Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, January 18, 2009

ஜோதிட கல்வி - பகுதி I

ஜோதிடம் எனும் சாஸ்திரம் வேத சாஸ்திரத்தின் ஓர் அங்கம். ஜோதிடத்தை கண்டு பிடித்தது இன்னார் என சுட்டிக்காட்ட முடியாது. சாஸ்திரம் என்பது முற்றிலும் கண்டறியபட்ட மெஞ்ஞானம் என பொருள் கொள்ளலாம். ஜோதிடம் என்பதும் சாஸ்திரம் எனும் தலைப்பிற்கு கீழ் வரும் ஓர் மெஞ்ஞானமாகும்.

தனிஒரு மனிதனால் கண்டுபிடிக்கபட்ட எந்த ஒரு சித்தாந்தமும் விஞ்ஞானம் என்றே அழைக்கப்படும். சாஸ்த்திரங்கள் எல்லாம் யார் கண்டுபிடித்தார் என கூறப்படாமல் இருக்கும், காரணம் அவை இறையருளால் மனித இனத்திற்கு தரப்பட்டது என்பதே உண்மை.

வராக மிஹிரர், பராசரர் மற்றும் ஜெயமினி என்ற முனிவர்கள் கண்டுபிடிக்கவில்லையா என கேட்கலாம். அவர்கள் தெய்வீகம் எனும் நதி வழிந்தோடும் பகுதியின் கரையாக இருந்தார்கள். அதாவது ஜோதிட சாஸ்திரம் உலகுக்கு கொடுக்க இறைவனால் தேர்ந்தெடுக்கபட்ட கருவிகள். சில முட்டாள்கள் ஜோதிடத்தின் வரலாறை சொல்லும் பொழுது “ஆட்டு இடையர்கள் வானத்தை ஆராய நிறைய நேரம் கிடைத்தது அதனால் வானசாஸ்திரத்தை கண்டறிந்து முதலில் அவர்களுக்கு பிடித்த ஆட்டை ராசியின் வடிவமாக கொடுத்தார்கள்” என்கிறார்கள். சிறிது சிந்தித்து பாருங்கள் ஆட்டு இடையர்கள் கண்டறிந்தார்கள் என்றால் இன்றைய ஆட்டு இடையர்கள் ஏன் ஜோதிடர்களாக இல்லாமல் , புதிய கண்டுபிடிப்பு செய்யாமல் வெறும் ஆட்டுக்காரர்களாகவே இருக்கிறார்கள்? விட்டால் ஏசு நாதர் ஆடு மேய்த்தார் அவர்தான் முதல் வானியல் நிபுணர் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.

ஜோதிடத்தின் வரலாற்றை பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாம் ஓய்வாக இருக்கும் சமயம் அதை பற்றி பேசுவோம். இப்பொழுது ஜோதிடம் பற்றி அடிப்படை விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.


கிரகங்களுக்கு உண்மையில் வேலை செய்யுமா?

உங்கள் நண்பர் ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார் என கொள்வோம். உடனடியாக அவரின் வாழ்க்கையை மேம்படுத்தி கோடீஸ்வரர் ஆக்க முடியுமா?
.
.
.
.
முடியாது...
அவரின் சாதாரண நிலையிலிருந்து கீழ் இறக்கி ஒன்றுக்கும் ஆகாதவராக பிச்சை எடுப்பவறாக மாற்ற முடியுமா?
.
.
.
.
.
அதுவும் முடியாது.

உணர்வு நிலையில் தொடர்பு கொண்ட, கண்களால் பார்த்து உணரக்கூடிய உங்கள் நண்பரை இது போல மாற்றம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் பொழுது....

கண்களால் பார்க்க முடியாத.. உணர்வு நிலைக்கு அப்பாற்பட்ட கிரகம் இதை எல்லாம் செய்கிறது என்கிறார்களே அது எப்படி?

சுக்கிரன் வந்தது கோடீஸ்வரன் ஆனார், சனி வந்தது காணாமல் போனார் என்கிறார்களே?

கிரகத்திற்கு உண்மையில் சுயமான சக்தி கிடையாது.


புரிகிறது ... வேறு ஏதோ இணைய தளத்திற்கு வந்துவிட்டோமா என முழிக்கிறீர்கள்.

கிரக சக்தி கண்களுக்கு தெரிவதில்லை. அதனால் ஜோதிடம் இல்லை, கிரக சக்தி இல்லை என சொல்ல முடியாது.

அலைபேசியை உதாரணமாக கொள்வோம். அலைபேசியில் அதன் அலைகள் கண்களுக்கு தெரிவதில்லை. நம்மை ஒருவர் அலைபேசியில் அழைத்தால் அது எந்த திக்கிலிருந்து வருகிறது என நம் கண்களில் தெரிவதில்லை. அதற்காக அலைபேசி என்பது பொய் என நாம் எண்ணுவதில்லை. அதுபோல தான் கிரக சக்தியும்.

கிரகத்திற்கு சக்தி கிடையாது என கூறினேன். ஆனால் சக்தியே கிடையாது என சொல்லவில்லை. கிரகம் தனித்து இயங்காது. ஆனால் நட்சத்திரம் எனும் மாபெரும் சக்தி அதன் பின்புலத்தில் வேலை செய்தால் தான் இயங்க முடியும்.





அலைபேசி எப்படி வேலை செய்கிறது என்பதை ஆராய்தால் நட்சத்திரம் - கிரகம் - மனிதன் எப்படி இயங்குகிது என புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.


அலைபேசியில் ஒருவர் மற்றொருவருக்கு தொடர்பு கொள்கிறார் என்றால் முதலில் அந்த அலைகள் அருகில் இருக்கும் கோபுரத்திற்கு (TOWER) செல்லும் அங்கிருந்து அலைபேசி மாற்றிக்கு (Tele Exchange) செல்லும் பின்பு இதே செயல் நடந்து மற்ற அலைபேசிக்கு சென்றடையும்.

அது போலதான் நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் கிரகத்தினால் பிரதிபலிக்கப்பட்டு நமது தாய் கிரகமான பூமிக்கும் எதிரொளிக்கப்படுகிறது.

மனிதனும் மற்ற ஜீவராசிகளும் ஏன்.. அனைத்தும் இதனால் இயங்குகிறது.




எனவே நட்சத்திரம் இல்லாமல் கிரகங்களும், கிரகங்கள் இல்லாமல் நட்சத்திரமும் பூமிக்கு ஆற்றலை வழங்க முடியாது. இரண்டு விஷயங்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

இங்கு வானவியல் பற்றி பேசவேண்டும். வானவியல் (Astronamy) என்பது ஓர் விஞ்ஞான சித்தாந்தம். கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளி பற்றி ஆராயும் சித்தாந்தம்.

வானவியல் ஜோதிடத்தின் அடிப்படை என சொன்னாலும், முழுமையான வானவியல் நமக்கு பயன்படாது. கிரகங்களின் சுற்றுபாதை, சூரிய மண்டலத்தின் அமைப்பு இதுவெல்லாம் வானவியல் மூலம் நமக்கு கிடைக்குமே தவிர ஜோதிடத்தை பற்றி நாம் இங்கு பேசிய கிரக ஆற்றல் எனும் கருத்து வானவியலில் இல்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள வானவியல் கிரகங்கள் பார்ப்போம்.

1) சூரியன் 2) புதன் 3) சுக்கிரன் 4) பூமி 5) செவ்வாய் 6) குரு 7) சனி 8) யூரைனெஸ் 9 ) நெப்டியுன் 10) ப்ளூட்டோ

இதில் சூரியன் என்பது ஓர் நட்சத்திரம், மற்றவை அனைத்தும் கிரகம். இதில் ப்ளூட்டோ என்பது தற்சமயம் கிரகம் அல்ல என அறிவிக்கப்பட்டுவிட்டது.


ஜோதிட ரீதியான கிரகங்களை பார்ப்போம்.

1) சூரியன் 2) சந்திரன் 3) செவ்வாய் 4) புதன் 5) குரு 6) சுக்கிரன் 7)சனி 8) ராகு 9) கேது.

வானவியல் கிரகத்திலும் , ஜோதிட ரீதியான கிரகத்திலும் எத்தனை வித்தியாசம் பார்த்தீர்களா?
ஜோதிட ரீதியான கிரகங்களில் பூமி என்பது இல்லை, ராகு கேது என்பது புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.




இதற்கு காரணம் என்ன?

வானவியல் என்பது விண்வெளி பொருட்களை கொண்டு ஆய்வு செய்யும் ஓர் அறிவியல், ஜோதிடம் என்பது விண்வெளியில் இருக்கும் ஆற்றல் மண்டலங்களை பற்றி ஆய்வு செய்யும் ஓர் மெய்ஞ்ஞானம்.

நட்சத்திர மண்டலங்கள் மூலம் வெளிப்படும் ஆற்றல் ஆனது பூமிக்கு எந்த பகுதியிலிருந்து பிரதிபலிக்கபடுகிறதோ அந்த பகுதியை கணக்கில் கொண்டு ஆய்வு செய்வது ஜோதிடம். பூமி நாம் இருக்கும் இடம் ஆகையால் இங்கு வந்தடையும் ஆற்றலை தான் நாம் கணக்கிடுவோம், மாறாக பூமியை இதில் இணைக்க முடியாது.

ராகு கேது என்பது என்ன?

விண்ணில் எந்த புள்ளியில் நட்சத்திர ஆற்றல் பிரதிபலிக்கப்படுகிறதோ அப்புள்ளி நமக்கு மிகவும் முக்கியமானது. பூமியின் வட்டபாதையும், சந்திரனின் வட்டப்பாதையும் இணையும் இடத்தில் விண்கற்களோ, விண் தூசுக்களோ இல்லாமல் வெற்றிடமாக வெறுமையாக இருக்கும். இந்த புள்ளியில் ஆற்றல் அதிக அளவில் கடத்தப்படும். ( வெற்றிடத்தில் ஆற்றல் பரவும் என்பது விஞ்ஞான தத்துவமும் கூட)

ராகு-கேது புள்ளிகளில் பூமியின் நிழல் படிவதால் அதை சாயா கிரகம் ( நிழல் கிரகம்) எனவும் அழைக்கிறார்கள்.




ஜோதிட ரீதியான கிரகங்கள் எனும் பட்டியலை பார்த்தீர்களா? அதன் வரிசையை ஞாபகம் வைக்க எளிய வழி உண்டு. ஞாயிறு முதல் சனி கிழமை வரை மனதில் வரிசையாக சொல்லி அத்துடன் ராகு / கேதுவை இணைத்து கொண்டால் போதுமானது.

உலகின் அனைத்து காலண்டரிலும் கிழமை ஒன்றாக இருப்பதன் காரணம் புரிகிறதா?

கிரகத்தை பற்றி புரிந்து கொண்டோம். ராசி மண்டலத்தை பற்றி அடுத்த வகுப்பில் விளக்குகிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :

இன்றைய பாடத்தை பார்த்தோம். இதில் உங்களுக்கு ஓர் கேள்வி.

கிரக ஆற்றல் மனித உடலில் வேலை செய்கிறது என்பதை நிரூபணம் செய்ய சென்னால் உங்களால் முடியுமா? முடியும் என்பவர்கள் அதற்கு தக்க உதாரணத்தை பின்னூட்டம் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாக வோ சொல்லுங்கள். உங்கள் புத்திசாலித்தனத்திற்கான சவால்...

-------------------------------------------------------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள்

[ இந்த பகுதியில் சின்ன சின்ன நகைச்சுவை வெளிவரும். கணமான கருத்துக்களை படித்து விட்டு புன்சிரிப்புடன் நிறைவு செய்வோமே....]

பண்பலை வரிசை [FM] தொகுப்பாளர்
ஜோதிடரே உங்களுக்கு பிடிச்ச பாட்டை சொல்லுங்க,போடறேன்...
ஜோதிடர் : “ நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்”-னு பாட்டு போடுங்க. இந்த பாட்டை என்கிட்ட ஜோசியம் பார்க்கறவங்களுக்கு டெடிகேட் பண்ணறேன்.

19 கருத்துக்கள்:

krish said...

Namaskar Swami,
Thanks for the lesson.

Anonymous said...

அன்புக்குரிய சுவாமிஜிக்கு வணக்கங்கள்.
ஆரம்பப் பாடம் தெளிவாகவும் எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது.
முடிவில் நீங்கள் கேட்டிருந்த கேள்விக்குப் பதில் சொல்லும் ஞானம் எனக்கில்லை.
தங்கள் பாடத்துக்கு நன்றி.
பணிவுடன்,
இயக்குநர் ஷண்முகப்ரியன்.

YOGANANDAM M said...

thanks for your lesson.

I don't the answer

ATOMYOGI said...

வணக்கம் ஸ்வாமிஜி!

ராகு, கேது வுக்கான விளக்கம் அருமை.....

**கிரக ஆற்றல் மனித உடலில் வேலை செய்கிறது என்பதை நிரூபணம் செய்ய சென்னால் உங்களால் முடியுமா?**

டாக்டர் புருனோ அவர்கள் ஒருமுறை தனது பதிவு ஒன்றில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தார்...
" அமாவாசை,பெளர்ணமி நாட்களில் மனித உடலில் குருதி ஓட்டம் அதிகமாக இருக்கும் அதனால் அந்த நாட்களில் அறுவை சிகிச்சைகளை தவிர்க்க வேண்டும்(அதிகமான இரத்தப் போக்கை தவிர்க்க)..."
‍நன்றி: டாகடர் புருனோ

மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலையும் அவ்விரு நாட்களிலும் மோசமாவதையும் காண்கிறோம்....

எங்களது கிராமப்புறங்களில் முதியவர் யாரேனும் மரணப் படுக்கையில் இருந்தால் "பெருசு வர அமாவாசை வரைக்கும் தாங்காதப்பா!!!!" என்ற வார்த்தைகளை சாதாரணமாக கேட்க முடியும்..

மரணத்திற்கும் நிலவுக்கும் என்ன தொடர்பு?

விளக்க வேண்டுகிறேன், ஸ்வாமிஜி?

சிரிக்க சில நொடிகள்:
:‍-)))))))))

krish said...

கிரஹ ஆற்றல் மனித உடலில் வேலை செய்கிறது என்பதை விஞ்ஞான பூர்வமாக விளக்க முடியுமா? விஞ்ஞானம் உலகின் வசப்ட்டது.ஜ்யொதிடம் உலகத்தின் வசப்பட்டதல்ல.

திருநெல்வேலி கார்த்திக் said...

சுவாமிஜியின் முதல் பாடம் அருமை.நன்றி
கார்த்திக்.

ஸ்வாமி ஓம்கார் said...

கிருஷ், ஷண்முக ப்ரியன், யோகாநந்தம், அணுயோகி,கார்த்திக்

ஆகியோருக்கு எனது நன்றிகள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அணுயோகி,

சிந்தித்து உங்களுக்கு தெரிந்ததை சொல்ல சொன்னேன்.
பெளர்ணமி அமாவாசை சில பிரதிபலிப்பை கொடுக்கும் என்றாலும், 100% அதிக இறப்புகள் நடக்கிறது என்றோ, மனநோயாளிகள் பிரச்சனை ஆகிறார்கள் என்றோ சொல்ல முடியாது.

மனநிலைக்கு காரகன் சந்திரன் என்பதால் முடிச்சு போடுகிறார்கள் என்றே சொல்லுவேன்.

சிறிது சிந்தித்து பாருங்கள் நீங்களே பதில் சொல்லலாம். இதற்கு எதற்கு டாக்டரை கூப்பிடுகிறீர்கள்?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிருஷ்,

எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை விஞ்ஞனம் :))

உங்களை விஞ்ஞான ரீதியாக சொல்ல தூண்டவில்லை. இயற்கையாக சொல்லுங்கள். உங்கள் அனுபவத்திலிருந்து சொல்லுங்கள்.

krish said...

Dear Swamiji
My personal experience with astrology made me to study astrology in depth.. I had some problem in my career. One of my client's brother is an astrologer. My client advised me to consult him before taking any drastic decision. I consulted him. We did not tell him the issues involved, but by studing the horoscope, he also follows KP, he told me to be patient. He said I am going through the Chandra Dasa who is the lord of the 8th place and placed in the 8th house.He said once the Chandra sub period is over on 2.7.2007 and Mars sub period starts there will be some improvement. On 3.7.2007 morning around 10 AM there was a sudden solution to the problem out of blue.
For my son he told me the exact date by which he will get his job. Mostlty for non believers these cannot be proof enough unless they experience it themselves, like spriritual experience. If I say the Anahatha Chakra could be felt in Madurai Meenakshi Sanathi, how can I prove to another person. Only another spriritually inclined person will understand and he requires no proof.

krish said...

One correction please. Lord of the 12th House placed in 8th house.

நாமக்கல் சிபி said...

வணக்கம் ஸ்வாமி!

முதல் பாடம் எளிமையாகவும், புரியும் படியும் இருந்தது!

நன்றி!

நாமக்கல் சிபி said...

//இந்த பாட்டை என்கிட்ட ஜோசியம் பார்க்கறவங்களுக்கு டெடிகேட் பண்ணறேன்//

:))

நாமக்கல் சிபி said...

//சிரிக்க சில நொடிகள்//

ஆஹா!

வகுப்புக்கு ஆர்வமா வரவழைக்கும் இந்த பகுதி!

(நமக்கெல்லாம் இப்படி இருந்தாத்தான் பிடிக்கும்)

Geekay said...

வணக்கம் ஸ்வாமி,

முதல் பாடம் அருமையாக இருந்தது.

நன்றி!

நாமக்கல் சிபி said...

முதல் இரண்டு வீடியோ காட்சிகள் நன்றக வருகின்றன!

மூன்றாவதாக போடப்பட்டிருக்கும் Rahu-Kethu.bmp இமேஜ் தெரியவில்லை!

கிளிக் செய்தால் எரர் வருகிறது!
//The request contains an "only-if-cached header and the document does not exist in the cache.//

Expatguru said...

முதற்பாடமே அருமையாக இருந்தது ஸ்வாமிஜி. ராகு கேது பற்றிய தகவல் எனக்கு புதிதான ஒன்று.

//கிரக ஆற்றல் மனித உடலில் வேலை செய்கிறது என்பதை நிரூபணம் செய்ய சென்னால் உங்களால் முடியுமா?//

எனது சிற்றறிவுக்கு தெரிந்ததை கூறுகிறேன். மற்ற காலங்களை பற்றி தெரியாது. ஆனால் சூரிய சந்திர கிரஹணம் சமயங்களில் கடல் அலைகள் சாதாரண காலங்களை விட மிக உயரமாக எழும்புவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். 1982ம் வருடம் ஹைதரபாதில் இருந்த போது முழு சூரிய கிரஹணம் வந்தது. அப்போது மிருகங்களும் பறவைகளும் தவியாய் தவிப்பதை (restless) கண்டிருக்கிறேன். இவை அனைத்தும் மற்ற கிரஹங்கள் மற்றும் நட்சத்திரங்களின் gravityயின் வெளிப்பாடே என்று நினைக்கிறேன். சரியா?

Anonymous said...

My try on the Answer to the question: Cosmic Rays, Microwave radiations, Gravitational forces? I am not sure, but this is just a try from my side. Loved your lesson, simple and vivid.

Bhuvanesh said...

சுவாமி ஜி, நான் என் அறிவிற்கு ஏறியதை சொல்கிறேன்!!

Blood Pressure என்பதே ஒரு வித ஆற்றல் அதானே?