Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, October 27, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 5

தாவரங்கள் உருவாவது, வாழ்வது மற்றும் நமக்கு ப்ராண சக்தியை வழங்குவது என அனைத்தும் பிரபஞ்ச சக்தியினால் தான்.

ஒரே மாதிரியான மரக்கன்றுகளை ஒரே நில சூழ்நிலையில் நட்டால் அவற்றின் வளர்ச்சி ஒன்று போல இருக்காது. பூமியில் சில இடங்களில் வனம் இருப்பதற்கும் சில இடங்களில் வனம் அழிந்து அங்கே பேரழிவு ஏற்படுவதற்கும் பிரபஞ்ச சக்தியே காரணம் என்பதை நாம் உணர வேண்டும்.

நம் பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலங்களில் இருந்து பிரபஞ்ச ஆற்றல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரியை படிக்கும் பொழுது உங்கள் மேல் விழும் பிரபஞ்ச ஆற்றலானது பல நூற்றாண்டுகளுக்கு முன் நட்சத்திர மண்டலத்திலிருந்து புறப்பட்டிருக்கும்.
காஸ்மிக் கதிர்கள்

பிரபஞ்ச ஆற்றல் பூமியை வந்து அடையும் வரை ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறது. பூமியின் வளிமண்டலத்தை தொட்டவுடன் தீபாவளி கம்பி மத்தாப்பை போல பல புள்ளிகளாக கிளைவிட்டு பரவுகிறது. இதனால் பூமியின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் பிரபஞ்ச சக்தி பரவுகிறது.

பிரபஞ்ச ஆற்றல் எப்படி பரவும் என்பதற்கு சிறந்த உதாரணம் அறிய வேண்டுமானால் ஒரு நன்கு வளர்ந்த மரத்தை இலையுதிர்காலத்தில் தலைகீழாக பிடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பிரபஞ்ச சக்தி பரவும். இந்த உதாரணம் மூலம் தெரிகிறதா மரத்தின் வடிவம் ஏன் இப்படி இருக்கிறது என்று...! கிளைகள் பிரபஞ்ச சக்தியால் வரும் வடிவமே.
மரத்தின் தலைகீழ் தோற்றம் காஸ்மிக் கதிர் போல இருக்கும் படம்

ஒரு தாவரத்தை சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைத்தால் அவற்றால் உணவு உற்பத்தி செய்ய முடியாது என்கிறது தாவரவியல். ஜன்னலுக்கு அருகில் தாவரம் வைத்தால் அவை தலையை நீட்டி சூரிய ஒளியை நோக்கி செல்லுவதாக பள்ளி பாட புத்தகத்தில் நீங்கள் படித்திருக்கலாம். அத்தகைய விஞ்ஞானம் தற்சமயம் மாற்றம் அடைந்து வருகிறது. அவை தலை நீட்டுவது சூரிய ஒளிக்காக அல்ல. பிரபஞ்ச சக்திக்காக என எதிர்கால பாடபுத்தகங்கள் கூறும்.



காஸ்மிக் கதிர்களை காண்களால் காண விஞ்ஞானம் உருவாக்கிய கருவி.

தற்சமயம் அறிவியல் பிரபஞ்ச சக்தியை பற்றி ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே கண்டறிந்துள்ளது. பிரபஞ்ச ஆற்றலை அளக்கும் கருவியில் கூட மேல் நிலை கதிர்களே அளக்கபடுகிறது. மிகவும் நுண்ணிய கதிர்கள் அளக்க பல முயற்சிகள் நடக்கின்றன. விஞ்ஞானம் காஸ்மிக் கதிர் ஆய்வில் பின்தங்கி இருக்க ஒரு காரணம் உண்டு. மிகவும் எளிமையான ஒரு ஆய்வகம் அமைக்க குறைந்த பட்சம் இருநூறு கோடி ரூபாய் தேவைப்படும்.


மரங்கள் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒரு கேந்திரம். மரங்கள் இல்லாமல் மனிதன் பிரபஞ்ச ஆற்றலை ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அவை மனித உடலுக்கு போதுமானதாக இருக்காது. சில ஆன்மீக பயிற்சியினால் மரங்களின் உதவி இல்லாமல் கூட பிரபஞ்ச சக்தி பெரும் சாத்தியம் உண்டு.

மரங்கள் பிரபஞ்ச சக்தியை உலகுக்கு வழங்கும் என்றால் ஏன் இத்தனை வகை மரங்கள்? ஒரே வகையான மரங்கள் போதும் அல்லவா? மரங்கள் பிரபஞ்ச சக்தியை ஏற்றுக்கொள்ளும் தன்மையும், அவை வெளிவிடும் தன்மைக்கும் பல மாற்றங்கள் உண்டு.

அகஸ்தியரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் உங்களுக்கு இக்கருத்தை மேலும் விளக்கும்.

அகஸ்தியர் கொல்லிமலையில் இருந்த சமயம் ஒரு அபூர்வ மூலிகையை தவறுதலாக பறித்த காரணத்தால் கண்பார்வை இழந்தார்.

கண்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அகஸ்தியரை கண்ட அவரின் சிஷ்யர்கள் வேதனை அடைந்தனர். அகஸ்தியரின் கண்பார்வை மீண்டும் வர என்ன செய்ய வேண்டும் என அவரிடமே கேட்டனர்.

எனக்கு எந்த மூலிகையால் கண்கள் குருடானதோ அந்த மூலிகையை எனக்கு கொடுத்தால் என் கண்பார்வை வரும். எனக்கு சமமான சிஷ்யன் ஒருவன் உண்டு. அவனால் மட்டுமே அது சாத்தியம். பிறர் சென்று அந்த மூலிகையை பார்த்தலே அவர்களும் என்னை போல கண்பார்வை இழப்பார்கள் என்றார்.

சிஷ்யர்களும் தங்கள் குருநாதரின் கண்களை மீட்டுக்கொடுக்கும் அந்த சிஷ்யன் யார் என கேட்டனர். அவர் தேரையர் என்ற ஒரு சிஷ்யன் வடக்கில் வாழ்கிறான் அவனை கூட்டி வாருங்கள் என்றார். தங்களை விட அந்த தேரையர் எந்த வகையில் சிறந்தவர் என கேட்டனர் பிற சிஷ்யர்கள்.

நான் கூறினால் உங்களுக்கு புரியாது. அவன் சகல கலையிலும் வித்தகன். அவனை சந்திக்க இன்றே கிளம்புங்கள். பயணத்தின் வழியில் தங்குவதாக இருந்தால் புளிய மரத்தில் மட்டும் தங்குங்கள் என கட்டளையிட்டார். குருவின் கட்டளையை ஏற்று பயணத்தில் புளிய மரத்தில் மட்டும் ஓய்வு எடுத்தார்கள்.

தேரையரின் இருப்பிடம் செல்லுவதற்குள் அனைவரும் நோயுற்று மிகவும் உடல் நலம் குன்றி நிலைகுலைந்து போனார்கள். இவர்களின் நிலையை பார்த்த தேரையர் என்ன ஆயிற்று என கேட்டார். நல்ல உணவு மற்றும் தூய்மையை பின்பற்றினோம் இருந்தாலும் கொடிய நோய் தாக்கிவிட்டது என்றார்கள். அகஸ்தியர் புளிய மரத்தில் மட்டும் தங்க சொன்னார், குருவாக்கை கேட்டும் எங்கள் நிலை இப்படி ஆகிவிட்டது என கலங்கினார்கள். தங்களுக்கு மருத்துவம் செய்ய கூறி வேண்டினார்கள்.

தேரையர் அவர்களின் வந்த காரியம் அறிந்து தான் அகஸ்தியரை காண வருவதாக கூறினார். மேலும் உங்களுக்கு வைத்தியம் தேவையில்லை என கூறி திரும்பி செல்லும் பொழுது அரச மரத்தை தவிர வேறு எங்கும் ஓய்வு எடுக்க வேண்டாம் என கூறினார்.

அதன்படியே பயணித்த சிஷ்யர்கள் அகஸ்தியரை காண வரும் முன் உடல் நலம் அடைந்தார்கள். சில நாட்களில் அகஸ்தியரிடம் வந்த தேரையர் ஒரு பலகையில் நன்றாக பாதரசம் பூசிக்கொண்டு அதை கண்ணாடி போல பயன்படுத்தி அந்த மூலிகையை பறித்தார். நேரடியாக பார்க்க கூடாது என்பதால் இவ்வாறு செய்தார்.

அகஸ்தியருக்கு கண் ஒளி கிடைத்தது. தேரையரை பற்றிய உள் ஒளி சிஷ்யர்களுக்கு கிடைத்தது.

மரங்கள் அனைத்தும் மனிதனுக்கு நன்மை செய்ய உருவாகவில்லை. சில மரங்கள் மனிதனின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்பது உண்மை. சிலருக்கு மரத்தின் அடியில் தூங்கும் பொழுது ஒரு விதமான அழுத்தத்தை உணர்வார்கள். இதற்கு கிராமத்தில் அமுக்கான் என பெயர். உடலில் பிராண சக்தி இல்லாமல் ஒரு வினாடி நம் உடலும் ஆன்மாவும் செய்யும் போராட்டமே அந்த அமுக்குவதை போன்ற உணர்வு.

இரவில் புளி, முருங்கை மற்றும் வேப்ப மரத்தின் கீழ்படுத்தால் இவ்வாறு உணர்வார்கள். சிலருக்கு வீட்டின் உள்ளே ப்ராண சக்தி கிடைக்காத நிலையிலும் இது ஏற்பட்டுவிடும்.

நம் நெடுஞ்சாலை முழுவதும் புளிய மரம் அமைந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. இதனால் நெடுஞ்சாலைக்கு அருகில் இருக்கும் வீடுகள் மிகவும் பாதிப்படையும் என்பது உண்மை.

ஒரு மரம் நமக்கு நல்ல விதமான ப்ராணனை கொடுக்கிறதா அல்லது கேடு விளைவிக்கும் ப்ராணனை கொடுக்கிறதா என கூறுவது எளிது.

ஒரு மரத்தின் இலைகள் சிறியதாக இருக்க இருக்க அதில் ப்ராணன் குறைவு என்று அர்த்தம். பெரிய இலைகள் மூலம் ப்ராணன் அதிகமாக வெளிப்படும் என அர்த்தம்.

புளிய மரத்திற்கும் அரச மரத்திற்கும் வித்தியாசம் தெரிகிறதா? இதனால் புளியமரத்தில் பேய் இருக்கிறது என்றும் அரசமரத்தில் கடவுள் இருக்கிறார் என்றும் கூறினார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்தும் வைத்தனர். இதன் காரணம் அந்த மரங்களுக்கு இடையே உள்ள ப்ராண ஈர்ப்பை வலுபடுத்தத்தான். அதற்காக ப்ராண சக்தியை பற்றி தெரியாமல் இவைகளுக்கு திருமணம் செய்பவர்களை ஆதரிக்கிறேன் என அர்த்தம் இல்லை. தற்காலத்தில் வேதகாலம் என்ற பெருங்காயம் தீர்ந்து அதன் காலியான பெட்டி மட்டுமே மணக்கிறது.

மிகவும் பெரிய இலையுள்ள மரம் அதிகமான ப்ராணவை வெளிவிடும் அல்லவா? உங்களுக்கு தெரிந்த பெரிய இலை கொண்ட மரம் எது என சொல்லுங்கள் பார்ப்போம்.. உங்கள் வாழ்க்கையில் அது எப்படி இணைந்திருக்கிறது என புரியும்...

(.....வேதம் ஒலிக்கும்)

30 கருத்துக்கள்:

Anonymous said...

Swamiji

Vaalai maram

rgds/thiru

sowri said...

வாழ வைக்கும மரம் வாழைமரம் சரிதானே ஸ்வாமி

யாசவி said...

so interesting

:)

gopi said...

வீட்டின் அருகில் வேப்ப மரம் கூடாதா?
கிருமி நாசினி வகையில் நல்லது தானே ஸ்வாமி

நிகழ்காலத்தில்... said...

\\அதற்காக ப்ராண சக்தியை பற்றி தெரியாமல் இவைகளுக்கு திருமணம் செய்பவர்களை ஆதரிக்கிறேன் என அர்த்தம் இல்லை. தற்காலத்தில் வேதகாலம் என்ற பெருங்காயம் தீர்ந்து அதன் காலியான பெட்டி மட்டுமே மணக்கிறது.\\

தங்களைப் போன்றவர்களினால் மட்டுமே ’பெருங்காயம்’ வாழ்ந்து கொண்டிருக்கிறது :))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திரு,

எப்படி கண்டுபிடிச்சீங்க :) ?

திரு செளரி,

சரிதான்.

திரு யாசவி,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோபி,

வீட்டின் பின் புறம் அல்லது வீட்டின் முன் புறம் சிறிது தள்ளி வேப்ப மரம் இருக்கலாம். படுக்கை அறை ஜன்னலுக்கு அருகில் வேப்ப மரம் இருக்கக்கூடாது.

வேப்ப மரம் வீட்டில் வைக்க வேண்டிய ஒரு மரம் தான். வீட்டில் எப்பகுதியில் மரம் வைத்தால் நன்மை கொடுக்கும் என வரை முறை உண்டு.

வரும் பகுதியில் விளக்கம் தெரியும்,

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

//தங்களைப் போன்றவர்களினால் மட்டுமே ’பெருங்காயம்’ வாழ்ந்து கொண்டிருக்கிறது :))//

அதை புரிந்துகொள்ளாமல் ’பெருங் காயம்’ சிலர் ஏற்படுத்துகிறார்களே :)

Anonymous said...

//திரு திரு,

எப்படி கண்டுபிடிச்சீங்க :) ?//

Ellam thangalidam parugiya arivu amudam Swamiji

rgds/ thiru

Unknown said...

aaga arumaiyana vilakam guruve

Unknown said...

குருஜி தாங்கள் சித்தர்கள் பத்தி என்ன நினைக்கிறார்கள் தாங்கள் அவர்களை பற்றயும் கட்டுரைகள் வெளியிட முயற்சி செய்யலாமே . தங்களிடம் இருந்து இன்னும் நிறைய இது போன்ற பதிவுகளை மேலும் எதிர் பார்கிறேன் நன்றி உங்கள் மாணவன் ந.ல.பிரபாகரன்

ஷண்முகப்ரியன் said...

ஒரு மரத்தின் இலைகள் சிறியதாக இருக்க இருக்க அதில் ப்ராணன் குறைவு என்று அர்த்தம். பெரிய இலைகள் மூலம் ப்ராணன் அதிகமாக வெளிப்படும் என அர்த்தம்.//

இது போன்ற எத்தனை எத்தனை நுணுக்கமான தகவலகள்.
இயற்கையோடு மட்டும் அல்ல,இயற்கையைப் பற்ரிய ஞானத்தோடும் வாழ்ந்திருக்கிறார்கள்,நம் பெரியவர்கள்.

உங்களைப் போன்ற பேருள்ளங்கள்தான் அவர்களை எங்களுக்கு மீண்டும் அறிமுகப் படுத்த முடியும்.
சரணங்கள்,ஸ்வாமிஜி.

Siva Sottallu said...

அருமையான விளக்கம் ஸ்வாமி. மிக்க நன்றி.

இதனால் தான் விசேச நாட்களில் மாவிலை தோரணம் கட்டுகிறாரகளோ...

// அவை தலை நீட்டுவது சூரிய ஒளிக்காக அல்ல //

ஸ்வாமி இது தொடர்பாக என் சில கேள்விகள் , உங்கள் விளக்கம் கிடைக்குன் என்று நம்புகின்றேன்.

1. பிரபஞ்ச சக்தி எப்படியும் உலகம் முழுவதும் பரவுகின்றன, அது வீட்டிற்கு உள்ளேயும் வரப்போவது தானே, அதற்குள் ஏன் இந்த தாவரங்கள் முந்திக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே நீட்டவேண்டும்?


2. பிரபஞ்ச சக்தி இரவு பகலாக பொழிந்துகொண்டு தான் இருகின்றது, தாவரங்களும் மலர்களும் ஏன் இரவில் சுரின்கியும் பகலில் விரிந்தும் இருக்கின்றது?

3. சூரியகாந்தி பூ ஏன் சூரியணன் தொடர்து பயணிப்பது போல் செல்கின்றது ?

4. அம்மை போடும்பொழுது ஏன் வேப்பில்லை அருகில் வைதுகொல்கின்றர்கள்?

fieryblaster said...

i am eagerly expecting your explanations for Siva Sottallu's doubts.

really this write up is interesting.

fieryblaster said...
This comment has been removed by the author.
Astro ganesan said...

my dear guruji
i humbly request you to pass on these kind of information and knowledge to our next generations for whom your followers or disciple as a record . for sure it will stand for eternal for whom its needed. [ i can get lot of information and clear knowledge about our traditional and rituals which we the people forgot in the past and present also,thanks for your kindness for above all
yours affectionately
ganesan

Subbaraman said...

Nandri Swamiji.Thaangal prabanja sakthi yai patri kooriyadhu unmai.Ingu konjam sendru paarungal www.mel-india.com
http://hueindia.mel-global.com/

Sivakumar said...

சுவாமி,

ஆக்ஸிஜனை பிராண சக்தியுடன் குழப்பிக் கொள்கிறார்க-
ள் என்று இவ்வளவு காலமும் நினைத்திருந்தேன். அது
சரிதான் என்பது உங்களின் பதிவைப் பார்த்த பின் அறிந்-
து கொண்டேன்.

கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்ப-
ட்ட குளிரூட்டப்பட்ட உயரமான கட்டிடங்களுக்குள் காஸ்மிக்
எனர்ஜி ஊடுருவுமா

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரபாகரன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

திரு ஷண்முகப்ரியன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

உங்கள் கேள்விக்கான பதில் கீழே...

1. பிரபஞ்ச சக்தி எப்படியும் உலகம் முழுவதும் பரவுகின்றன, அது வீட்டிற்கு உள்ளேயும் வரப்போவது தானே, அதற்குள் ஏன் இந்த தாவரங்கள் முந்திக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே நீட்டவேண்டும்?

சிலருக்கு வீட்டின் உள்ளே ப்ராண சக்தி கிடைக்காத நிலையிலும் இது ஏற்பட்டுவிடும்.
-என எழுதி இருக்கிறேன் பாருங்கள். வெளிச்சூழலில் கிடைக்கும் பிரபஞ்ச சக்திக்கும், உள் அறையில் இருக்கும் பிரபஞ்ச சக்திக்கும் வித்தியாசம் உண்டு. பிரபஞ்ச சக்தியின் வடிவத்தை பாருங்கள். அவை பக்கவாட்டில் செல்லாது. மேலிருந்து கீழ் நோக்கியே வரும். அதனால் அவற்றை பெற தாவரங்கள் தலைநீட்டுகிறது.

இருட்டறையில் ஒரு விளக்கை வைத்தால் கூட அதை சக்தி என நினைக்கும் தாவரங்கள். பிறகு தளர்ந்து இறக்கும்.
சூரியனின் வெளிச்சமா ? வெப்பமா எது தேவை என்பது விஞ்ஞானம் இன்னும் ஆராயும் கேள்வியாக இருக்கிறது.



2. பிரபஞ்ச சக்தி இரவு பகலாக பொழிந்துகொண்டு தான் இருகின்றது, தாவரங்களும் மலர்களும் ஏன் இரவில் சுரின்கியும் பகலில் விரிந்தும் இருக்கின்றது?

தாவரங்கள் மட்டுமல்ல, விலங்குகள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செயல்படுவதில்லை. உயிர்கள் ஒளியை அடிப்படையாக கொண்டு இயங்குவதால் இது நிகழும். அதற்கு சூரியன் வேண்டும் என்பது அர்த்தம் அல்ல.

தாமதமாக சூரியன் மறையும் நாடுகளில் அதுவரை விலங்குகள் செயல்படுவதை காணலாம். இயற்கையாக மனிதனுக்கும் இது ஏற்படும்.

அல்லி மலர் ஏன் இரவில் மட்டும் பூக்கிறது ? அவற்றுக்கு இரவு என்பது எப்படி தெரிகிறது? ஏதேனும் சென்சார் இருக்குமோ?


3. சூரியகாந்தி பூ ஏன் சூரியணன் தொடர்து பயணிப்பது போல் செல்கின்றது ?


ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒவ்வொரு வகை சிறப்பு. சில தாவரம் நீரில் வாழ்வது இயல்பு, சிலவகை சதுப்பு நிலத்தில். அது போல சூரிய காந்தியின் இயல்பு ஒளியை பின்தொடர்வது.. சூரிய காந்தி சூரியனை தொடர்ந்து பயணிப்பதில்லை. ஒரு சக்திவாய்ந்த விளக்கை அதன் அருகில் வைத்தால் சூரியனை மறந்துவிடும். இது தாவரவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மேலும் கவனிக்க... அல்லி, தாமரை, சூரியகாந்தி இவை சூரியன், சந்திரன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக கொண்டாலும், இவை எல்லாம் பூக்கள். இதன் இலைகள், தாவர பகுதிகள் அவ்வாறாக செயல்படுவதில்லை. பூ என்பது தாவரத்தின் கழிவு என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.


4. அம்மை போடும்பொழுது ஏன் வேப்பில்லை அருகில் வைதுகொல்கின்றர்கள்?


வேம்பு, மஞ்சள், உப்பு, மிளகு ஆகியவை கிருமி நாசினி. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க பயன்படும் விஷயம். அம்மை போட்டவர்களுக்கு இவற்றை பயன்படுத்துவது அதனால்தான். மேலும் மாரியம்மன் கோவில்களில் இவை பயன்படுத்துவதன் காரணம் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு தான்.

அம்மை வந்தவர்களை வேப்ப மரத்தின் அடியில் படுக்க வைக்க மாட்டார்கள். வேப்ப இலைகளை பறித்து வந்தே அவர்களின் படுக்கையில் வைப்பார்கள். இது ஏன்? அவர்களை வேப்ப மரத்தின் அடியில் படுக்க வைத்தால் விரைவில் குணம் கிடைக்கும் அல்லவா? நம் முன்னோர்கள் எவ்வளவு முட்டாள்கள் பார்த்தீர்களா?

அப்புறம் அவர்கள் “அருகில் வைதுகொல்கின்றர்கள்?” என சொல்லுகிறீர்களே :)

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி fieryblaster,

திரு ஷோலி கணேசன்,

திரு சுப்புராமன்,

திரு சிவக்குமார்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Siva Sottallu said...

தங்களின் விரிவான மற்றும் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.

// விலங்குகள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செயல்படுவதில்லை. //

ஆந்தையும், வவ்வால்களும் இதற்க்கு விதிவிலக்கு என்று நினைக்கின்றேன்.

முன்னோர்கள் அறிஞர்கள் ஸ்வாமி. வேப்பமரத்தடியில் படுத்தால் ப்ராண சக்தி குறைவாக கிடைக்கும் என்று அதனை முற்றிலும் தவிர்த்து விடாமல், அதன் கிளை மற்றும் இலைகலில் உள்ள பயனை சாமர்த்தியமாக பயன்படித்தியுள்ளனர்.

"அருகில் வைதுகொல்கின்றர்கள்" எழுத்துபிழை ஸ்வாமி, மன்னிக்க வேண்டும்.

Anonymous said...

வாழை மரம் சுவாமி! சரவணா பவன் ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட்டால் நல்ல பிராண சக்தி கிடைக்கும் போல!

Siva Sottallu said...
This comment has been removed by the author.
Siva Sottallu said...

// பெரிய இலைகள் மூலம் ப்ராணன் அதிகமாக வெளிப்படும் என அர்த்தம். //

ஸ்வாமி, இலையுதிர் காலத்தில் மனிதர்களுக்கு ப்ராண சக்தி மிக குறைவாக கிடைக்குமே? அதை எவ்வாறு ஈடுகட்டுவார்கள் ஸ்வாமி?

Anonymous said...

கல்யாண பந்தலில் வாழை மரம் கட்டும் நோக்கமும் இதுதான சுவாமி?

Shri said...

Mango Tree, Banana Tree, Aalamaram.

Shakthiprabha (Prabha Sridhar) said...

நல்ல தகவல் களஞ்சியம். நன்றி

Shri said...

Banana Tree, Mango Tree, Aalamaram,

K DhanaseKar said...

//மரங்களின் உதவி இல்லாமல் கூட பிரபஞ்ச சக்தி பெரும் சாத்தியம் உண்டு//

"பெறும்" சாத்தியம் - அதுதானே சரி.

உங்கள் எழுத்துக்களில் ஓர் தங்குதடை இல்லாமல் சரளமாக வந்து கொண்டிருந்த போது இந்த "பெரும்" என்பது பெரும் பாறையாகி விட்டது.

மற்றபடி, உங்கள் பதிவின் கருத்துச் செறிவையும்,கருத்துகள் சொல்பவர்களின் பதிவுச் செறிவையும் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால் தங்கள் சமிபத்திய பதிலில் பல கேள்விகள் எழும் போது
கேட்காமல் இருக்க முடியவில்லை.

அ. //அவை (பிரபஞ்சம் சக்திகள்) பக்கவாட்டில் செல்லாது//.

பிரபஞ்சம் என்பது தலைக்கு மேல் இருப்பது மட்டும் அல்லவே. நேர்கோட்டிலும், பக்கவாட்டிலும் இருப்பது கூட பிரபஞ்சம் தானே.அதாவது நேர்கோட்டிலிருந்து பார்க்கும் போது 10 லட்சம் கிலோ மீட்டரை தாண்டி இருப்பது பிரபஞ்சம்தானே. எனில் அவை பக்கவாட்டில் செல்லாது என்பது என்ன நியாயம்?

ஆ. // இலைகள், தாவர பகுதிகள் அவ்வாறாக செயல்படுவதில்லை//

முற்றிலுமே முரண்பாடானதாக உள்ளது. தாவரவியலில் "இலையமைப்பு" என்ற பெரும் பகுதியே சூரிய ஒளியை மையமாக வைத்து விவரிக்கப் பட்டுள்ளது. கவணிக்கத் தக்க ஒன்று என்னவெனில் எந்த ஒரு இலையும் மற்றொரு இலையின் ஒளியை மறைப்பதாய் இருக்காது.

உங்களின் ஆழ்ந்த பதிலை எதிர்பார்க்கிறேன்.