Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Featured Posts

Monday, March 24, 2025

இலவச ஜோதிட பயிற்சி - ஸ்வாமி ஓம்கார் ஜோதிட வகுப்புகள்

நமது கலாச்சாரத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று ஜோதிடம். ஒரு தனிமனிதன் உணவு, உறைவிடம் மற்றும் உடை போன்ற அடிப்படைத் தேவைகளை அடைந்த பின்னர், தனக்குக் கிடைத்த வசதிகள் தொடர்ந்து நிலைக்குமா என்ற கேள்வி எழுகிறது. அந்தத் தருணத்தில்தான் ஜோதிடத்தின் தேவை உருவாகிறது.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, நமது கலாச்சாரம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, கலை மற்றும் கலாச்சார உயர்வில் திளைத்திருந்தது.அக்காலத்தில் ஜோதிடம் ஒரு செழிப்பான சாஸ்திரமாக விளங்கியது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்ட காலகட்டத்தில், ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கான நோக்கம் பலருக்கு இல்லாமல் போனது. ஆனால், மக்களின் தேவைகள் ஓரளவு பூர்த்தியான பின்னர், ஜோதிட சாஸ்திரத்தின் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.


ஜோதிடம் என்றும் நிலைத்திருக்கும் ஒரு சாஸ்திரமாக இருந்தாலும், கடந்த நூற்றாண்டில் மக்களுக்கு ஜோதிடக் கல்வி என்பது அன்னியமாகவே இருந்தது. அதைக் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கும் வசதிகள் இல்லாத நிலை நீடித்தது.


கடந்த 25 ஆண்டுகளாக, ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை ஜோதிடப் பயிற்சியை வழங்கி வருகிறது. இனம், நிறம், பாலினம் போன்ற எந்தவித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல், ஜோதிடம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்தக் கல்வி வழங்கப்படுகிறது.


ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று, ஜோதிடத்தைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, வட இந்திய மாநிலங்கள், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மலேசியா, ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற நாடுகளிலும் உள்ள மாணவர்கள் ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் மூலம் பயிற்சி பெற்று, ஜோதிடத்தைப் பரப்பி வருகின்றனர்.
 

ஜோதிட அடிப்படைப் பயிற்சி கடந்த சில வருடங்களாக நேரடிப் பயிற்சியுடன், ஆன்லைன் பயிற்சியும் நடைபெறுகிறது. யூடியூப் தளத்தில் அனைத்து வகையான அடிப்படை ஜோதிடப் பயிற்சிகளும் இலவசமாகக் கிடைக்கின்றன.
யூடியூப் சேவையின் மூலம், நீங்கள் ஜோதிடப் பயிற்சியைப் பெற விரும்பினால், உங்கள் இடத்தில் இருந்தே ஆழமான ஜோதிடப் பயிற்சியைப் பெற முடியும். அதற்கான இணைப்பை இங்கே தருகிறேன்:
 

உயர் நட்சத்திர ஜோதிடம் - பன்னிரண்டு வகுப்புகள் (YouTube Link)

 

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12


ஜோதிட அடிப்படைப் பயிற்சியில், கிருஷ்ண மூர்த்தி பத்ததி என்ற ஜோதிட முறையும், நாடி ஜோதிட முறையான சாயா நாடியும் பயிற்சியாக அளிக்கப்படுகிறது.
 

நாடி ஜோதிட முறையான சாயா நாடி ஜோதிடப் பயிற்சி, ஆழ்ந்த ஜோதிட அறிவு இல்லாதவர்களுக்கும் எளிமையாகக் கற்று பலன் கூறுவதற்கு உதவுகிறது. அதிகமான சூட்சமங்கள் இல்லாமல் பலன் கூறும் தன்மையே சாயா நாடியின் சிறப்பம்சமாகும்.
 

சாயா நாடியைக் கற்றுக்கொள்ள, யூடியூப் இணைப்பை இங்கே தருகிறேன்:
 

சாயா நாடி ஜோதிடப் பயிற்சி - YouTube Link
 

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

மூன்று வீடியோக்களில் நீங்கள் முழுமையாக சாயா நாடியைக் கற்று, பலன் கூறும் திறனைப் பெற முடியும். அடிப்படை ஜோதிட சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, தனித்துவமான துறைகளில் ஜோதிடத்தைப் பயன்படுத்தும் வகையில் உயர் வகுப்புகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் மருத்துவத் துறையைச் சார்ந்தவராக இருந்தால், அடிப்படை ஜோதிடம் படித்த பிறகு, மருத்துவ ஜோதிடத்தைக் கற்றுக்கொண்டு, உங்கள் துறையில் ஜோதிடத்தைப் பயன்படுத்தலாம்.


ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை வழங்கும் உயர் துறை சார்ந்த ஜோதிட வகுப்புகளின் தலைப்புகளை இங்கே தருகிறேன்

 

  1. மருத்துவ ஜோதிடம்
  2. முண்டேன் ஜோதிடம்
  3. பங்குசந்தை ஜோதிடம்
  4. ஆன்மீக ஜோதிடம்
  5. கட்டடக்கலை ஜோதிடம்
  6. கேரள ஜோதிடம்
  7. கல்வியியல் ஜோதிடம்
  8. முஹூர்த்த ஜோதிடம்
  9. திருமணப் பொருத்தம்
  10. பிரசன்ன ஜோதிடம்
  11. வேளாண்மை ஜோதிடம்
  12. தொழில் முறை ஜோதிடம்
  13. உயர்நிலை ஜோதிடம்

அடிப்படை ஜோதிடம் கற்ற பிறகு, உங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து, நேரடி அல்லது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். பயிற்சி நடைபெறும் தகவல்களை எங்கள் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுவில் இணைந்து தெரிந்துகொள்ளலாம்.

 

ஜோதிட கூடல்
 

பயிற்சி முடிந்த பிறகும், ப்ரணவ பீடம் அறக்கட்டளை நடத்தும் ஞாயிறு ஜோதிட கூடல் என்ற ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த ஜோதிட கூடல், கற்று முடித்த மாணவர்களுக்கான கூட்டமாகும். இதில் ஜாதக ஆய்வு மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஞாயிறு ஜோதிட கூடல் என்பது முற்றிலும் இலவசமாக நடைபெறும் நிகழ்வாகும். இதில் எந்தவித இணைய கட்டணங்களும் இல்லை. இந்த ஜோதிட கூடல் நிகழ்வு கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


உயர் வகுப்புகள் மற்றும் அடிப்படை வகுப்புகளில் கலந்துகொள்ளவும், அது பற்றிய தகவல்களைப் பெறவும், டெலிகிராம் மூலம் எங்களுடன் இணையுங்கள்.

* டெலிகிராம் குழு *

ஏப்ரல் 2025 முதல் பல்வேறு ஜோதிடப் பயிற்சிகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளன. உங்களை இணைத்துக்கொள்வதன் மூலம், சிறந்த ஜோதிடப் பயிற்சி முறைகள் வழியாக, ஜோதிட சாஸ்திரத்தின் அனைத்து பரிமாணங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

Friday, November 22, 2024

மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு

 

மஹா கும்பமேளாவிற்கு வருகை தருவதற்கு பலர் விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள். முன்பு முன்பதிவு செய்த ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை சார்ந்தவர்களுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து கும்பமேளா வருவதற்கு விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் திருயாத்திரை குழுவினர் முயற்சிகள் எடுத்துவருகிறார்கள். 

மஹா கும்பமேளா யாத்திரைக்கு வருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட தகவல் புத்தகத்தை படித்து உங்களின் விருப்பமான நாட்களை தேர்வு செய்யவும். மேலும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடக்க உள்ளதால் அதன்படி உங்களின் பயணத்தை தேர்வு செய்யவும். 

மேலும் தகவல் வேண்டும் என்றால் கையேட்டில் கொடுக்கப்பட்ட 

தத்த நாத் 98401 87486 | தாரா நாத் 98407 48890 ஆகியோரை தொடர்புகொள்ளவும்.


கும்பமேளா 2025 கையேடு 

 மஹா கும்பமேளா உங்களை ஆன்மீகத்துடன் வரவேற்கிறது.

Thursday, October 31, 2024

மஹா கும்பமேளா 2025 - வருக வருக என வரவேற்கிறோம்

ஆன்மீகப் பெருநிகழ்வான மஹா கும்பமேளாவிற்கு அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம். பல பகுதிகளாக கும்பமேளா என்ற நிகழ்வின் முக்கியத்துவத்தைப்  பற்றித் தெரிந்துகொண்டோம். 

ஆதிநாதரின் அருளுடன் கும்பமேளாவில் உங்களை இணைத்துக்கொண்டு வாழ்வின் பெரும் உன்னதமான அனுபவங்களைப் பெறுவதற்கு தயாராகி விட்டீர்களா?

நடக்க உள்ள மஹா கும்பமேளாவைப் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். 

உத்ராயண கால ஆரம்பம் என்று கூறப்படும் ஜனவரி 13ஆம் தேதி 2025ஆம் ஆண்டில் மஹா கும்பமேளா தொடங்குகிறது. 26 பிப்ரவரி 2025ல் நிறைவு பெறுகிறது. 

மஹா கும்பமேளா 45 நாட்கள் நடைபெறும் நிகழ்வாகும். இவற்றில் முக்கியமான புனித ஸ்நான நாட்கள் எது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

மஹா கும்பமேளா காலகட்டத்தில் வரும் பெளர்ணமி மற்றும் அமாவாசை நாட்கள் மிகவும் முக்கியமான ஸ்நான நாட்களாகும். இது தவிர பஞ்சமி, சப்தமி, ஏகாதசி ஆகிய நாட்கள் மிக முக்கியமானவை.

ஜனவரி 13 - தை பெளர்ணமி

ஜனவரி 14 - மகர சங்கராந்தி - தை 1 

ஜனவரி 29 - அமாவாசை (தை அமாவாசை)

பிப்ரவரி 3 - வசந்த பஞ்சமி

பிப்ரவரி 4 - சப்தமி

பிப்ரவரி 12 - மாசி பெளர்ணமி

புனித ஸ்நான நாட்கள் எப்பொழுதும் கூட்டம் மிகுந்த நாட்கள். 2013ஆம் ஆண்டு அமாவாசை ஸ்நானத்திற்கு ஆறு கோடி மக்கள் ஒரே நேரத்தில் குழுமி இருந்தார்கள் என புள்ளிவிபரம் கூறுகிறது. புனித ஸ்நான காலத்தையும் பிற நாட்களையும் நமது வசதிக்கு ஏற்பத் திட்டமிடுவது நல்லது.

கும்பமேளா காலத்தில் கங்கை-யமுனை -சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் சங்கமத்தில் கூடாரம் அமைத்து அனைவரும் தங்குவார்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் என்பதால் நதிகளில் நீர் ஓட்டம் குறைவாக இருக்கும். நீர் குறைந்த ஆற்று மணலில் தற்காலிகக் கூடாரம் அமைத்துத் தங்கும் வசதிகள் செய்யப்படும்.

இந்திய ராணுவத்தின் உதவியுடன் தற்காலிக சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்படும். இத்தகைய தற்காலிக வசதிகள் குறைந்த பட்சம் பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செய்யப்படும். தற்சமயம் உத்தரபிரதேச அரசு பல்வேறு நவீன வசதிகளைச் செய்துவருகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அர்த்த கும்பமேளாவில் அதிநவீன கழிப்பிட வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. அதனால் 2025 மஹா கும்பமேளாவிலும் சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை தனிமனித ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ப்ரணவ பீடம், வரும் மஹா கும்பமேளா நிகழ்விலும் நீங்கள் கலந்து கொள்ளும் வகையில் ஒருங்கிணைக்கிறது. 

புறச்சூழலில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் அக உலகில் ஆன்மீக உயர்நிலைக்கு உயர்த்தும் நோக்கிலும் ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை மஹா கும்பமேளா பயணத்தை ஒருங்கிணைக்க இருக்கிறது. முக்கிய ஸ்நான தினங்களில் சிறப்பாக நீராட வழிகாட்டுகிறது. மேலும் ஜபம், தியானம் மற்றும் ஆன்மீக வாழ்வியல் முறையில் தங்குமிடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற பூர்ண கும்பமேளாவிலும் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற அர்த்த கும்பமேளாவிலும் சிறப்பாக ஒருங்கிணைத்த அனுபவம் கொண்ட ப்ரணவ பீடம் 2025ஆம் ஆண்டுக்கான செயல் திட்டங்களில் தயாராக உள்ளது.

மஹா கும்பமேளாவில் என்ன நிகழ்ச்சிகள் நடைபெறும்?

ப்ரணவ பீடம் அறக்கட்டளையின் கூடாரத்தில் தினமும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். யாகங்கள், பஜன், தியானம் மற்றும் சத்சங்கம் ஆகியவை நடைபெறும். அந்த சூழலில் ஸ்வாமி ஓம்கார் அவர்களுடன் கலந்து கொண்டு நீங்கள் நாத பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ள ஆன்மீக வாழ்வியல் முறையை உணரலாம். 

மஹா வித்யா என்கிற பத்து சக்திகளின் உபாசனையை ஆன்மீக உச்சம் கொண்ட சூழலில் தீக்‌ஷையாக பெறலாம். ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்குபவர்கள் மந்திர தீக்‌ஷை பெற்று உயர் ஆற்றல் கொண்ட மஹா கும்பமேளாவில் இருந்து தங்களது ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கலாம். 

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் வழிகாட்டுதலில் பல்வேறு தீக்‌ஷைகள் மற்றும் ஆன்மீக அனுபவங்களைப் பெற்று இறையாற்றலை உணரும் நோக்கில் மஹா கும்பமேளா 2025 செயல்பட இருக்கிறது.

ஆன்மீக குருவின் அனுக்கம், மஹா கும்பமேளா சூழல் போன்ற பல்வேறு விஷயங்கள் மீண்டும் இது போன்று  நடக்க வாய்ப்பு உண்டா? இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். 

மஹா கும்பமேளாவில் என்ன வசதிகள் உண்டு?

அந்தச் சூழலில் மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் தங்கி மஹா கும்பமேளாவை உணரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

அடிப்படை தங்கும் வசதிகள், உணவு மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதற்கான சூழல் அமைக்கப்பட உள்ளது. எளிமையான கட்டணத்தில் தங்கும் வசதிகளும் உணவும் அளிக்கப்படுகிறது. 

ஆயிரக்காணக்கான ஆன்மீக நபர்கள் கூடும் இடம் என்பதால் அங்கே பல தர்ம காரியங்கள் செய்வதற்கும் அன்னதானம் செய்வதற்கும் நமது ஆன்மீகக் குழு தயராக உள்ளன.

நீங்களும் நம்மில் ஒருவராக இணைந்து தன்னார்வத் தொண்டு செய்யலாம். 

மஹா கும்பமேளாவில் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

முன்பதிவு செய்து தேர்ந்து எடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ப்ரணவ பீடம் ஒருங்கிணைக்கும் சூழலில் செயல்பட முடியும். இத்தகைய ஏற்பாடுகள் அதிக கூட்டத்தைத் தவிர்ப்பதற்கும் சுற்றுலா நோக்கில் வருபவர்களுக்கான இடம் இது அல்ல என்பதாலும் அவசியமாகிறது. 

கீழ்கண்ட கூகுள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் நவம்பர் மாத இறுதிக்குள் உங்களுக்கு தனித்தகவலில் நீங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளீர்களா என்பதை தெரியப்படுத்துவோம்.

விண்ணப்ப படிவம் - https://forms.gle/enjC2KPQTXpgvp1h6

மேலும் 2025 மஹா கும்பமேளாவில் இணைவது தொடர்பான கேள்விகள் உங்களுக்கு இருந்தால் கேளுங்கள். பதில் அளிக்கத் தயாராக உள்ளோம். கும்பமேளாவில் பங்கு பெறுவது பற்றிய தொலைபேசி தொடர்புக்கு

9944 1 333 55, 98401 87486 , 94435 38751, 98408 00704

ஆதி நாதரின் அருள் கடலில் சிறு மீனாக நீந்திக் களிக்க அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்.


Tuesday, July 30, 2024

கும்பமேளா 2025

சரஸ்வதி நதியின் கலாச்சாரத்தில் இயல்பான மனிதர்களைவிட உயர் சக்தி கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். உணவு, உடை மற்றும் வாழ்வியல் முறை ஆகியவற்றில் அவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு இருந்தது. அவர்களிக்கு மெய்ஞானம் சார்ந்த அறிவு எப்படி உருவானது என்ற கேள்விக்கு ஆதிநாத் என்பதே பதிலாக இருக்கும்.

உலகம் உருபெற்ற காலம் தொட்டு மனித இனத்தின் மேம்பட்ட பரிமாணத்திற்காக இறையாற்றல் உருபெற்று வந்து வழி நடத்துகிறது. அடிப்படை மனித நிலையில் இருந்து உயர்மனித நிலைக்கு முன்னேற்றம் செய்ய குருவாக இருந்து பல்வேறு தூண்டுதல்களை செய்கிறது.

வேத காலத்தில் சரஸ்வதி நதியின் கரையில் வாழ்ந்து வந்தவர்களை ஆன்மீகத்தில் செலுத்தி மனித நிலையிலிருந்து உயர் மனித நிலைக்கு உயர்த்தினார் ஆதிநாத்.

இவர் யார் இவரின் பின்புலம் என்ன என்பது தெரியாது. முதலில் தோன்றியவர் என்பதால் ஆதிநாத் என அழைக்கப்பட்டார். இவருடன் இருந்த பிரதான சீடராக இருந்தவர் உமாநாத். எப்பொழுதும் உடன் இருப்பவர் என்பதால் உமா என அழைக்கப்பட்டார். இருவரும் இணைந்து பலர் ஆன்மீக விடுதலை பெறுவதற்கு காரணமாக இருந்தனர்.

இருவரும் உருவாக்கிய பாரம்பரியம் நாத பாரம்பரியம் எனப்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒன்றிணைந்து இவர்களின் வழிகாட்டுதலில் ஆன்மீக உயர்நிலையை அடைந்தார்கள். சன்யாசிகள், துறவிகள் என்ற கருத்தியல்கள் அப்பொழுது இல்லை. குடும்ப அங்கத்தினர்கள் என்றே அவர்கள் அழைக்கப்பட்டனர்.

குழந்தை முதல் முதியவர் வரை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஆன்மீக நிலையில் இருந்தனர். விழிப்புணர்வுடன் வாழ்ந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் முழுமையான விழிப்புணர்வுடனேயே பிறந்தன. சிறப்பான குடும்பங்கள் ஒன்றிணைந்து வேதகால வாழ்க்கையை வாழ்ந்தனர். குல வாழ்வியல் முறை என இதற்கு பெயர்.

உமாநாத் வழிகாட்டுதலில் ஒளி பொருந்திய பரிமாணத்திற்கு பலர் சென்றார்கள். உலகில் வாழ்ந்தாலும் உடல் கடந்து ஆற்றல் நிலையில் வாழும் பரிமாணத்தை பலருக்கு உமாநாத் அளித்தார்.

குலாதிபதி என குலத்திற்கு அதிபதியான ஆதிநாத் வேத அறிவை அனைவருக்கும் கிடைக்கச்செய்ய பைரவ நிலையை பெற்று உமாநாதரை பைரவியாக்கி அனைவரையும் உச்சம் பெற்ற விழிப்புணர்வில் வைத்திருந்தார்கள்.

மனித குலம் ஆணவத்தால் உரைந்து போகும் தருணத்தில் அவர்கள் உண்மையை உணரச்செய்ய ஓவ்வொரு காலத்திலும் ஆதிநாத் மனித உருவில் வருகிறார். உமாநாத் உடன் இருக்கிறார் என்பது நாத பாரம்பரியத்தின் வரலாறு. காலத்திற்கு ஏற்ப ஆதிநாத் என்ற அடையாளமும் பெயரும் மாறுமே தவிர அவரின் இறை நோக்கம் மாற்றம் அடையாது.

இமய மலையில் துவங்கி தற்காலத்தில் இமாச்சல பிரதேசம் என அழைக்கப்படும் இடத்தில் அதிகரித்து, ராஜஸ்தானின் கிழக்கில் பிரவாகமாகி விரிவடைந்து குஜராத்தில் கடலில் கலந்தது சரஸ்வதி நதி.

குல மார்க்கம் என்ற தன்மையில் அனைவரும் சரஸ்வதி நதி நாகரீகத்தில் இணைந்து செயல்பட்டு சரஸ்வதி நதியை ஆன்மீக கருவியாக்கினார்கள். ஆன்மீக உச்ச நிலையில் அங்கே வாழ்ந்த அனைவரும் வேறு ஒரு பரிமாணத்திற்கு பைரவி தன்மையில் இருந்த உமாநாத் மூலம் மாற்றம் அடையும் தருணம் ஏற்பட்டது.

அப்பொழுது சரஸ்வதி நதி நாகரீகத்தில் வசித்த அனைவரும் உயர் பரிமாணத்திற்கு மாறும் பொழுது சரஸ்வதி நதியும் அந்த பரிமாணத்திற்கு சென்றது. நமது உலகில் இருந்து சரஸ்வதி நதி காணாமல் போனது. அதன் அருகே இருந்த சரஸ்வதி நதி நாகரீகத்தின் எஞ்சிய தன்மைகள் இடப்பெயர்ச்சி அடைந்து காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் மகாராஷ்ட்ரம் வரை விரிவடைந்து கன்யாகுமாரி வரை புகழ் பெற்றது. அத்தகைய நாகரீகம் நாத பாரம்பரியம் என அழைக்கப்பட்டது.

உலக கால சக்கரத்திற்கும் உயர் பரிமாண சக்கரத்திற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிய வேண்டும்.  பைரவர் மற்றும் பைரவி இருக்கும் உயர் பரிமாணத்தில் ஒரு நாள் என்பது உலகில் நமக்கு பன்னிரெண்டு வருடங்களுக்கு சமம் என கணக்கிடலாம்.



ஆதிநாதரும் உமாநாதரும் தங்களின் இருப்பை தினமும் நமக்கு உணர்த்தினாலும் நம்மால் அதை பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உணர முடியும். அத்தகைய காலத்தையே மஹா கும்பமேளா என்கிறோம்.

மஹா கும்பமேளா நடக்கும் தருணத்தில் உயர் பரிமாண நிலையில் இருந்து சரஸ்வதி நதி நமது பரிமாணத்தில் வெளிப்படுகிறது. சரஸ்வதி நதி நாகரீகத்தை பிரதிபலிக்கும் குல வாழ்வியல் முறை மற்றும் சரஸ்வதி நதி ஆகியவை மஹா கும்பமேளாவில் வெளிப்படுகிறது. சரஸ்வதி நதி அப்பரிமாணத்தின் ஆன்மீக ஊற்றாக பெருகி நம் பரிமாணத்தில் நீராக காட்சி அளிக்கிறது. குரு, ஆன்மீக சதனா, சாஸ்திரங்கள் என பல மெய்யறிவை நதியாக கும்பமேளாவில் பெருகச்செய்கிறது.

ஆதிநாதரும் உமா நாதரும் தங்களின் ஆன்மீக ஆற்றல் வடிவமாக ஒவ்வொரு நாளும் இணைகிறார்கள். நமக்கு மஹா கும்பமேளா பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை நடக்கிறது. உயர் பரிமாணத்தில் தினமும் நடக்கும் நிகழ்வாக மஹா கும்பமேளா இருக்கிறது.

ஆதிநாதரின் பரிமாணத்தில் தினமும் அதிகாலை நடைபெறும் முதல் நிகழ்வு மஹா கும்பமேளாவாகும். அப்பரிமாணத்தின் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வே பிற கும்பமேளாவாகும்.

இரு பரிமாணங்கள் எனப்படும் ஆற்றல் உலகுக்கும் பூமி எனும் நம் உலகுக்கும் இருக்கும் தொடர்பை முழுமையாக புரிந்துகொண்டால் மட்டுமே கும்பமேளாவை புரிந்துகொள்ள முடியும். இல்லை எனில் மேற்கத்திய கல்வியை படித்தவர்கள் அழுக்கானவர்கள் கூட்டமாக கூடும் நிகழ்வாக மட்டுமே பார்ப்பார்கள்.


 

உயர்பரிமாணம் அருவி போல இறங்கி பிரவாகமாக செயல்படும் மஹா கும்பமேளா என்ற நிகழ்வுக்கு ஞானிகளும், முனிவர்களும், யோகிகளும் ஏன் ஓடோடி வருகிறார்கள் என புரிகிறதா? இது சாதாரண திருவிழாவிற்கு கூடும் கூட்டமல்ல என்பதையும் உணர வேண்டும்.

பேராற்றல் இணையும் இத்தகைய இடத்திற்கு கோவில் அவசியமா? சடங்குகள் அவசியமா என கேள்வியை நாமே கேட்டு பதில் அளிக்கலாம்.


ஆதிநாத ஆற்றலும் நாத பாரம்பரியத்தின் விழிப்புணர்வும் பொங்கி பெருகும் மஹா கும்பமேளாவில் கலந்துகொள்ள நீங்கள் தயாரா?

ஆம் என்றால் அதற்கான தகவல்களை அளிக்கிறேன்.

(தொடரும்)