Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, February 4, 2009

ஜோதிட கல்வி - பகுதி III

ராசிகள் மற்றும் அதன் பெயர்களை பற்றி தெரிந்து கொண்டோம். இனி ராசிகளின் தன்மைகளை பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு ராசியும் தனக்கென ஓர் தன்மையை கொண்டுள்ளது. இதை பயன்படுத்தினால் பலன் சொல்லும் நிலையில் மேம்மை கிடைக்கும்.


ராசி நிலையில் சர - ஸ்திர - உபய ராசிகள்




சரம் என்பது நகரும் தன்மையை குறிக்கும். ஸ்திரம் என்பது நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும். உபயம் என்பது இரு தன்மைகளையும் குறிக்கும். மேஷம் முதல் துவங்கி ஒவ்வொரு ராசியாக இந்த மூன்று தன்மைகள் நான்கு முறை வரும். [3X4 = 12].

மேற்கண்ட ராசி தன்மையை பலவிதமான பலன் சொல்லுவதற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக ஒருவரின் தொழில் பற்றி ஆராயும் பொழுது , ஜாதகரின் தொழிலை கொடுக்கும் கிரகம் சர ராசியில் இருந்தால், மார்கெட்டிங் சார்ந்த தொழில் செய்வார் என சொல்லலாம். காரணம் அவரின் தொழில் தன்மை ஓர் இடத்தில் இருந்து செயல்படும் நிலையில் இருக்காது. ஸ்திர ராசி சம்பந்தம் இருந்தால் ஓர் இடத்தில் அமர்ந்து வேலை செய்பவராக இருப்பார். அரசு அதிகாரிகள் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

உதாரணத்தை பார்த்தவுடன் உங்கள் ஜாதகத்தை எடுத்து ஆராய வேண்டாம். மேஷ ராசியில் பிறந்தவர்கள் எல்லாம் சர தன்மையில் வேலை செய்வார்கள் என முடிவுக்கு போக வேண்டாம். மேலே உதாரணத்தில் “தொழிலை கொடுக்கும் கிரகம்” என கொடுத்திருக்கிறேன் அல்லவா? ஒருவர் ஜாதகத்தில் தொழிலை கொடுக்கும் கிரகம் எது என தேர்ந்தெடுப்பது பின்னால் உங்களுக்கு கூறுகிறேன். தற்சமயம் ராசியின் தன்மையை மட்டும் கற்றுக்கொள்ளலாம்.

சர ஸ்திர உபய ராசிகளின் தன்மைகளை ஆயுள் அறிய, காணாமல் போனவரை கண்றிய என பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.

ராசி நிலையில் பஞ்சபூதங்கள்





பஞ்சபூதங்களான நெருப்பு,பூமி,காற்று மற்றும் நீர் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பஞ்சபூதம் என நான்கு தன்மைகள் மட்டுமே கூறிகிறேன். ஆகாயம் எனும் தன்மை இதில் இடம் பெறாது. ஏன் தெரியுமா? ராசி மண்டலம் முழுவதும் ஆகாயத்தில் தானே இருக்கிறது. பஞ்ச பூதம் ஒவ்வொன்றிலும் மற்ற நான்கு பூதம் அடக்கம் எனும் வேதாந்தத்தை இங்கே காணமுடிகிறது. நான்கு விதமான தன்மைகள் ராசியில் மூன்று முறை வருவதால் பன்னிரு ராசிகளுக்கும் சமமாகிறது.

பஞ்சபூத தன்மையையும் தொழில், வானிலை அறிதல் போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.


ராசிநிலையில் இரட்டைபடை, பலகால், நான்குகால் ராசிகள்





மேற்கண்ட ராசிகளின் தன்மை மூலம் ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிலையில் அமையும் விஷயத்தை சொல்லலாம். உதாரணமாக இரு தொழில் அமைவது.. ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் இருப்பது என பல உதாரணம் கூறலாம்.

ஒருவர் எப்படி பட்ட வாகனம் வாங்குவார் என்பதை இதன்மூலம் கண்டறியலாம். வாகனத்தை குறிக்கும் கிரகம் இரட்டை ராசியில் இருந்தால் இரு சக்கர
வாகனம் என்றும், நான்கு கால் ராசியில் இருந்தால் நான்கு சக்கர வாகனம் என்றும் சொல்லலாம். லாரி, பஸ் போன்றவை பலகால் ராசி தன்மையில் அமையும்.


ராசிநிலையில் மலட்டு ராசிகள்





மேஷம், மிதுனம்,சிம்மம், கன்னி ராசிகள் மலட்டு ராசிகள் என வழங்கப்படுகிறது. இந்த ராசிகள் குழந்தை பிறப்பை தடை செய்யும். உடனே இந்த நான்கு ராசிகாரர்களுக்கு குழந்தை பிறக்காது என வதந்தியை கிளப்பி விட வேண்டாம். ஒருவரின் ஜாதகத்தில் குழந்தையை குறிக்கும் கிரகம் மலட்டுராசியில் இருக்க வேண்டும். அந்த கிரகத்தை எப்படி தேர்ந்தெடுப்பது என பின்வரும் வகுப்பில் பார்ப்போம்.

மலட்டு ராசிகளின் தொடர்பு எல்லோருக்கும் இருக்கும். ஒருவருக்கு இரண்டு குழந்தை இருக்கிறது என்றால், மூன்றாம் குழந்தையை கொடுக்கும் கிரகம் மலட்டு ராசி தொடர்பு கொண்டு இரண்டுடன் குழந்தை பிறப்பை தடைசெய்யும். முதல் குழந்தையை கொடுக்கும் கிரகமே இவ்வாறு இருந்தால் குழந்தை இல்லாமல் போகும்.

ராசி நிலையில் ஆண் பெண் ராசிகள்





ஆண் ராசிகள் பெண் ராசிகள் என ஒன்று விட்டு ஒன்று ராசியாக பன்னிரு ராசியில் அமைகிறது. கொடுக்கப்பட்ட ஜாதகம் ஆண் ஜாதகமா பெண் ஜாதகமா என பார்க்கவும். பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என கூறவும் இந்த தன்மை பயன்படுகிறது. ஆண்- பெண் தன்மையை குறித்தாலும் உண்மையில் இது எதிர்மறை தன்மையை குறிக்கும் ராசிகள். ஆண் பெண் மட்டுமல்ல இரவு-பகல், மேல்-கீழ் என எதிர்மறை தன்மைகள் அனைத்தையும் இது குறிக்கும்.



ராசிகளின் தன்மைகளை எப்படி மனதில் வைத்துக்கொள்ளுவது?

ராசிகளின் மேற்கண்ட தன்மைகளை எப்படி மனதில் வைத்து கொள்வது என புரியாமல், ஆறாம் வகுப்பு மணவன் போல மனப்பாடம் செய்ய துவங்க வேண்டாம். அதற்காகத் தான் நம் முன்னோர்கள் ராசிகளுக்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். இத்தனை தன்மைகளை ராசிகளின் வடிவத்துடன் ஒப்பிட்டு பாருங்கள் உங்களால் எளிமையாக மனதில் வைக்க முடியும். உதாரணமாக சில...

மேஷ ராசி ஆடு எனும் அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் மேஷ ராசி நான்குகால் ராசி. ஆண் ஆடு என்பதால் ஆண் ராசி, ஆண்களால் குழந்தையை பிரசவிக்க முடியாது என்பதால் மலட்டு தன்மை.

மிதுன ராசி இரு குழந்தைகள் கையில் நாதசுவரத்துடன் இருப்பார்கள். காரணம் மிதுனம் இரட்டை ராசி, நாதஸ்வரம் வைக்க காரணம் அது ஓர் காற்று ராசி. குழந்தைகள் குழந்தையை உருவாக்க முடியாது என்பதால் மலட்டு ராசி.

நவீன அறிவாளிகள் பயன்படுத்தும் மெம்மரி மாப்பிங் (memory mapping) எனும் முறையை நம் முன்னோர்கள் முன்பே பயன்படுத்தி இருக்கிறார்கள். ராசிகளின் வடிவம் அது போல வானத்தில் தெரியாது. ராசிகளை மனதில் வைக்கவே அவ்வாறு வடிவம் கொடுக்கபப்ட்டுள்ளது. ராசிகளின் வடிவத்தை கூர்ந்து கவனித்து ராசிகள் குறிக்கும் தன்மையை புரிந்து கொள்ளுங்கள்.

-----------------------------------------------------------------------------------------------

பதில் நேரம் :

சென்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி :

ஏன் மேஷம் என்ற ராசியை செவ்வாய் குறிக்க வேண்டும்? மகர ராசி - கும்ப ராசியை ஏன் சனி குறிக்க வேண்டும் ?செவ்வாய் கன்னி ராசியை குறிக்க கூடாதா? என கேட்டால் எப்படி விளக்கம் சொல்லுவீர்கள்?

சனி >> குரு >> செவ்வாய் >> பூமி (சந்திரன்) >> சுக்கிரன் >> புதன் >> சூரியன் |
மேற்கண்ட நிலையில் சூரிய மண்டலத்தில் கிரகங்கள் அமைந்திருங்கின்றன. ராசி கட்டத்தை இதனுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

கிரகங்களான சனி,குரு,செவ்வாய்,சுக்கிரன், புதன் ஆகியவை இரு வீடுகளை ஆட்சி செய்கிறது. காரணம் கிரகத்திற்கு நட்சத்திர ஆற்றலை உள்ளே பெற்று எதிரொளிக்கும் தன்மை இருக்கிறது. சென்ற வகுப்பில் சந்திரன் ஓர் உப கிரகம், சூரியன் ஓர் நட்சத்திரம் என படித்தோம் அல்லவா?

இவைகளுக்கு எதிரொளிக்கவோ உள்வாங்கவோ ஒரு தன்மை மட்டுமே உண்டு. அதனால் ஓர் ராசி.

ராகு கேது கிரகமோ, நட்சத்திரமோ, உபகிரகமோ கிடையாது அதனால் அவைகளுக்கு வீடு இல்லை.

ஜோதிடம் என்பது கிரகங்களின் ஆற்றலும் நட்சத்திர ஆற்றலும் பூமிக்கு வரும் அமைப்பை ஆராய்வதால், ராசி மண்டலத்தில் பூமிக்கு இடமில்லை. ராசி கட்டத்தின் நடுவில் பூமி இருப்பதாக கற்பனை செய்யுங்கள். எளிமையாக ராசிகளை ஏன் அந்த கிரகம் ஆட்சி செய்கிறது என விளங்கும்.

நம் முன்னோர்கள் வானவியலில் எவ்வாறு முன்னேற்றம் கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள்

(குடிபோதையில் ஒருவர் ஜோதிடரிடம் வருகிறார்.. )

ஜோதிடர் : உங்க பத்தாவது வீட்டில் குரு இருக்கான்.
வந்தவர் : எப்படி ஜோஷியரே எங்க பக்கதூட்டுகாரன் பத்தியெல்லாம் ஷோக்கா சொல்லரே..
ஜோதிடர் : கஷ்டகாலம்..
வந்தவர் : பரவாயில்லயே என் நெலமையை கரிகிட்டா சொல்லிட்டியேபா..

11 கருத்துக்கள்:

ஷண்முகப்ரியன் said...

பாடங்கள் தெளிவாகவும்,அறிவு பூர்வமாகவும் இருக்கிறது,ஸ்வாமிஜி.நன்றிகள் ஆயிரம்..

krish said...

Excellent way to explain these in a simple manner. Subbaiah Vathiar and You are doing remarkable service for the knowledge of Astrology.

Geekay said...

வணக்கம் சுவாமிஜி,
இன்றைய பாடம் மிக சுலபமாக புரியும்படி உள்ளது.
கேபி முறையில் பாடங்களை கற்க நல்ல புத்தகத்தை பரிந்துரைக்கவும்.
தங்களது ஜோதிட பாடங்களுக்கு நன்றி.

நாமக்கல் சிபி said...

Present Guruji!

Sanjai Gandhi said...

//எங்கிருந்தோ எல்லம் வந்து ஆதரவு தருகிறார்கள்//

சுவாமிஜி, எழுத்துப் பிழை.. :)
ஹிஹி.. தப்பு பன்றவங்களுக்குத் தான் அடுத்தவங்க தப்பு நல்லா தெரியுமாம்.. எழுத்துப் பிழை இல்லாமல் நான் அப்திவு எழுதியதில்லை.. அதான் இங்க கண்டு பிடிச்சிட்டேன்.. :))

Anonymous said...

ராசியின் தன்மை ஞாபகம் வைத்துகொள்ளும் விதம் அருமை. பாடம் புரிந்து கொள்ள எளிதாக உள்ளது. மிக்க நன்றி :)

ஸ்வாமி ஓம்கார் said...

சஞ்சய்,

நேரில் வந்து கலாய்த்தது பத்தாதா ;) ?

உங்கள் சுட்டியை இந்த வலைபகுதியில் காட்டியதற்கு .. அத்தாங்க சுட்டிகாட்டறது...நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

மதுரை வீரன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜீ.கே..

கோ.பி முறையை புத்தகத்தில் படித்தால் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை கே.பி முறையை நேரில் படிக்க முயற்சி செய்யவும்.

sundar said...

Dear Swamiji,
It is great and "made simple" lesson. The expectation really grows.

Thank you,
Sundar

priyamudanprabu said...

அப்பா ரொமப நாளே தேடிக்கிட்டு இருந்தேன் இது போல ஒரு தளத்தை
சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை
ஆனாலும் பலர்(என் தந்தை உட்பட) தீவிரமாக நம்பும் இதில் அப்படி என்ன இருக்கு என்று ஆவல்
சரியாக சொல்ல ஆள் இல்லை
யார் சொல்வது உண்மை என்பதிலும் சந்தேகம்
நீங்க சொல்லுங்க பார்ப்போம்