Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, February 17, 2009

அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள் - பகுதி இரண்டு

அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.

ஸ்வாமிகள் என்பவர்கள் ஆன்மாவை உணர்ந்தவர்கள், யோகிகள் என்பவர்கள் இறைநிலையில் இரண்டர கலந்தவர்கள், ஞானிகள் என்பவர்கள் இறைவனாகவே
இருப்பவர்கள் என எளிமையாக விளக்கினாலும் உள்நிலையில் ஆன்மீகவாதி எப்படிபட்டவன் என கூறுவது கடினம். ஆன்மீக நிலையில் இருப்பவர்களின் நடை, உடை பாவனையை கொண்டு அவர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என நாம் முடிவு செய்வது கடினம்.

ராமகிருஷ்ணரும், ரமணரும் நமக்கு முன்னே
தற்சமயம் வந்தால் கையில் இருக்கும் நாணயங்களை பிச்சையாக போட்டுவிட்டு கடந்து சென்றுவிடுவோம். உண்மையை அவர்களின் உள்நிலை உயர்வை நாம் உணரும் நிலையில் இல்லை.

காவி உடை அணிந்தவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் என சொல்லிவிட முடியாது, அது போலவே உடைகள் இல்லாமல் இருக்கும் யோகிகள் ஆன்மீகவாதிகள் இல்லை எனவும் சொல்ல முடியாது அல்லவா?

அஹோரி எனும் இத்தகைய யோகிகள் பிரம்மாண்டமானவர்கள் என சொன்னால் மிகையில்லை. தங்களின் இறையாற்றலை உயர்ந்த நிலையில் பயன்படுத்துபவர்கள். தங்கள் வாழ்க்கையையே இறைவனுக்காக அர்ப்பணித்தவர்கள். யோகிகள் இரு நிலையில் வகைப்படுத்தலாம்.அதாவது தன்முனைப்பு கொண்டவர்கள், சமூக முனைப்பு கொண்டவர்கள்.

தன்முனைப்பு கொண்ட யோகிகள் தங்களுக்கு என ஆன்மீக பயிற்சிகள் அமைத்து கொண்டு செயல்படுபவர்கள். சமூக முனைப்பு கொண்டவர்கள் சமூகத்தை அறவழியில் கொண்ட செல்ல செயல்படுபவர்கள்.

யோகிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என சொன்னேன், சில காரணங்களால் சமூகத்துடனும் கலந்து இருப்பார்கள். தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் வரும் எத்தனையோ ஆன்மீகவாதிகளில் இவர்கள் உண்டு. நமக்கு அவர்களை அடையாளம் காண்பது அரிது.

இமாலய மலை பகுதிகளில் ( யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது. கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் யோகிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.

யோகிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. இங்கே உடல் சக்தி என நான் குறிப்பிடுவது பூஸ்ட், காம்ளாண் குடித்து வருவதில்லை. யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள். இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள்.

தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள். யோகிகளில் ஒரு பிரிவினர் ராணுவத்தை போல செயல்படுகிறார்கள். ராணுவ யோகிகள் சிலர் கையில் பெரிய ஆயுதங்களை வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். பாரதத்தில் சுதந்திர போராட்டத்தில் இவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது.

உபநிஷத்தின் வார்த்தையான “சத்ய மேவ
ஜெயதே” ஏன் இந்திய அரசின் தேசிய வார்த்தையாக இருக்கிறது? சுந்திர போராட்டத்தில் ஏன் காந்தி முன்னிருத்தப்பட்டார் ?

தமிழக சமூக சீர்திருத்தவாதிகள் ஏன் அடிக்கடி ரிஷிகேசம் சென்றார்கள் ? என பல காரணங்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். பல நூற்றாண்டுகளாக
இருக்கும் இந்த ராணுவ படை, பல “நற்காரியங்களை” செய்துள்ளது. அவர்கள் செய்த காரியதத்தை சொன்னால் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என களி சாப்பிட வேண்டிவரும்.

நான் கும்பமேளாவில் நாக சன்யாசிகளின் கூடாரத்திற்கு அருகில் தங்க நேர்ந்தது. இருபது மணி நேரத்திற்கு மேலாக ஒரு நூல் கூட அசையாமல் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். ஒரு நாள் சரியாக நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். எனது கூடாரத்தின் வெளியே அமர்ந்திருந்தேன். குளிருக்காக பெரிய மரம் என் முன்னே எரிந்து கொண்டிருந்தது( தூஹ்ணி). யோகிகள் மொத்தம் பத்து முதல் இருபது பேர் இருப்பர்கள். சொல்லிவைத்தாற்போல அனைவரும் எந்த ஒரு சப்தமும் வராமல் எழுந்து நின்றார்கள்.

வரிசையாக நடந்து சென்று கங்கையாற்றில் இறங்கினார்கள். எழுந்து வந்து அருகில் இருக்கும்
மயானத்தின் சாம்பல் கொட்டும் பகுதியில் புரண்டு விட்டு மீண்டும் வந்து தியானத்தில் அமர்ந்தார்கள். இத்தனையும் நடக்கும் பொழுது தங்களுக்குள் அவர்கள் பேசவில்லை. சைகைகாட்டவில்லை. அனைவரும் ஒரே உடலின் உறுப்பு போல கச்சிதமாக செயல்பட்டார்கள். அப்பொழுது தட்பவெப்பம் சுமாராக 4 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.





கும்பமேளாவில் பங்கெடுக்கும் ஆரம்ப நிலை யோகிகளை கொண்ட வீடியோ காட்சி.

கும்ப மேளா என்பது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு. பூமியில் வேறு எந்த பகுதியிலும் நிகழாதவண்ணம் அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா. 2007ஆம்
ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் கலந்து கொண்டார்களாம். அழைப்பிதல் இல்லை, அமைப்பாளர்கள் இல்லை, தொண்டர்படை ஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க , இந்த விழா எப்படி சிறப்பாக நடைபெறுகிறது? ஏதோ ஒரு சூட்சும சக்தி அனைவரையும் வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ, தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை. உயிர்சேதம் இல்லை.

யாரோ ஒருவர் பெரிய லாரியில் கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக தானம் செய்கிறார். மற்றொருவரோ அனைவருக்கும் உணவு பொட்டலங்களை வினியோகம் செய்கிறார். இவர்களை தூண்டியது எந்த சக்தி?

தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும், வைராக்கியமும் அலாதியானது. தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள். யோகிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது. புதிய தலைவரை வணங்கிவிட்டு , பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்...! இவர்களை பொருத்தவரை ரிடையர்மெண்ட் என்பது நேரடியாக செட்டில்மெண்ட் தான்.

மஹாவத்தார் பாபாஜி என பலராலும் அழைக்கப்படுபவர் இமாலயத்தில் வாழ்கிறார் என பலர் சொல்வதுண்டு. இவரை பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறேன். காரணம் ஒரு நடிகர். அவரின் புகழ் பெற்ற படமும்.




சென்ற பதிவில் இருந்த யோகியின் உருவத்தையும் , இவரின் உருவத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். சில உண்மைகள் புரியும். பரமஹம்ஸ யோகானந்தர் எனும் யோகி, தனது வாழ்வில் மஹாஅவதார் பாபாஜியை கண்டார். அதை மனதில் வைத்து வரைந்த உருவம் தான் இது.யோகிகள் பார்ப்பதற்கும் செயல்படுவதிலும் ஒன்று போலவே இருப்பர்கள். இவரை போன்ற அனேக யோகிகள் அருவமாக வாழ்வதுண்டு. யோகிகள் தங்கள் உடலை சில காலத்திற்கு மேல் வைத்திருப்பதில்லை, சூட்சம நிலையில் மாற்றிவிடுகிறர்கள்.

இறந்து போனவரை உயிர்த்தெழுக வைப்பது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.
யோகிகள் உயிர் அற்ற உடலை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என உணர்ந்து கொள்ள பிரிடீஷ் நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கு ஒன்றே சாட்சி.

அந்த வழக்கு...

(தொடரும்)

39 கருத்துக்கள்:

ஷண்முகப்ரியன் said...

அடேங்கப்பா DAVINCI CODE நாவலைப் படிப்பது போல் இருக்கிறது,அகோரிகளின் கதை.மர்மம்,திருப்பம்,ஆன்மீகம் எனச் சரி விகிதத்தில் கலந்த ஒரு விறுவிறுப்பான படைப்பு..THANKS SWAMIJI.

RAHAWAJ said...

ஓம்கார் அவர்களே, தெளிவான விளக்கம்,அறிந்தவர் அறிவாராக

வடுவூர் குமார் said...

சரியான இடத்தில் "தொடரும்" போட்டு அடுத்த பதிவை எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள்.
தெரியாத பல பல விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்துகொள்கிறேன்.

பரிசல்காரன் said...

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. நான் அகோரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள சில தளங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, இது பற்றி நீங்கள் எழுதினால் தேவலாம் என்று நினைத்தேன்.. எழுதிவிட்டீர்கள்!!

ஸ்வாமி ஓம்கார் said...

நன்றி திரு.ஷண்முகப்ரியன்,

டாவின்ஸி என சொல்லி என்னை வம்பில் மாட்டிவிடாதீர்கள் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார், திரு ஜவஹர்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்,

நீங்கள் சொன்னால் நம்பாமல் இருப்போமா? ;)

உங்கள் வருகைக்கு நன்றி

பிரேம்குமார் அசோகன் said...

"ராமகிருஷ்ணரும், ரமணரும் நமக்கு முன்னே தற்சமயம் வந்தால் கையில் இருக்கும் நாணயங்களை பிச்சையாக போட்டுவிட்டு கடந்து சென்றுவிடுவோம்."

நல்ல உவமை. விறுவிறுப்பான தொடர்!!

பிரேம்குமார் அசோகன் said...

பல்வேறு தளங்கள், புத்தகங்கள் வாயிலாக ஏற்கனவே அகோரிகளைப் பற்றி அறிந்துள்ளேன். ஆயினும் அகோரிகளைப் பற்றி நீங்கள் துல்லியமாக விளக்கியுள்ளீர்கள். நான் கடவுள் திரைப்படத்தைப் பார்த்து விட்டேன். கதாநாயகனின் அகோரி பாத்திரம் அதீத முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. தனது கதாநாயகர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதால், அகோரியின் நடவடிக்கையை திரையில் சில திருத்தங்களுடன் காண்பித்துள்ளார் பாலா!!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரேம்,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

GNU அன்வர் said...

வணக்கம் அய்யா தங்களும் வலைபதிவு எழுதுவது மிக்க மமிழ்ச்சி என் அம்மாவின் ஆங்கில பிறந்த தேதி மாதம் அவர்ளுக்கு தெறியவில்லை வருடம் மட்டும்1961 என்று தெறியும் பங்குனி உத்திரம் அன்று பிறந்தார் என்று தெறியும் சரியான ஆங்கில மாதம் தேதி கண்டுபிடிக்க முடியுமா கண்டுபிடித்து தரமுடியுமா இந்த உதவியை செய்தால் நன்றாக இருக்கும்
இதற்றகான என் பதிலை textmails@gmail என்ற முகவஇக்கு அனுப்பினால்
மேலும் எந்த தகவல் தேவைபட்டால் தனிமடலில் தெடர்பு கொள்ளவும் நன்றி

Damodar said...

this post is one of the best ...eagerly awaiting for the next post...

கோவி.கண்ணன் said...

//குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் யோகிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள். //

ஓ, புரிகிறது. மற்றவர்களுக்கெல்லாம் ஊட்டி கொடைக்கானல், சிம்லா, டார்ஜிலிங் போல அவர்கள் ஓய்வெடுக்க கொஞ்சம் பெரிய சுடுகாடு வராணாசி !

வினோத் கெளதம் said...

அருமை..ஆன்மிக விஷயங்களை சிறிது கூட அயர்ச்சி ஏற்படாத வண்ணம் படிக்க தூண்டுக்கிறிர்கள்..நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது..

பாபாஜி அவர்களின் சொந்த ஊர் சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிபேட்டை..
அங்கு அவருக்கு சிறிய கோவில் ஓன்று கூட உண்டு..போய் இருக்கிங்களா.

எம்.எம்.அப்துல்லா said...

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் :)

Anonymous said...

அகொரிகள் மேட்டர் ரொம்ப சுவாரஸ்யமா போகுது ....தொடர்ந்து இதையே எழுதுங்க ....

YOGANANDAM M said...

its intresting

Indira said...

அகோரிகளை பற்றி தப்பாக நினைத்திருந்தேன்...

இப்போதுதான் உண்மை அறிந்தேன்... தெரிய வைத்ததற்கு நன்றி...

அவர்களை பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிடவும்...

அவர்களின் உணவு முறைகளையும் தெரிய படுத்தவும்...

Anonymous said...

ஆஹா கதை நல்ல சுவாரசியமா போகும் பொது தொடரும் போட்டுடீங்களே! நல்ல வேலை விளம்பர இடைவேளை இல்லை. மிகவும் அருமையான பதிவு. ரசித்து படித்தேன். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். இதை நீங்கள் ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும். அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்கவேண்டும் என்பது எனது விருப்பம். இதன் நிகழ்வு உங்கள் கையில்.

கிரி said...

//மஹாவத்தார் பாபாஜி என பலராலும் அழைக்கப்படுபவர் இமாலயத்தில் வாழ்கிறார் என பலர் சொல்வதுண்டு. இவரை பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறேன். காரணம் ஒரு நடிகர். அவரின் புகழ் பெற்ற படமும்.//

சாமி தயவுசெய்து இதற்க்கு பதில் கூறுங்கள்

2000 வருடம் உயிர் வாழ்ந்ததாக (வாழ்வதாக) ரஜினி கூறி இருந்தார் இது குறித்து பல சர்ச்சைகள் வந்தன.

இது பற்றி தங்கள் கருத்து என்ன? இது உண்மையாக இருக்க வாய்ப்புண்டா!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிந்தாமணி,

ஜோதிட ரீதியான தகவல்களுக்கு என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மிஸ்டர் அரட்டை ( இவருக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் போடவேண்டி இருக்கு :)) ),


உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு. கோவி.கண்ணன்,

பெரிய சுடுகாடு என சொல்ல கூடாது. பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சுடுகாடு.

700 முதல் 1000 பிணம் தினமும் எரிக்கிறார்கள். இங்கே பிணம் நாறுவதில்லை. ஏன் என யோசித்து சொல்லுங்கள் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வினோத் கெளத்தம்,

பாபாஜி என்பவர் யார் எனபது ஒரு தனி கேள்வி.

அவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என கூறுவது, ”தென்னாடுடைய சிவனே போற்றி” என புரிந்துகொள்வதை போன்றது.

அந்த கோவிலையும் தரிசித்து இருக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

//கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் :)//

கண்டவர் விண்டிலர்-னு சொல்றதை பார்த்தா.. நீங்க பதிவு போடற மேட்டார் எல்லாம் நீங்க கண்டதானு கேட்கறீங்களா...;) இல்லை கண்டதை ஏன் விண்டறீங்கனு கேட்கறீங்களா? :)

கண்டவர் விண்டிலர் ஆனால், நான் கண்டவன் அல்ல, உரிமை உள்ள சொந்தம் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சதீஷ்குமார், திரு யோகானந்தம், சகோதரி.இந்திரா,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதுரைவீரன்..

கூடிய விரைவில் இது போன்ற ஒரு புத்தகம் வெளிவருகிறது.

உங்கள் யோசனைக்கு நன்றி..

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிரி,

//சாமி தயவுசெய்து இதற்க்கு பதில் கூறுங்கள்

2000 வருடம் உயிர் வாழ்ந்ததாக (வாழ்வதாக) ரஜினி கூறி இருந்தார் இது குறித்து பல சர்ச்சைகள் வந்தன.

இது பற்றி தங்கள் கருத்து என்ன? இது உண்மையாக இருக்க வாய்ப்புண்டா!///

காலம் கடந்த ஞானிகளை இவ்வளவு காலம் தான் உயிர்வாழ்ந்தார் என சொல்லுவது அபத்தம்.
2000 ஆண்டுகளுக்கு முன் மஹாஅவதார் இல்லாததை இவர்கள் பார்த்தார்களா?

இவர்கள் நித்தியமானவர்கள். எப்பொழுதும் இருப்பார்கள். அவர்களுக்கு நாம் கூறும் பெயர்தான் வித்தியாசமானது. உண்மையில் மஹாவதார் பாபாஜியை வேறு பெயர்களில் நாம் வணங்கி வருகிறோம்.

மு. மயூரன் said...

மிகவும் ஆர்வமூட்டும் எழுத்து நடை.

புதிய விஷயங்கள் பலவற்றை அறியத்தருகின்றமைக்கு நன்றி.

//இந்த ராணுவ படை, பல “நற்காரியங்களை” செய்துள்ளது. அவர்கள் செய்த காரியதத்தை சொன்னால் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என களி சாப்பிட வேண்டிவரும்.//

இப்படிச்சொன்னால் எப்படி? தாங்க முடியவில்லை. ஒரு தனி மடலிலாவது அது என்ன என்று சொல்லிவிடுங்களேன். நான் இலங்கையில் இருக்கிறேன். உங்களை பொலிசில் போட்டுக்கொடுக்க மாட்டேன்.. :-)

mmauran@gmail.com

கோவி.கண்ணன் said...

ஸ்வாமி ஓம்கார் said...
திரு. கோவி.கண்ணன்,

//பெரிய சுடுகாடு என சொல்ல கூடாது. பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சுடுகாடு.

700 முதல் 1000 பிணம் தினமும் எரிக்கிறார்கள். இங்கே பிணம் நாறுவதில்லை. ஏன் என யோசித்து சொல்லுங்கள் :)
//

அமிர்தாஞ்சன் தயாரிக்கும் இடத்தில் நின்றுகொண்டு அமிர்தாஞ்சனை உடலில் பூசிக் கொண்டால் வாசனை தனியாக தெரியுமா ?

கோவி.கண்ணன் said...

//பரிசல்காரன் said...
சொன்னால் நம்ப மாட்டீர்கள்..
//

சொன்னால் நம்பவில்லை என்றால் நம்புவது போல் சொல்லுங்க நம்புவார் !
:))))))) சோக்கு !

கோவி.கண்ணன் said...

//அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு//

ஆங்கிலத்தில் சமஸ்கிர சொல் இருப்பதில் வியப்பு இல்லை ஏனெனில் சமஸ்கிரதம் இந்தோ - ஐரோப்பிய பிரிவில் தான் வருகிறது !


வெற்றிக்கும் - விக்ட்றிக்கும் உள்ள தொடர்பு போல் இருக்கு !

காசு - Cash

இப்படி இன்னும் கூறிக்கொண்டே செல்லாம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவியார்..

//அமிர்தாஞ்சன் தயாரிக்கும் இடத்தில் நின்றுகொண்டு அமிர்தாஞ்சனை உடலில் பூசிக் கொண்டால் வாசனை தனியாக தெரியுமா ? //

என்ன ஒரு விளக்கம். மறைமுகமாக ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதை ஆட்சேபிக்கிறேன் :)))

காசியை பற்றிய தொடர் எழுதும் பொழுது சொல்லுகிறேன். காசியில் விஞ்ஞானத்திற்கு எதிராக 5 அதிசயங்கள் நடக்கிறது.


//வெற்றிக்கும் - விக்ட்றிக்கும் உள்ள தொடர்பு போல் இருக்கு !
//


சரி சரி. உங்கள் பார்ப்பனர்கள் சிந்து நதியை கடந்து வந்தவர்கள் எனும் வரலாறுக்கு இது ஒத்துவரலாம்.

ஆரிய மொழியோ சூடான மொழியோ... மனித சிந்தனையும் சப்தங்களும் ஒன்றுதானே?.

மாடுகள் மா என கத்துவதால் மாடுகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து தான் போயிருக்கும் என சொல்லுவதை போல :))

மதுரை சொக்கன் said...

நான் சென்ற கும்பமேளாவின்போது அலஹாபாதில் பணியில் இருந்தேன்.எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு இது.நாகா சாமியார்களை நேரில் கண்டேன். அப்போது எனக்கு அகோரிகள் பற்றித் தெரியாது. மஹாசிவராத்திரியன்று வாரணாசியில் நாகா சாமியார்கள் கோவிலுக்கு ஊர்வலமாகச் செல்வதையும் பார்த்தேன்.அவர்கள் ஜூனா அகாடாவைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். இன்று ஊடகங்களில் அகோரிகள் பற்றிய தவறான தகவல்களே வது கொண்டிருக்கும் நிலையில் உங்கள் பதிவு மிகவும் தேவையான,வரவேற்கத்தக்க ஒன்று.
ஒரு சந்தேகம்.சிவனுக்கு ஐந்து முகங்கள்-சத்யோஜாதம்,வாமதேவம்,அகோரம்,தத்புருஷம்,ஈசானம் என்று.இவற்றுள் மூன்றாவது முகமான அகோரத்தை வணங்குவதால் இவர்கள் ‘அகோரிகள்’ என்று அழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உள்ளது.இது சரியா?தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.

malar said...

நல்லா இருக்குங்க..

பட்டாம்பூச்சி said...

ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது.
ஏதோ மர்ம நாவல் படித்த உணர்வு மேலிடுகிறது.
அகோரிகளை பற்றிய எனக்கு தெரிந்த கருத்துக்கள் சில உண்மை அல்ல என்று புரிந்து கொள்ளவும் மேலும் பல தகவல்களுக்கும் நன்றி.

MK said...

அருமையான‌ ப‌திவு... ப‌திவினூடே நீங்க‌ள் கூறியிருந்த‌... இராம‌த்தேவ‌ர் ம‌ற்றும் யாக்கோபு சித்த‌ர் ஆகியோரைப் ப‌ற்றியும் தெரிந்து கொள்ள‌ ஆவ‌லாக‌ உள்ளேன்... !

முருகன் ஜெயராமன் said...

என்ன ஒரு தொகுப்பு!,இணையதளத்தில் இப்படி ஒரு ஆன்மீக தொடரா!நன்றி குருவே.

aanmigakkadal said...

very nice work
by
www.aanmigakkadal.blogspot.com