Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, January 20, 2009

இறைவா எங்களை காப்பாற்று....


பிரபஞ்ச நிகழ்வுகள் நமக்கு புரிவதில்லை. மழை பொழிவது எதனால், காற்றடிப்பது எதனால் என விஞ்ஞானம் ஒவ்வொரு காரணம் சொன்னாலும்உண்மையில் இயற்கை நிகழ்வுகள் நடைபெற நமது வான் சூழல் (atmosphere) காரணமாக இருப்பதில்லை.

நமது சூரிய மண்டலத்தில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமது இயற்கைமாற்றத்திற்கும் இயற்கை சீற்றத்திற்கும் காரணமாகிறது.

சூரியனை பூமி சுற்றி வரும் பாதை நீள் வட்டமானது என பள்ளி நாட்களில்படித்திருக்கிறோம். சூரியனுக்கு அருகில் பூமி வரும் சமயம் கோடை காலமாகவும், விலகி இருக்கும் பொழுது குளிர்காலமாகவும் இருக்கும் என விஞ்ஞானம் சொல்லுகிறது. ஆனால் பிற இயற்கை மாற்றத்திற்கு சூரியனையோ, வான் மண்டல நிகழ்வுகளையோ விஞ்ஞானம் சுட்டிக்காட்டுவதில்லை.

நான் மக்களுகான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பொழுதுஎப்பொழுதும் கேட்கப்படும் கேள்வி இது...

இயற்கை சீற்றங்கள் புயல், சுனாமி போன்ற நிகழ்வுகள் வரும் பொழுது இறக்கும்அனைவருக்கும் அந்த நாளில் இறப்பு வரும் என ஜாதகத்தில் இருக்குமா?”

இந்த கேள்வி கேட்கப்படுவதன் காரணம் நாம் இறப்பு எனும் நிகழ்வில் காட்டும் சோகமும், இழப்பு எனும் மனோபாவமும்.

ஒரு நகரில் தினமும் எத்தனையோ குழந்தைகள் பிறக்கிறார்கள். ஒரே நாளில் இத்தனை பேர் பிறக்க வாய்ப்பு இருக்கும் பொழுது இறக்கவும் வாய்ப்பு இருக்கிறதே.?

இயற்கை சீற்றங்களுக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

கடல், மலை, வெளி என அனைத்து இயற்கை சூழலையும் மனிதன் மாசுபடுத்தி வருகிறான் . இயற்கையை மனிதன் சுரண்ட சுரண்ட இயற்கை தான் எத்தனை பெரியவன் எனகாட்டும்.

மனிதன் எப்பொழுதும் இயற்கையை துன்பப்படுத்தினாலும், இயற்கை மனித இனத்திற்கு தனது பிரம்மாண்டத்தை காட்டும் முன் சில அறிகுறிகளை காட்டும்.

அந்த அறிகுறிகளை உணர்ந்தால் இயற்கையின் திருவிளையாடலில் சிக்காமல் இருக்கலாம். இயற்கையின் சைகையை புரிந்து கொள்ளவேண்டுமானால் மனிதன் தன்னை இயற்கையுடன் ஒன்றி இருக்கும்படியான விழிப்புணர்வு நிலையில் இருக்கவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் வரும் கிரகணங்கள் நமது பூமியில் நிகழும் இயற்கையான மற்றும் சமுக ரீதியான மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது.

(கிரகணத்திற்கும் பூமிக்கும் உள்ள தொடர்பை பற்றிய ஓர் பதிவை எழுதியிருக்கிறேன். கூடிய விரைவில் உங்கள் அறிவுக்கு விருந்தாகக் காத்திருக்கிறது.)

ஆனால் நாம் இங்கு பேச இருப்பது 2009 ஆம் ஆண்டு இயற்கை நமக்கு சொன்ன சில சைகைகளை பற்றியது.

சூரிய கிரகணம்:


26 ஜனவரி 2009 ஆம் ஆண்டு இந்திய நேரப்படி பகல் 1 மணி 29 நிமிடத்திற்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

நாசாவின் இணைய தள விவரம் : கிரஹணம்

எனது ஆய்வில் பூமியில் சூரிய கிரகணம் ஏற்படும் பகுதியும் அதன் எதிர் பக்கம் உள்ள பகுதியும் இயற்கை சீற்றத்தாலும், குழு மரணம் என சொல்லக்கூடிய பலர் இறந்து போவதற்கு காரணமாக இருக்கும்.

26ஆம் தேதி ஏற்படும் சூரிய கிரகணம் இந்தியாவின் தென்பகுதியிலும் , அமெரிக்காவின் கிழக்கு பகுதியையும் தொடுகிறது.

26ஆம் தேதியில் உள்ள கிரக நிலை மற்றும் பிப்ரவரி 13 வரை உள்ள கிரகங்கள்உலகின் பல அசம்பாவிதங்களுக்கு காரணமாக இருக்கப்போகிறது.

ஜோதிட ரீதியான ஆய்வு :

குரு அரசு மற்றும் அரசியல் நிலையை காட்டுகிறது. சூரியன் ஆட்சி மற்றும் உயர் பதவியில் உள்ள ஆட்சியாளர்கள் குறிக்கும். செவ்வாய் ராகு தீவிரவாதம் மற்றும் அசம்பாவிதங்களை காட்டுகிறது. மேற்கண்ட கிரகங்களானகுரு,சூரியன்,செவ்வாய்,ராகு என அனைத்தும் மகர ராசியில் இணைகிறது. குரு இந்த ராசியில் பொலிவிழந்து காணப்படுவார். இவர்களுடன் வக்ரமான புதன்மற்றும் கேதுவின் தொடர்பு வேறு.

சனி பொதுமக்களை குறிக்கும் கிரகம், சிம்மத்தில் உள்ள சனியை செவ்வாய், ராகுவுடன் இணைந்து தனது மோசமான பார்வையான 8ஆம் பார்வையால் பார்க்கிறார்.




இதனால் என்ன ஏற்படும்?

இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம் ஏற்படும். செயற்கை நிகழ்வான தீவரவாத தாக்குதல் ஏற்படும்.

தென்கிழக்கு ஆசியா,இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளில் கிரகண தாக்கம் இருப்பதால் இந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்படும்.

ஜூலை மாதம் 22ஆம் தேதி முழுசூரிய கிரகணம் ஏற்பட இருக்கிறது. ஜனவரியில்ஏற்படுவதை விட அதிகமான தாக்கம் ஜூலையில் உண்டு.

பேரழிவை தடுக்க முடியாதா?

ஜோதிடர்களான நீங்கள் பேரழிவை சொல்ல முடியுமா? என வீண் வாதம்செய்யும் முட்டாள்கள் நிறைந்த உலகம் இது. இங்கே பேரழிவை பற்றி நான்சொல்ல காரணம் என்னை விளம்பரப்படுத்த அல்ல. ஜோதிடத்தில் என்ன தான் கண்டறிந்தாலும் அதை தவிர்க்க முடியாது என கூறுவதற்கு தான்.

ஜனவரி 26 முதல் ஜூலை 22ஆம் தேதிவரை இருக்கும் இடைபட்ட காலத்தில் ஏற்படும் பேரழிவுகளுக்கு நம்மை தயார் படுத்திக்கொள்வோம்.

உங்கள் ப்ரார்தனைகளை துவக்குங்கள். பேரழிவை ஓரளவேனும் குறைக்க ப்ரார்த்தனை செய்வோம்.








இறைவா எங்களை காப்பாற்று....

9 கருத்துக்கள்:

ATOMYOGI said...

வணக்கம் ஸ்வாமிஜி!

இன்று சுவாரஸ்யமான பாடம் ஏதாவது இருக்கும் என்று வந்தால் பயப்படுத்துகிறீர்களே!!!!

ஸ்வாமிஜி ! இதற்கு முன் கிரகணங்கள் நிகழ்ந்த பொழுது ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததுண்டா?

எது எப்படியோ..... இறைவா எங்களை காப்பாற்று....

ezhil arasu said...

செவ்வாய் கிரக சிறுவனின் கூற்று உண்மையாய் விடுமா ஸ்வாமிஜி !

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.

திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோரின் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.

தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி எல்லோரையும் பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என எச்சரிக்கை செய்யவும் துவங்கினானாம்.

தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.

லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதையும், அதுகுறித்த படங்களைப் பார்த்து ஏதேனும் கருத்துக்களைச் சொல்வதும் என புல்லரிக்க வைக்கிறான் இந்தச் சிறுவன்.

லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.

இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம்.

உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.

இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

உலகில் நிகழும் அழிவு நிகழ்வுகளின் போது அவனை மாபெரும் வலியும், பதட்டமும், நிம்மதியின்மையும் அலைக்கழிக்கும் என அவனது தாய் கண்கள் பனிக்க சொல்கிறார்.

மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.

செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.

செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய் பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில் பார்த்தவை என்கிறான்.

பிரமிடுகளைக் குறித்து பேசும்போது, மக்கள் இப்போது நினைப்பது போல Cheops பிரமிடில் இருந்து பழங்கால வரலாறுகள் எதுவும் தெரிய வராது எனவும், அவையெல்லாம் இன்னோர் பிரமிடில் இருக்கிறது ஆனால் அந்த பிரமிட் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அவன் திகைக்க வைக்கிறான்.

செவ்வாயை நெருங்கும் போது ஏன் விண்கலங்கள் எல்லாம் எரிந்து விடுகின்றன என விஞ்ஞானிகளில் தலையைப் பிய்க்கும் கேள்வியைக் கேட்டனர். அதற்கு அவன், இந்த விண்கலங்களில் உள்ள கதிர்களெல்லாம் அவர்களைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் வேறு கதிர்களும், சமிச்ஞைகளும் அனுப்பி அவற்றை அழிக்கின்றனர் என்கிறான்.

விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிறான் இவன்.

உதாரணமாக,

விண்கலம் ஆறு அடுக்குகளைக் கொண்டது. மேல் பாகம் இருபத்து ஐந்து விழுக்காடு உறுதியான உலோகத்தால் ஆனது. இரண்டாவது அடுக்கு முப்பது விழுக்காடு ரப்பரால் ஆனது. மூன்றாவது அடுக்கு முப்பது விழுக்காடு உலோகத்தாலும், கடைசி அடுக்கு காந்தப் பொருட்களாலும் ஆனது. இந்தக் காந்தத்தில் விசையைச் செலுத்தினால் இந்த விண்கலம் பிரபஞ்சத்தில் எங்கே வேண்டுமானாலும் செல்லும் என்கிறான்.

இவனுடைய அலட்சியமான உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில் !

ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான் காரணம். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் நம்மை மன்னிக்கச் சொல்லி விண்ணப்பிக்க வேண்டும். என சாத்வீக ஆன்மீகவாதியாகிறான்.

இவன் சொல்வதில் எதை நம்புவது, எதை விடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் பல நிலைகளிலுமுள்ள மக்கள்.


தகவல்:-http://sirippu.wordpress.com/2008/03/11/indego_child/

கோவி.கண்ணன் said...

//26ஆம் தேதியில் உள்ள கிரக நிலை மற்றும் பிப்ரவரி 13 வரை உள்ள கிரகங்கள்உலகின் பல அசம்பாவிதங்களுக்கு காரணமாக இருக்கப்போகிறது.//

என்ன ஸ்வாமி இப்படி பயமுறுத்துறிங்க, பேங்குல உள்ள பணத்தை எல்லாம் எடுத்து செலவு பண்ணிவிடவா ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அணுயோகி உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு எழில் அரசு,

உங்கள் கருத்துக்களை வெகுவாக ரசித்தேன்.

உலகம் அழியப் போகிறது.எல்லோரும் கவனமாக இருங்கள் என சொல்ல வில்லை.

சில அசாம்பாவிதங்கள், குழு மரணம் என குறைந்த அளவே எற்படப்போகிறது. அதனால் பேரிழப்பு ஓர் சில நாடுகளுக்கு மட்டுமே தவர உலகத்திற்கே அல்ல.


உங்கள் பின்னூட்டத்தில் கூறிய விஷயங்கள் சுவாரசியமானவை. ரஷ்யர்கள் இது போன்ற விஷயங்களை அதிகம் பார்த்தவர்கள். நமக்கு தான் புதிது.

ஜெர்மனியை சேர்ந்த ஒரு இள வயது மாணவனுடன் நான் உரையாடினேன்.
அவன் வேதசாஸ்திரத்தை தெளிவாகவும், உரிய முறையிலும் உச்சரிக்கிறான். அவனின் பெற்றோர்கள் முன் ஜென்மத்தில் அவன் இந்தியாவில் சாஸ்த்திரம் கற்றவனாக இருப்பான் என்கிறார்கள்.

ஆனால் எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.

நமது மூளையின் செயல் பாட்டை பற்றிய ஆய்வு மெஞ்ஞான ரீதியாக நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் மூளை பிறள்வு நோய்க்கு ஆட்பட்டவர்கள் பெரும் அதிசயமாக தெரிவார்கள்.

கேட்ப்பவர்கள் கிடைத்தால் நானும் முன் ஜென்மத்தில் “சோதா” அக்பர் என சொல்லுவேன்.
(ஜோதா அல்ல :)) )

உங்கள் சுவாரசியத்தை மேலும் கூட்ட ஒரு சுட்டி இதோ,...

காந்த மனிதன்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவியாரே,

// என்ன ஸ்வாமி இப்படி பயமுறுத்துறிங்க, பேங்குல உள்ள பணத்தை எல்லாம் எடுத்து செலவு பண்ணிவிடவா ? //

அப்படி செய்தால் பாவம். சொர்க்கத்தில் இடம் கிடைக்காது.

எனது பேங்க் அக்கவுண்டில் அனைத்தையும் மாற்றவும்.

நீங்கள் செய்த பாவத்தை நான் போக்குகிறேன்.

கோவி கண்ணன் ஆவதற்கு முன் 429894 ஜன்மங்களில் ஏற்பட்ட அனைத்து பாவத்தையும் கழிக்கலாம்.

:))

நாமக்கல் சிபி said...

அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்!

இறைவா உலக உயிரினங்களைக் காப்பாற்று!

நாமக்கல் சிபி said...

//னது பேங்க் அக்கவுண்டில் அனைத்தையும் மாற்றவும்.

நீங்கள் செய்த பாவத்தை நான் போக்குகிறேன்.

கோவி கண்ணன் ஆவதற்கு முன் 429894 ஜன்மங்களில் ஏற்பட்ட அனைத்து பாவத்தையும் கழிக்கலாம்.
//

:))

கோவி,

பாதி அமவுண்டை என் சார்பாவும் டிரான்பர் செய்யவும்!

அவ்வளவு ஜென்மத்து பாவத்தைப் போக்கி என்ன பண்ணப் போறீங்க!

என் பாவங்களையும் போக்க உதவி செய்து புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள்!

Geekay said...

பயப்படுத்துகிறீர்களே!!!! ஸ்வாமிஜி !

இறைவா எங்களை காப்பாற்று....