியாதனவற்றைக் கேட்போம்

நல்வாழ்த்துகள் ஒம்கார்
நட்புடன் சீனா

Sivakumar said...

ஸ்வாமி,
நான் கரன்ஸி டிரேடிங் செய்ய முடிவெடுத்துள்ளேன்.
தங்களின் பங்கு ஜோதிடத்தை இதில் பயன்படுத்த முடியுமா?
எத்தனை விழுக்காடு வரை கணித்து லாபம் ஈட்ட முடியும்?

jpmeera said...

dear sir,

i have little knowledge about jodhidam and trading. can i learn more from you?

Subbaraman said...

ஸ்வாமி, இதை இணையம் வழியாக கற்றுக் கொள்ள முடியுமா? நன்றி.

ரங்கன் said...

வடக்கே, முக்கியமாக, குஜராத்தில் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை வைத்து பங்கு சந்தையல் இறங்குகிறார்கள்.
பலர் நம்புவதால் ஓரளவுக்கு இந்த வழி பலிக்கின்றது என்பது எனது எண்ணம். ஜோதிடத்தின் மேல் அந்த அளவு நம்பிக்கை இல்லாதிருப்பது (பகுத்தறிவுத் தமிழகத்தில்) என்பதுதான் பொதுவான நடப்பு. மனதில் உள்ளதை தெரிந்துகொள்ள உதவும் என்பது........ கொஞ்சம் அதிகம்தான்.

Arul said...

Shall we learn this share market astrology by internet lessons?If yes kindly share the way to join...

Unknown said...

ந்ல்லாத்தானே போய்கிட்டுருந்தது, உங்களுக்கு என்ன ஆச்சு சுவாமி. ஏன் இந்த் வேண்டாத வேலை.

பெருமாளே பிச்சை எடுக்கிறாரம்,அனுமாருக்கு..... இந்த பழமொழிதான் ஞாபகம் வருது.