படைத்தல் என்ற ஒரு தொழில் உலகின் இயக்கத்திற்கு அடிப்படையானது. பூரணத்திலிருந்து தோன்றும் அனைத்தும் பூரணமாகவே இருக்கிறது என்றது உபநிஷ்த். அது போல இறை நிலை நம்மை உருவாக்கிய காரணத்தால் நமக்குள்ளும் உருவாக்கும் தன்மை இருக்கிறது.
மனிதனை தவிர பிற உயிர்கள் ஒன்றிணைவது அதை போன்றே மற்றொரு உயிரை தோற்றுவிக்க மட்டும் தான். ஆனால் மனிதன் இன்பம் கருதியும், குழந்தை பிறப்பு என இரு வேறு காரணத்தால் ஒன்றிணைகிறார்கள்.
இந்திய கலாச்சாரம் காமம் மற்றும் திருமணம் ஆகியவைகளை தனிமனிதன் சம்பந்தப்பட்ட விஷயமாக கருதுகிறது. ஆனால் குழந்தை பிறப்பு சமுதாயம் சம்பந்தமான விஷயமாக கருதுகிறது.
இருவர் இன்பத்திற்காக இணையும் பொழுது சமூகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக இணைந்தால் அந்த குழந்தை எதிர்காலத்தில் சமூகத்தில் ஏதேனும் தாக்கத்தை உண்டு செய்யும். அதனால் குழந்தை பிறப்பை இருவர் முடிவு செய்ய கூடாது என்கிறது.
சாஸ்திரம். குழந்தை பிறப்பை - கர்ப்ப தானம் என கூறி சமூக நிகழ்வாகவே கொண்டாடுகிறது. குழந்தை பிறப்பை மனிதனின் முழுபரிமாணமாகவும், உயர் செல்வமாகவும் நம் சமுதாயம் கருதியது.
அஷ்ட செல்வம் என கருதுவதில் தனம், தான்யம் போன்ற வரிசையில் சந்தானம் என்பதையும் வைத்தது நம் சாஸ்திரம்.
ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிகாசங்கள் குழந்தை பிறப்பு என்ற மிக முக்கியமான நிகழ்வுகளை உள்ளடக்கியது. இவற்றை வரும் பகுதிகளில் விரிவாக பார்ப்போம்.
இத்தகைய முக்கியத்துவம் மிக்க குழந்தை பிறப்பு விகிதம் சமீபகாலத்தில் குறைந்து வருகிறது.
இயற்கையான முறையில் குழந்தை பேறு கொண்ட சமூகம் தற்சமயம் கருதரித்தல் மைய வாசலில் காவல் கிடக்கிறது.
உலகில் 1977 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களில் பத்தில் நான்கு நபர்களுக்குத் தான் குழந்தை பிறப்பு நிகழும் தன்மை உண்டு. வாழ்வியல் தவறுகள் மற்றும் இயற்கையிலிருந்து வேறுபட்ட சூழலால் மலட்டு தன்மை அதிகரித்து வருகிறது.
மழலை சொல் கேட்காதவர் புல்லாங்குழல் மற்றும் யாழின் இசையை அருமை என கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர். நவீன் நாகரீகமும் வாழ்வியலும் இப்படியே சென்றால் குழலும் யாழும் மட்டுமே இனிக்கும், மழலை என்பதை கேட்க முடியாது..!
இதற்கு நான் ஏன் தொடர் எழுத வேண்டும்?
நம் சாஸ்திரத்தில் எளிய முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் இருக்க, அதை விடுத்து நவீன மருத்துவத்தில் ஹார்மோன் சிகிச்சையாலும், பிற வழிமுறையாலும் தங்கள் உடலையும் வாழ்க்கை தரத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள் என்பது நிதர்சனம். ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் கெடுத்துக்கொள்ளாமல் சிறந்த குழந்தையை பெற்று சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கும் தன்மையையே குழல் இனிது யாழினிது கட்டுரை விவரிக்கப்போகிறது.
(கரு உருவாகும்..)






